9 வாரங்கள் தொடர்ந்து இதை செய்தால் சொந்த வீடு கனவு நிறைவேற தானாக வழி பிறக்கும். அதோடு நிலம் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

murugan
- Advertisement -

செவ்வாய் கிழமை என்பது முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுள் முருகன். முருகப் பெருமானை வழிபடுவதற்கு மூன்று விசேஷம் பொருந்திய தினங்கள் உள்ளன. வார வழிபாடு என்றால் செவ்வாய்க்கிழமை அன்றும், நட்சத்திர வழிபாடு என்றால் கிருத்திகை நட்சத்திரம் அன்றும், திதி வழிபாடு என்றால் சஷ்டி தினத்தன்றும் முருகப்பெருமானை தொழுது வருவதால் நன்மைகள் பல கிடைக்கின்றன. அதேபோல் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவதற்கு செவ்வாய்க்கிழமையில் இந்த விசேஷ தீபமேற்றி முருகப்பெருமானை வழிபட்டு வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Lord Murugan

செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செய்யும் வெற்றிலை தீப வழிபாட்டின் நன்மைகள்:
வெற்றிலை தீபம் ஏற்றுவதால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கின்றன. நினைத்த காரியங்கள் கை கூடி வருகின்றன. முக்கியமாக செவ்வாய்க்கிழமையில் இந்த வெற்றிலை தீபம் ஏற்றுவதால் நிலப் பிரச்சனைகள் தீர்ந்து நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

செவ்வாய்க்கு பூமிகாரகன், மங்கள காரகன் என்ற பெயர்கள் உண்டு. எனவே செவ்வாய்க்கிழமை அன்று வெற்றிலை தீபம் ஏற்றி முருகப் பெருமானை வேண்டிக் கொள்வதால் நிலம் வாங்குவது, விற்பது என்பதில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது தீர்ந்து விடும். அதேப்போல் புது வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் விரைவில் நிறைவேறும், அல்லது இருக்கும் இடத்தில் புது வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதுவும் நிறைவேறும்.

Lord Murugan Vel

வெற்றிலை தீப வழிபாட்டு முறை :
முருகப்பெருமானின் திருவுருவ படம் அல்லது விக்ரகம் இவற்றில் ஏதேனும் ஒன்றினை எடுத்து அதை சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். படத்திற்கு வாசனை நிறைந்த மலரினை வைக்கவேண்டும். இந்த பூஜையை கிழக்கு திசை மற்றும் வடக்கு திசையில் செய்யலாம்.

- Advertisement -

அடுத்ததாக காம்புடன் கூடிய 6 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலைகள் அழுக்காகவோ, கிழிந்தோ இருக்க கூடாது. வெற்றிலையில் உள்ள காம்புகளை கில்லி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெற்றிலையின் நுனியில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.

vetrilai-deepam

பிறகு ஒரு தாம்பூலத்தட்டின் மீது 6 வெற்றிகளையும் விசிறி வடிவத்தில் பரப்பி வைக்க வேண்டும். பின்னர் ஒரு அகல் விளக்கினை எடுத்து அதற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து அதை வெற்றிலைகளின் மீது நடுவே வைக்க வேண்டும். பிறகு அகல் விளக்கினுள், எடுத்து வைத்த வெற்றிலை காம்புகளை போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபமேற்ற வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றி மனதில் உங்களுக்குத் தேவையானவற்றை கேட்டு முருகப்பெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும்.

vetrilai-deepam1

அகல் விளக்கின் உள்ளே வெற்றிலை காம்புகளை போட்டு தீபம் ஏற்றுவதால் அதிலிருந்து வரும் நறுமணமும், வெற்றிலையின் மீது உள்ள அகல்விளக்கின் சூட்டினால் வெற்றிலையில் இருந்து வரும் நறுமணமும் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். இந்த நறுமணத்தின் மகிமையால் முருகப் பெருமான் மனமகிழ்ந்து உங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொடுப்பார். இந்த வெற்றிலை தீப வழிபாட்டினை 9 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.

- Advertisement -