கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை, உங்களுக்கே தெரியாமல், உங்கள் கையை நழுவி செல்லும். 27 வாரங்களில் பலன் தரும் சக்தி வாய்ந்த ஹனுமன் பரிகாரம்.

hanuman
- Advertisement -

கடன் பிரச்சினை நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷத்தை முழுமையாக அழித்து விடும். வாய்விட்டு சிரிக்க கூட முடியாத அளவிற்கு சில பேருக்கு கடன் தொந்தரவு இருக்கும். கடன் சுமையை இறக்கி வைக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு, சுலபமான முறையில் சொல்லப்பட்டுள்ள ஒரு ஆன்மீக ரீதியான பரிகாரம் தான் இது. இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நமக்குத் தெரியாமலேயே நம்முடைய கடன் படிப்படியாக குறையத் தொடங்கும். நமக்கு தெரியாமல் என்றால், நமக்கு பதிலாக வேறு யாராவது ஒருவர் நம்முடைய கடனை அடைத்து விடுவார்களோ? அப்படி கிடையாது. கஷ்டப்படாமல் நம்முடைய கடன் பாரம் குறையும். கையை விட்டு கடன் நழுவிச் செல்லும். அப்படிப்பட்ட ஒரு சக்திவாய்ந்த பரிகாரம் தான் இது.

உங்களுடைய கடன் தொகையைப் பொறுத்து சில நாட்களிலேயோ, சில வாரங்களிலேயோ, சில வருடத்திலேயே கடன்சுமை குறைந்து நீங்கள் பெருமூச்சு விட்டு உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ தொடங்குவீர்கள். நிச்சயமாக உங்கள் வாழ்வில் நிம்மதி பிறக்கும். இந்த பரிகாரத்தை சிரமப்படாமல் நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில்.

- Advertisement -

வெற்றிலை மாலையை அனுமனுக்கு சாத்தினால் வெற்றி நிச்சயம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். கடன் தீர வெற்றிலை மாலையை சனிக்கிழமை தோறும் அனுமனுக்கு சாத்தி வழிபாடு செய்ய வேண்டும். இதில் என்ன சிறப்பு. வெற்றிலை மாலையை அனுமனுக்கு சாத்தினால் கஷ்டங்கள் குறையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தானே.

butter-vennai

இதில் ஒரு சூட்சமம் மறைந்துள்ளது. 27 வெற்றிலைகளை வாங்கிக் கொள்ளுங்கள். வெண்ணையையும் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆள்காட்டி விரலால் தொட்டு 27 வெற்றிலைகளுக்கு நடுவிலும் உங்களது கடன் தொகையை எழுத வேண்டும். எவ்வளவு கடன் உங்களுக்கு இருக்கின்றதோ, அந்த கடன் தொகையை வெற்றிலையில் எழுதி விடுங்கள்.

- Advertisement -

நீங்கள் எழுதும் கடன் தொகை கண்ணுக்கு தெரிய வேண்டும் அழகாக இருக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. ஏனென்றால் வெண்ணையில் எழுதுவது அவ்வளவு சுலபமல்ல. முடிந்தவரை வெண்ணையில் தொட்டு உங்கள் கைகளால் வெற்றிலையின் மேல் அந்த தொகையை எழுதி வைத்துவிட்டால் போதும். அதன் பின்பு அந்த வெற்றிலையை அப்படியே சுருட்டி மாலையாக தொடுத்து விடவேண்டும். 27 வெற்றியில்களிலும் உங்களது கடன் தொகை இருக்க வேண்டும். வெண்ணை எப்படி வெற்றிலையில் ஒட்டாமல் நழுவி செல்கிறதோ, அதே போல் அந்த கடன் தொகை உங்களிடம் ஒட்டாது. உங்களை விட்டு நழுவி சென்றுவிடும்.

vetrilai-kodi

இதேபோல் 27 வாரமும் வெற்றிலை மாலைகளைத் தொடுத்து ஹனுமன் கோவிலுக்கு சென்று இந்த வெற்றிலை மாலையை அனுமனுக்கு சாரதி உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். மனதார, கடன் கரைந்து போக வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இதை செய்து வந்தாலே போதும். உங்களுடைய கடன் உங்கள் கையை விட்டு உங்களை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக நழுவிச் செல்லும்.

kadan

எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் என்ற கஷ்டம் உங்களுக்கு தெரியாது. எப்படி கடனை தொகையை படிப்படியாக குறைதீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாது. ஆனால் கடன் மட்டும் உங்களுக்கே தெரியாமல் படிப்படியாகக் குறையத் தொடங்கும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயமாக இந்த பரிகாரம் நல்ல பலனைக் கொடுக்கும் என்று கருதி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -