பாரமாக இருக்கக் கூடிய மனசை உடனடியாக லேசாக்க இந்த வாசத்தை சுவாசித்தாலே போதும்.

vetti-ver
- Advertisement -

மனது பாரமாக இருக்கும்போது குழப்பமாக இருக்கும் போது 5 நிமிடங்கள் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து உங்களுடைய மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும். அதாவது இப்படிப்பட்ட சுவாச பயிற்சியை எடுக்கும் போது நம்முடைய மனசு தானாக லேசாகும். உங்களுக்கு முன் கோபமும் அல்லது அதிகப்படியான மன அழுத்தம் இருக்கும்போது, கோபப்பட்டு எந்த இடத்திலும் நீங்கள் பேசி விடக்கூடாது. மனது பாரமாக இருக்கும் போது நீங்கள் குழப்பத்தில் இருக்கும் போது முதலில் அமைதியாக இருப்பதுதான் சரியான வழி. அமைதியாக உங்களை சாந்தப்படுத்திக் கொண்டு அதன் பின்பு எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கவேண்டும். அவசர அவசரமாக கோபத்தில் நாம் எடுக்கக்கூடிய முடிவு நிச்சயம் நமக்கு சாதகமாக இருக்காது.

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். மனிதர்களாக பிறந்தவர்கள் எப்போதுமே சாந்தமாக இருப்பார்கள் என்று சொல்லிவிடமுடியாது. திடீரென்று ஏதாவது எதிர்பாராத சமயத்தில் சண்டை சச்சரவுகள் குழப்பங்கள் நிறைந்த சூழ்நிலையில் கஷ்டமான சூழ்நிலையில் நம்மை அறியாமலேயே நம் தலைக்கு மேலே கோபம் ஏறிவிடும். அந்த சமயத்தில் நம்மை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்த ஒரு பொருளின் வாசத்தை சுவாசிக்க வேண்டும்.

- Advertisement -

அது எந்த பொருள். மருத்துவ குணமும் மகத்துவமும் நிறைந்து இருக்கக்கூடிய வெட்டிவேர் தான் அந்த பொருள். உங்களுடைய வீட்டில் எப்போதுமே இந்த வெட்டிவேரின் வாசம் வீசும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய டப்பாவிலோ கிண்ணத்திலோ போட்டு வீட்டில் ஆங்காங்கே இந்த வெட்டிவேரை வைத்துவிடுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு வெள்ளை காட்டன் துணியில் கூட வெட்டிவேரை போட்டு முடிந்து ஆங்காங்கே ஒரு முடிச்சை வைத்து விட்டால் அந்த வெட்டி வேரில் இருந்து ஒரு லேசான வாசம் உங்கள் வீடு நிரம்ப இருக்கும். இதை நீங்கள் சுவாசித்துக் கொண்டே இருந்தால் உங்களுடைய மனது எப்போதும் லேசாக இருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு மன அழுத்தம் கொடுக்கக் கூடிய கஷ்டமான வேலைகளை செய்ய வேண்டிய சூழ்நிலை. காரணம் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். அப்படிப்பட்ட பிரஷ்ஷான வேலையைச் செய்பவர்கள் எப்போதுமே உங்களுடைய கைக்குட்டையில் ஒரு இரண்டு வெட்டிவேரை போட்டு முடிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி இக்கட்டான சூழ்நிலை பிரச்சனைகள் வேலைப்பளு அதிகமாக உள்ளது என்ற சூழ்நிலையில், உங்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும் அல்லவா. அப்போது இந்த கைக்குட்டையில் இருக்கும் வெட்டிவேரை மூக்கில் வைத்து அந்த வாசத்தை சுவாசித்து கொள்ளுங்கள். உடனடியாக உங்களுக்கு இருக்கக் கூடிய மன அழுத்தம் லேசாவதை உணர முடியும்.

இன்னும் சில பேருக்கு வேலை பளு காரணமாக மன அழுத்தம் காரணமாக இரவில் நல்ல தூக்கம் இருக்காது. இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படும் சமயத்தில் தலையணைக்கு அடியில் ஒரு வெட்டி வேர் முடிச்சை வைத்து தூங்கலாம். இந்த வெட்டி வேர் வாசத்தை சுவாசித்துக் கொண்டே தூங்கும் போது நம்முடைய மனது அமைதியாகி நல்ல தூக்கத்தை தரும்.

ஆனால் மாதத்திற்கு ஒருமுறை பழைய வெட்டிவேரை எல்லாம் எடுத்து வீட்டிற்கு வெளிப்பக்கமாக வைத்து ஒரு கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி அதில் எரித்து விட வேண்டும். மீண்டும் புதிய வெட்டிவேரை மாற்றி வைக்க வேண்டும். காரணம் வெட்டிவேரில் இருக்கக்கூடிய வாசம் குறையக்குறைய அதற்குள் இருக்கும் சக்தியும் குறைந்துவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் தெரியும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -