வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்ன தெரியுமா? வாழ்க்கையில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் தீர இதை செய்யலாமே!

murugan-vilakku
- Advertisement -

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க அதிகரிக்க நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளும், தடைகளும் விலகி செல்லும் என்பது நம்பிக்கை. அப்படி இருக்க வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க நாம் செய்ய வேண்டியது என்ன? தெய்வீக சக்தி அதிகரித்தால் நமக்கு கிடைக்க இருக்கும் பலன்கள் என்ன? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் இணைந்து தெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலன்களை கொடுக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. உதாரணத்திற்கு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வந்தால் வீட்டில் சுப காரியங்கள் அல்லது நன்மைகள் நடப்பதை நாம் பார்த்திருப்போம். அது போல குடும்பமாக சேர்ந்து இறைவழிபாடு செய்யும் பொழுது அங்கு தெய்வ சக்தி அதிகரிக்கிறது என்பது ஐதீகமாக இருக்கிறது. எனவே குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் அழைத்து நீங்கள் பூஜையில் கலந்து கொள்ள செய்யுங்கள்.

- Advertisement -

ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை, மாலை இரு வேளையிலும் நீங்கள் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மெல்ல மெல்ல மறைவதை நீங்கள் காணலாம். வீடு எப்பொழுதும் வாசமாக நறுமணமாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் நுழைந்தாலே நல்ல ஒரு நறுமணம் வீசினால் அங்கு தெய்வ சக்தி அதிகரிக்க துவங்குமாம் எனவே பூஜை அறை மட்டுமல்லாமல் வீடு முழுவதும் சாம்பிராணி போடுவது, தூபம் காண்பிப்பது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்து வாருங்கள். இதனால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளும் விலகும், வீடு நறுமணமாக தெய்வ சக்தி அதிகரித்தும் காணப்படும்.

வீட்டில் மந்திர ஒலிகளை எழுப்ப வேண்டும். மந்திர ஒலிகள் கோவிலில் ஒலிக்கப்படுவதால் தான் அங்கு சென்றதும் நமக்கு ஒரு மனநிறைவு கிடைக்கிறது. புதிய நம்பிக்கை வளர்கிறது. அது போல வீட்டிலும் மந்திர ஒலிகள் ஒலிக்கப்பட்டால் அதன் மூலம் எழக்கூடிய அதிர்வலைகள் தெய்வ சக்தியை அதிகரிக்குமாம் எனவே நீங்கள் உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை சத்தமாக உச்சரித்து பூஜை செய்ய வேண்டும். சிலர் மனதிற்குள்ளேயே முணங்கி கொண்டே பூஜை செய்வதை பார்த்திருப்போம், அப்படி செய்யக்கூடாது.

- Advertisement -

நீங்கள் வீட்டில் பூஜை செய்யும் பொழுது சத்தமாக மந்திரங்களை சொல்லி உச்சரிக்க வேண்டும். அப்போது தான் அதன் அதிர்வலைகள் தெய்வீக சக்தியை உங்கள் வீட்டில் அதிகரிக்கச் செய்யும். உங்களுக்கு அப்படி மந்திரங்கள், பாடல்கள் பாட முடியவில்லை என்றால் நீங்கள் அதை டிவி, மொபைல் போனில் ஓட விட்டு ஒலிக்க செய்யலாம். இப்படி செய்யும் பொழுதும் மந்திரங்களின் அதிர்வலைகள் உங்கள் வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க செய்யும். வீட்டில் எப்பொழுதும் பூஜை அறையில் கண்ணாடி ஒன்றை வைத்திருங்கள்.

இதையும் படிக்கலாமே:
நம்பி பணத்தை கடனாக கொடுத்து, ஏமாந்து விட்டீர்களா? இதை செய்தால், கைநீட்டி பணத்தை வாங்கியவரே அதை கொண்டு வந்து உங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்.

கண்ணாடிக்கு தெய்வீக சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் உண்டு. குறிப்பாக குலதெய்வம் அதில் வந்து இறங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அதனால் தான் பூஜை அறையில் சிறிய கண்ணாடி ஒன்றை வைக்குமாறு சொல்லப்படுகிறது. நீங்கள் மங்கள பொருட்களில் ஒன்றாக இவை இருப்பதால் சுமங்கலி பெண்கள் வீட்டிற்கு வரும் பொழுது மஞ்சள், குங்குமத்துடன் சிறு கண்ணாடி, வெற்றிலை, பாக்கு சேர்த்து கொடுத்து வழி அனுப்பலாம். இதனால் கொடுப்பவர்களுக்கும் அதனை பெறுபவர்களுக்கும் தெய்வீக சக்தி அதிகரிக்குமாம்.

- Advertisement -