நம்பி பணத்தை கடனாக கொடுத்து, ஏமாந்து விட்டீர்களா? இதை செய்தால், கைநீட்டி பணத்தை வாங்கியவரே அதை கொண்டு வந்து உங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்.

cash
- Advertisement -

கஷ்டப்படுபவர்கள் உதவி என்று வந்து கேட்கும்போது, உதவி செய்வதற்கு தேவையான பணம் நம்மிடம் இருந்தால், கட்டாயமாக நாம் அதை கொடுத்து உதவி செய்வோம். கையில் பணத்தை வைத்துக் கொண்டே, பணம் இல்லை என்று சொல்லக்கூடிய மனம் நிறைய பேருக்கு வராது. அப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இன்னும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான், இந்த பூமியில் மழை பெய்கிறது. உயர்கள் வாழ முடிகின்றது. ஆனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும் போது தான் பிரச்சனையே ஆரம்பம்.

கொடுத்த கடன் திரும்ப பெற
பணத்தை கொடுத்தவன், பணத்தை கொடுக்கும் போது கடவுளாக தெரிவான். அதுவே அந்த பணத்தை கொடுத்தவன், தன் தேவைக்காக பணத்தை திருப்பி கேட்கும் போது, அவன் பொல்லாதவன் ஆக மாறிவிடுகின்றான். இப்படி நீங்கள் எந்த செல்வத்தை இழந்து இருந்தாலும் அதை மீண்டும் மீட்டு எடுப்பதற்கு, ஒரு ஆன்மீகம் சார்ந்த பண வசிய பூஜையைப் பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணியில் இருந்து 8.30 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பூஜை அறையிலேயே செய்யலாம். குலதெய்வத்தை வேண்டி ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

வால்மிளகு 3, சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் 3,  லவங்கம் 6, சிறியதாக பச்சைக் கற்பூரம் 1 துண்டு, இந்த பொருட்களை எல்லாம் ஒரு சிவப்புத் துணியில் வைத்து சிறிய முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இதை ஒரு மண் அகல் விளக்கில் வைத்து இதன் மேல கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி, இந்த முடிச்சை அப்படியே ஏற்றி வைத்து விட வேண்டும். இந்த முடிச்சு எரிந்து அணைவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் எடுக்கும் அல்லவா. அந்த நேரத்தை தான் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த கற்பூரம் எரிந்து முடியும் வரை இந்த நெருப்பிற்கு முன்பு அமர்ந்து உங்களுக்கு யார் பணம் தர வேண்டுமோ, அந்த குறிப்பிட்ட நபரின் பெயரைச் சொல்லி அவருக்கு இருக்கும் கஷ்டங்கள் தீர, அவருக்கு பண பிரச்சனை தீர்ந்து, அவருக்கு வருமானம் அதிகரித்து அந்த குறிப்பிட்ட நபரை கைநீட்டி வாங்கிய கடன் தொகையை மீண்டும் கொண்டு வந்து, திருப்பி தர வேண்டும் என்று மனதார இந்த பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்யும்போது, உங்களுடைய வேண்டுதல் உடனே பலிக்கும். நீங்கள் இழுந்த பணம் உங்களுக்கு மீண்டும் வசியமாகும். அதாவது நீங்கள் இழந்த பொருள் திரும்பவும் உங்கள் கையை வந்து அடைவதற்கு இது ஒரு எளிமையான வழிபாட்டு முறை.

- Advertisement -

வாரம் தோறும் தவறாமல் இதை செய்து வாருங்கள். இதை செய்வதின் மூலம் நீங்கள் யாருக்கு பணம் காசு கொடுத்தீர்களோ, யார் உங்களிடம் கைநீட்டி கடனை வாங்கினாரோ அவருக்கு கெட்ட நேரம் இருந்தாலும், அதை நல்ல நேரமாக மாற்றும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: தனலட்சுமி தங்குத் தடை இல்லாமல் உங்கள் வீட்டிலேயே தங்க, 1 கைப்பிடி அளவு சில்லறையை பீரோவில் இப்படி வைத்தால் போதும்.

நீங்கள் வட்டிக்கு பணத்தை கொடுத்து திரும்பவும் வரவில்லை என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நண்பர்கள் உறவினர்கள் என்று உதவி செய்திருந்து ஏமாந்து இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்து தான் ஆக வேண்டும். அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால், உங்கள் கையில் இருக்கும் பணத்தை அடுத்தவர்களுக்காக கொடுக்கும்போது, ஒன்றுக்கு பலமுறை யோசிங்கள். நீங்கள் செய்யப் போகும் உதவியால், உங்களுடைய குடும்பத்திற்கு எந்த விதத்தில் பாதிப்பும் வந்து விடக்கூடாது. ‘தர்மம் தலைகாக்கும்’ என்று சொன்ன முன்னோர்கள் தான், ‘தனக்கு மிஞ்சினது தான் தானமும் தர்மமும்’ என்றும் சொல்லி வைத்துள்ளார்கள் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -