உங்கள் வீட்டில் இந்த பொருட்களெல்லாம் அதிகம் இருந்தால் பணம் தங்குவதற்கு தடைகள் ஏற்படும்! உடனே அவற்றை அப்புறப்படுத்தி விடுவது நல்லது.

book-thuru-lakshmi
- Advertisement -

மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்களாக 108 இடங்கள் குறிப்பிட்டு கூறப்படுகிறது. மகாலட்சுமி நம் வீட்டிலும், வீட்டில் இருக்கும் பொருட்களிலும் வாசம் செய்வது உண்டு. இந்த வகையில் மகாலட்சுமி வீட்டில் தங்குவதற்கு தடைகளை உண்டாக்கும் பொருட்களாக நம் வீட்டில் வைத்து இருப்பது என்ன? அவற்றை ஏன் நம்முடைய வீட்டில் வைத்திருக்க கூடாது? என்பதைப் பற்றிய ஆன்மிகத் தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் காண இருக்கிறோம்.

ஒருவருடைய இல்லத்தில் தேவையற்ற குப்பைகளை குவித்து வைத்து இருந்தால் அங்கு மகாலட்சுமி தங்க மாட்டாள் என்பது பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரு கருத்தாகும். சுத்தமான நறுமணம் உள்ள, தெய்வீக மணம் கமழும் படியான இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்குவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அப்படி இருக்க நம் வீட்டில் இருக்கும் இந்த பொருட்கள் மகாலட்சுமியின் வாசத்தை தடை செய்யுமா? அது ஏன்?

- Advertisement -

முதலாவதாக நம் வீட்டில் இருக்கும் துருப்பிடித்த பழைய இரும்பு சாமான்கள், மகாலட்சுமியின் வாசத்தை தடை செய்கிறது. இரும்பு என்னும் உலோகம் சனிக்கிரகம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு வலிமை வாய்ந்த பொருள் ஆகும். ஜாதகத்தில் சனியின் அருள் இருப்பவர்களால் மட்டுமே இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலைச் செய்ய முடியும். மற்றவர்கள் அந்த தொழிலில் இறங்க நினைத்தாலும் நஷ்டம் தான் உண்டாகும். அப்படிப்பட்ட இந்த இரும்பு பொருட்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. உங்களுக்கு அத்தியாவசிய மற்றும் தேவையான இரும்பு பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக் கொண்டு மற்ற பொருட்களை அப்புறப்படுத்தி விடுவது நல்லது.

அதிலும் கண்டிப்பாக துருப்பிடித்த இரும்பு பொருட்கள் வீட்டில் அதிகம் இருந்தால், அந்த இடத்தில் பணத்தடை நிச்சயம் ஏற்படும். துருப்பிடித்த இரும்புக்கு எதிர்மறை ஆற்றல் வெளியிடும் சக்தி உண்டு. இதனால் கிடைக்கக் கூடிய அதிர்ஷ்டங்கள் தடைபடும். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள், ஆசைகள் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே வரும். பழைய துருப்பிடித்த இரும்பு சாமான்களை தேவை இல்லாமல் வருடக்கணக்கில் வீட்டில் வைத்து இருப்பவர்கள், அதனை உடனே அப்புறப்படுத்தி சுத்தம் செய்து பாருங்கள், உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் நல்ல பெரிய மாற்றம் உண்டாகும்.

- Advertisement -

அடுத்ததாக வீட்டில் தேவையற்ற பழைய செல்லரித்த காகிதங்களை, அட்டைகளை வைத்திருக்கக் கூடாது. மரத்தினால் உருவாகும் இந்தப் பொருட்கள் நாளடைவில் அதன் தன்மையை இழந்து மக்கிப் போய் ஒரு விதமான வாடையை உண்டு பண்ணும். நல்ல புத்தகங்களை தவிர உங்களிடம் இருக்கும் தேவையற்ற பழைய செல்லரித்த காகிதங்கள், நோட்டு, புத்தகங்கள், அட்டைகள் எதுவாயினும் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள். சிலர் சாமி படம் இருக்கிறது என்று காலண்டர்களை கூட விட்டு வைக்காமல் அடுக்கி வைத்திருப்பார்கள். இது போல தேவையற்ற காலண்டர்கள், அட்டைப் பெட்டிகளையும் அப்புறப்படுத்துங்கள்.

புதிதாக இருக்கும் வரை தான் இதற்கு நல்ல ஆற்றல்களை வெளியிடும் தன்மை உண்டு, மக்கி போனால் எதிர்மறை ஆற்றல் மகாலட்சுமி வாசத்தை தடை செய்யும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் கெட்டுப்போன உணவுப் பொருட்கள், தானியங்கள் இருப்பது அதிர்ஷ்டத்தை தடை செய்கிறது. கெட்டுப்போன உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜில் நீண்ட நாட்கள் வைத்திருப்பது பண தடையை ஏற்படுத்தும் ஒரு செயலாகும். தானியங்கள், அரிசி, உணவு பொருட்கள் எதையும் பூச்சி, புழுக்கள் அண்டாமல் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இப்படி அல்லாமல் கெட்டுப் போயிருந்தால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, மகாலட்சுமியின் வாசத்தை தடை செய்யும் .இதனால் பணம் கையில் தங்காமல் போய்விடும்.

- Advertisement -