சம்பாதிக்கும் பணத்தில் 1 ரூபாய் மட்டும் எடுத்து இந்த பொருள்களுடன் மூடி வைத்தால், அந்த ஒரு ரூபாய் கோடி ரூபாயாக மாறும் யோகம் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

என்ன தான் இரவும் பகலமாக கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒரு ரூபாய் கூட கையில் தங்கவே இல்லை என்று வருத்தப்படும் எத்தனையோ பேரை நாம் சந்தித்திருப்போம். அவர்களுக்கு எல்லாம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், பணம் அங்கு தங்கும் யோகம் இல்லாமல் இருக்கும். இந்த சூழ்நிலை மாறி அவர்கள் கையிலும் எப்போதும் தாராளமாக பணம் புழங்க இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு சிலர் எப்போது பார்த்தாலும் உழைத்து கொண்டே தான் இருப்பார்கள். பார்ப்பவர்களுக்கு கூட இவர்கள் இப்படி ஓடுகிறார்கள் என்று யோசிக்கும் அளவிற்கு இருக்கும். ஆனால் அவர்கள் கையில் ஒரு ரூபாய் கூட தாங்காது. எவ்வளவு வந்தாலும் வரவுக்கு மீறிய செலவாக இருக்குமே தவிர அவர்களால் சேர்த்து வைக்கவே முடியாது. இந்த சூழ்நிலை மாறி அவர்கள் சம்பாதிக்கும் பணமானது வீண் செலவு ஆகாமல். பணம் கையில் தங்க இந்த ஒரு ரூபாய் நாணயம் பரிகாரத்தை செய்தால், பணம் வீண் விரையம் ஆகாமல் பணபுழக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் மகாலட்சுமி தாயாருக்கு செய்ய வேண்டும். பணம் கையில் இருக்க வேண்டும் என்றாலே அதற்கு அவர்களை தான் வணங்க வேண்டும. இந்த பரிகாரமும் அவர்களுக்கு தான் செய்ய போகிறோம். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளிக்கிழமை மிகவும் உகந்த நாள் அன்று செய்தால் மிகவும் விசேஷம்.

பண வரவு அதிகரிக்க பரிகாரம்
இந்த பரிகாரத்தை காலை, மாலை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். பரிகாரத்தை தொடங்கும் முன் உங்கள் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து சிகப்பு நிற மலரால் மாலை அணிவித்து விடுங்கள். முடியாதவர்கள் ஒரே ஒரு சிகப்பு நிற பூ கூட வைத்து அவர்களுக்கு முன் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அத்துடன் ஒரு மூடி போட்டு டப்பாவில் கொஞ்சம் கோதுமை மாவை நிரப்பி அதை மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக திறந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அவர்களுக்கு முன் சந்தனத்தை நன்றாக குழைத்து வைத்து அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். இப்போது மகாலட்சுமி தாயார் இடம் உங்களின் பண தேவைகள், குறைகள் அனைத்தையும் சொல்லி மனதார வேண்டிக் கொண்டு நீங்கள் வைத்து வணங்கும் இந்த ஒரு ரூபாய் பல மடங்காக பெருக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு, ஒரு ரூபாயை சந்தனத்துடன் அப்படியே எடுத்து கோதுமை மாவு இருக்கும் டப்பாவில் போட்டு மூடி வைத்து விட வேண்டும்.

இந்த டப்பா அன்றைய நாள் முழுவதும் பூஜை அறையில் இருக்க வேண்டும். அடுத்த நாள் இதை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். அல்லது பூஜையறையில் கூட இது இருக்கலாம். இதை அடிக்கடி மாற்ற வேண்டும் என்று அவசியமில்லை. மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும். மாற்றும் போது இதே போல் வெள்ளிக்கிழமை நாளாக பார்த்து மாற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

கோதுமை என்பது சூரிய கிரகத்திற்குரிய தானியம். இவர் வேலை வாய்ப்பு, வசதிகளை கொடுக்கும் அனுக்கிரகத்தை பெற்றவர். சந்தனம், நாணயம் எல்லாம் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருட்கள். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் இடத்தில் அவர்களின் அருள், ஆசியும் கிடைத்து பணவரவு அங்கு தாராளமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்த விளக்கு ஏற்றும் வீட்டில் வறுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. வறுமையில் இருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் பூஜையறையில் இந்த ஒரு தீபத்தை ஏற்றுங்கள்.

நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து தாராளமான பணப்புழக்கத்தை பெற்ற நல்ல வளமான ஒரு வாழ்க்கை வாழுங்கள்.

- Advertisement -