வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான 3 விஷயங்கள் என்னென்ன? அறியாத ஆன்மீகம்!

arisi-padi-nel-lakshmi
- Advertisement -

வீட்டில் எப்பொழுதும் பணம் புழங்கிக் கொண்டே இருக்க அனுதினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். ஆனால் இன்று ஒரு வேளை விளக்கு ஏற்றி பூஜை செய்வது என்பதே முடியாத விஷயம் ஆகிப் போய்விட்டது. அனுதினமும் இருவேளை விளக்கேற்றினால் பணப்புழக்கம் கண்டிப்பாக அதிகரிக்கும். அப்படி செய்ய முடியாதவர்கள், நீங்கள் பூஜை அறையில் இந்த 3 விஷயங்களை மட்டுமாவது கடைப்பிடித்து பாருங்கள், பணம் வீண் செலவு செய்யாமல், புழங்கிக் கொண்டே இருக்கும். இல்லாத நிலை என்பது வராது என்கிறது ஆன்மீகம். அப்படியான அற்புதமான குறிப்புகளை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய மங்கள பொருட்களாக விளங்கக்கூடிய வெற்றிலை, பாக்கு கண்டிப்பாக பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான பொருளாகும். நீங்கள் தினமும் விளக்கு ஏற்ற முடியாவிட்டால், வாரம் ஒரு முறை விளக்கு ஏற்றும் பொழுது கண்டிப்பாக வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகியவற்றை வைத்து பின் விளக்கு ஏற்றுங்கள். விளக்கு ஏற்றும் பொழுது விளக்கில் இருக்கும் எண்ணெயில் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை போட்டு ஏற்றுங்கள்.

- Advertisement -

மங்கள பொருட்களை வைத்து விளக்கு ஏற்றும் பொழுது அங்கு மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது நம்பிக்கை. எனவே வெற்றிலை, பாக்கு இல்லாமல் இனி விளக்கு ஏற்றாதீர்கள். இந்த மங்கள பொருட்கள் உங்களுடைய குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்களை கூட நடத்தி வைக்கும் அற்புதமான ஆற்றலை கொண்டுள்ளது. மேலும் பண வரவை அதிகரிக்க செய்து வருமானத்தை பெருக செய்யும்.

முந்தைய காலங்களில் விவசாய குடும்பங்கள் அதிகம் இருந்தன. விவசாயிகள் தங்களுடைய வயலில் இருந்து பறிக்கும் நெற்பயிரை உதிர்த்து நெல்லை அரிசிப்படியில் கோபுரம் போல குவித்து பூஜை அறையில் வைத்திருப்பார்கள். இதனால் அள்ள அள்ள குறையாத தானியங்களும், செல்வங்களும் சேரும் என்பது அவர்களுடைய தீர்கமான நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. எனவே நெல் கிடைத்தால் நீங்கள் கடையில் இருந்து வாங்கி வந்து அரிசி அளக்கும் படியில் கோபுரம் போல நிரப்பி பூஜை அறையில் எப்போதும் வைத்திருங்கள்.

- Advertisement -

பல வருடம் ஆனாலும் கெட்டுப் போகாத இந்த நெல்லை எப்பொழுதும் பூஜையை அறையில் வைத்திருந்தால் வீட்டில் அள்ள அள்ள குறையாத பணமும், செல்வமும், தானியங்களும் குவியும் என்பது ஐதீகம். அரிசி அளக்கும் படி எப்பொழுதும் இரும்பு அல்லது பித்தளையில் இருப்பது சிறப்பு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எவர்சில்வர் பயன்படுத்தலாம், ஆனால் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க வேண்டாம். இவை துன்ப நிலையை உண்டாக்கும்.

ஒரு செம்பு, வெள்ளி அல்லது பித்தளை தட்டு அல்லது கிண்ணம் ஒன்றில் சில்லறை நாணயங்களை போட்டு வையுங்கள். எப்பொழுதும் சில்லறை நாணயங்களுக்கு மதிப்பு அதிகம். இது மகாலட்சுமியின் ஸ்ரூபமாக கருதப்படுகிறது. நீங்கள் செலவு செய்தது போக மீதம் இருக்கும் சில்லறை காசுகளை பூஜை அறையில் இருக்கும் இந்த பாத்திரத்தில் போட்டுக் கொண்டே வர வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். மேலும் விரயங்கள் தவிர்த்து பணப்புழக்கமும் பெருகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -