வீட்டில் பொன் பொருள் சேர்ந்து பண மழை பொழிய 108 ஒரு ரூபாய் நாணயத்தை இத்துடன் சேர்த்து வைத்து விடுங்கள்.

bhairavar coin
- Advertisement -

வீட்டில் எப்பொழுதும் பொன் பொருள் நிறைந்து செல்வ வளத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் இருப்பது இயற்கை தான். அந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமெனில் அதற்கான உழைப்பையும் முயற்சியும் நிச்சயமாக கொடுக்க வேண்டும். இதையெல்லாம் சரியாக செய்தாலும் எல்லோராலும் நினைத்த வாழ்க்கையை வாழ முடிவதில்லை.

இப்படி நிறைவேறாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, நம்முடைய கர்ம வினைகளின் பலனாகவும் சில நேரங்களில் இது போல தடைகளை சந்திக்க நேரிடும். இதனால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் ஏதாவது தடங்கல் வருவதோடு, எதிலும் நம்மால் முழுவதுமான வெற்றியை காண முடியாது. இதை சரி செய்வதற்கான ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

வீட்டில் பணமழை பொழிய பரிகாரம்

முதலில் இந்த பரிகாரம் செய்வதற்கு நாட்டு மருந்து கடைகளில் வலம்புரிக்காய் அல்லது இடம்புரிக்காய் என்று இருக்கும் அவற்றில் எது கிடைத்தாலும் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அத்துடன் சிறிய வெள்ளை நிற துணி, பச்சை கற்பூரம் இவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் 108 ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமி அன்று பைரவரை நினைத்து செய்ய வேண்டும். இப்போது பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். அதற்கு ஒரு கண்ணாடி பௌல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த வலம்புரிக்காயும் 108 ரூபாய் நாணயம், பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து பூஜை அறையில் வைத்து பைரவரை மனதார நினைத்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது விளக்கிற்கு முன் அமர்ந்து உங்களுடைய பண தேவைகள், பண பிரச்சனைகள் அனைத்தும் சரியாக வேண்டும் பைரவரை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு பைரவர் மூலம் மந்திரம் தெரிந்தால் அதையும் சொல்லுங்கள். இது மேலும் விசேஷமான பலனை தரும். அதன் பிறகு பவுலில் உள்ள பொருட்களை எல்லாம் வெள்ளை நிற துணியில் சேர்த்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: தீராத கடனும் காணாமல் போக கடலில் இதை கரைத்து விட்டால் போதும். தீரா கடன் தீர எளிய பரிகாரம்

இந்த முடிச்சை அப்படியே பவுலில் வைத்து பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். அது பீரோ, வீட்டு வரவேற்பு அறை அல்லது தொழில் செய்யும் இடத்திலும் வைக்கலாம். இந்த முடிச்சு இருக்கும் இடத்தில் பண வரவு தாராளமாக இருக்கும். வீட்டில் செல்வம் சேரவும், பண வரவு பெருக்கவும் இந்த பரிகாரம் நல்ல பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -