தீராத கடனும் காணாமல் போக கடலில் இதை கரைத்து விட்டால் போதும். தீரா கடன் தீர எளிய பரிகாரம்

suriya bhagavan cash hand
- Advertisement -

மனிதனுக்கு எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் எப்படியாவது எதிர்கொண்டு வென்று விடுவார்கள். ஆனால் ஒருவரிடம் கடன் வாங்கி விட்டோம் என்றால் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாகி விடுவோம். அதிலும் கடனை திருப்பித் தர முடியாத சூழ்நிலை வந்து விட்டால் நிலைமை இன்னும் படுமோசம் தான்.

ஆகையால் இந்த கடனை வாங்குவதற்கு முன்பு நாம் பலமுறை யோசிக்க வேண்டும். கடனை அடைப்பதற்கான வழி உள்ளதா? அதை எப்படி அடைக்க முடியும் என்பதை யோசித்து தேவை இருப்பின் மட்டும் வாங்க வேண்டும். அநாவசிய செலவிற்காக கடன் வாங்கி அதில் சிக்கிக் கொள்ள கூடாது. இப்போது கடன் அடைவதற்கான பரிகாரத்தை பார்க்கலாம்.

- Advertisement -

கடன் அடைய பரிகாரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் காலையில் சூரிய உதயத்தின் போது செய்ய தான் வேண்டும். அதற்கு ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கைப்பிடி நிறைய கல் உப்பை போட்ட பிறகு 5 மிளகு, ஐந்து அருகம்புல்லை வேருடன் எடுத்து அதையும் இதில் வைத்து விடுங்கள்.

இப்போது நாம் செய்ய வேண்டியது தான் முக்கியமான விஷயம். ஒரு வெள்ளை நிற பேப்பரில் நீங்கள் யாருக்கு கடன் தர வேண்டும் எவ்வளவு தர வேண்டும் என்பதை எல்லாம் எழுதி அதையும் இந்த மூட்டையில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த பேப்பரில் எத்தனை பேரிடம் கடன் வாங்கி இருந்தாலும் அத்தனை பேரையும் எழுதலாம்.

- Advertisement -

அடுத்து கட்டிய இந்த முடிச்சை உங்கள் கையில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் வந்து விடுங்கள். இப்போது சூரிய பகவானை பார்த்து உங்களுடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இப்படி பூஜை செய்து முடித்து பிறகு இந்த முடிச்சை கடல் நீரில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பண பிரச்சனை தீரவும் கடன் சுமை குறையவும் உதவும் தீப வழிபாடு

ஒரு வேளை உங்கள் வீட்டின் அருகில் கடல் இல்லை என்றால் ஓடும் நீரில் போடலாம். ஆனாலும் கடலில் போடும் போது தான் இதற்கான பலன் விரைவில் கிடைக்கும். இந்த பரிகாரத்தை செய்த சில தினங்களுக்குள் கடன் அடைவதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -