தரித்திரம் தரும் இந்த 10 பொருட்கள் உங்க வீட்டில் இருந்தால் உடனே தூக்கி போட்டு விடுங்கள்! இனி பீடை ஒழிந்து செல்வம் பெருகும்.

cash-mahalakshmi
- Advertisement -

நம்முடைய வீட்டில் தரித்திரம் தரக்கூடிய நிறைய பொருட்களை நமக்கே தெரியாமல் வைத்திருப்போம். இந்த பொருட்கள் எல்லாம் வீட்டில் இருந்தால் செல்வம் சேரவே சேராது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த வகையில் தரித்திரம் தரக்கூடிய இந்த 10 பொருட்கள் உங்க வீட்டில் இருக்கான்னு பாருங்க! அப்படி இருந்தால் கண்டிப்பாக உடனே அதனை தூக்கி போட்டுடுங்க. தரித்திரம் தரக்கூடிய 10 பொருட்கள் என்னென்ன? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

பலரது வீட்டில் கண்டிப்பாக கிழிந்து, நைந்து போன செருப்புகள், ஷூக்கள் போன்றவை இருக்கும். இந்த உபயோகமில்லாத காலணிகள் வீட்டில் இருப்பது துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். எனவே பயனற்ற நிலையில் இருக்கக்கூடிய காலணிகளை வீட்டிலிருந்து முதலில் தூக்கி எறிந்து விடுங்கள். இரண்டாவதாக அதேபோல துடைப்பமும் இருக்கும். புதிய துடைப்பம் வாங்கி அடுக்கி வைத்திருந்தாலும், பழைய துடைப்பத்தை தூக்கிப் போட சிலருக்கு மனதே வராது. தேய்ந்து போன துடைப்பம் துரதிர்ஷ்டத்தை கொடுக்கும் மேலும் இது தரித்திரத்தையும் உண்டாக்கும் எனவே அவற்றை வீட்டில் வைக்காதீர்கள் உடனே தூக்கி எறிந்து விடுங்கள்.

- Advertisement -

புதிய கடிகாரங்கள் இருந்தாலும் ஓடாத கடிகாரத்தையும் கூடவே சேர்த்து வைத்திருப்போம். ஓடாத கடிகாரம் வீட்டில் இருந்தால் தரித்திரம் வரும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது எனவே நேரம் காட்டும் கடிகாரம் பயன்படவில்லை எனில் அதனை மாற்றி விடுங்கள். பயன்படாத துணிமணிகளை கூட வீட்டில் வைத்திருக்கக் கூடாது.

குறிப்பாக நெருப்பில் எறிந்த துணிகள், கிழிந்த துணிகளை வீட்டில் வைக்கவே கூடாது. ஆங்காங்கே துணிமணிகள் மடிக்காத நிலையில் குவித்து வைக்கவும் கூடாது. இது பீடையை ஏற்படுத்தக்கூடிய செயலாகும். எனவே மடிக்காத துணிமணிகளை மடித்து வைத்து விடுங்கள். மின் விளக்குகள் பயன்படாத நிலையில் வைத்திருப்போம். டியூப் லைட், ஃபியூஸ் போன பல்புகளை தூக்கி எறியாமல் வீட்டில் வைத்திருந்தால் கண்டிப்பாக தூக்கி போட்டு விடுங்கள்.

- Advertisement -

தலையில் இருந்து உதிர்ந்த முடிகள், விரலில் இருந்து வெட்டிய நகங்கள் வீட்டில் கண்டிப்பாக தரித்திரத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களாக இருக்கும், எனவே இவை வீட்டிற்குள் இருந்தால் உடனே அதனை சுத்தம் செய்து வெளியில் போட்டு விடுங்கள். வீட்டில் இருக்கும் மிதியடிகள் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். அதனை ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது புதிதாக மாற்றிவிட வேண்டும் அல்லது மாதம் ஒரு முறையாவது நன்கு துவைத்து பயன்படுத்த வேண்டும். கிழிந்த நிலையில் இருக்கக்கூடிய மிதியடிகளை அப்புறப்படுத்தி விடுங்கள்.

வீட்டில் மாட்டிடக்கூடிய புகைப் படங்களில் இருக்கும் தூசுகளை கூட அவ்வப்பொழுது அகற்றி வைத்திருக்க வேண்டும். அப்படியே தூசு படிய விட்டால் தரித்திரம் தரும். சமையலறையில் ஓட்டை விழுந்த பாத்திரங்கள் அல்லது பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த பொருட்கள், கண்ணாடி துண்டுகள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இவையெல்லாம் வீட்டில் இருந்தால் எதிர்மறை ஆற்றல்களை தூண்டி விடக்கூடிய தன்மை உண்டு என்பதால் வைத்திருக்கக் கூடாது.

- Advertisement -

காயலான் கடைக்கு போட வேண்டிய பொருட்களை சிலர் குவித்து வைத்திருப்பார்கள். இதையும் அவ்வப்பொழுது நீங்கள் போட்டு எடைக்கு காசு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இதனை அதிகமாக சேர்க்காதீர்கள். இது பீடையை அழைக்கும் விஷயமாக இருக்கும். சமையல் கட்டில் எப்பொழுதும் எச்சில் பாத்திரங்களை குவித்து வைக்க கூடாது. சாம்பார், ரசம் கொட்டி இருந்தால் அதனை அவ்வப்பொழுது சுத்தம் செய்து விட வேண்டும். தரையில் கூட இது போன்ற அழுக்குகள் படிந்திருந்தால் காய்ந்து போகும் வரை, சிலர் துடைக்க கூட மாட்டார்கள். இவ்வாறு செய்யக்கூடாது, எப்பொழுதும் வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் தான் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

இதையும் படிக்கலாமே:
முருகர் வழிபாட்டிற்கு பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருப்பது இத்தனை நாட்களாக தெரியாமல் போச்சே. இதைத் தெரிந்து கொண்டால் உங்கள் வம்சத்திற்கே புண்ணியம் சேரும்.

ஈர துணிமணிகளை உலர்த்தி விட வேண்டும். அதை அப்படியே வைத்திருக்கக் கூடாது. இரவில் குப்பையை வெளியில் கொட்ட கூடாது. சமையல் கழிவுகளை அல்லது சமையல் பொருட்களை நீண்ட நாட்கள் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. சிலர் பிரிட்ஜில் நாலைந்து நாட்கள் முன்னால் வைத்த சாம்பாரை கூட வைத்திருப்பார்கள். இதுபோல செய்யவே கூடாது. இத்தகைய உபயோகப்படாத, தேவையற்ற பொருட்களை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தினால் வீட்டில் இருக்கும் தரித்திரம், பீடை ஒழிந்து செல்வமானது பெருக துவங்கும்.

- Advertisement -