தினமும் காலை மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றும் நபரா நீங்கள்? அப்போ இந்த விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

home-deepam
- Advertisement -

“விளக்கேற்றும் வீடு வீண் போகாது” என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எவர் ஒருவர் வீட்டில் காலை மாலை இரு வேளையும் விளக்கேற்றுகிறார்களோ அந்த வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆன்மீக பதிவில் அவ்வாறு விளக்கேற்றும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு நாம் முதலில் தீப வழிபாட்டையே மேற்கொள்கிறோம். தீபம் ஏற்றாமல் செய்யக்கூடிய எந்த வழிபாட்டிற்கும் பலன் கிடையாது. அவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது நாம் சில விஷயங்களை கவனத்தில் கொண்டால் நம்மை விட பாக்கியசாலி வேறு யாரும் இல்லை.

சூரியன் உதயம் ஆகும் பொழுது வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். அதே போல் சூரியன் மறைவதற்கு முன்பாகவே மாலை நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். தீபம் ஏற்றும் விளக்கானது எவர்சில்வரில் இல்லாமல் பித்தளை, வெண்கலம், வெள்ளி, மண் போன்றவற்றால் இருப்பது மிகவும் சாலச் சிறந்தது. வெண்கல விளக்கு நம் பாவங்கள் மட்டுமின்றி நம் முன்னோர்கள் செய்த பாவங்களையும் தீர்க்கும். அகல் விளக்கு நம்முடைய சக்தியை அதிகரிக்கும்.

- Advertisement -

விளக்கில் எண்ணெய் ஊற்றிய பிறகு திரியை போட வேண்டும். ஆமணக்கு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றும் பொழுது நமக்கு செல்வம் சேரும். தேங்காய் எண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் சேர்த்து விளக்கேற்றும் பொழுது உடல் ஆரோக்கியமாக இருக்கும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றும் போது எமபயம் நீங்கும். பசு நெய் தீபம் ஏற்றும் போது சகல சௌபாக்கியங்களும் பெறுவோம்.

ஒரு திரி போட்டு ஏற்றப்படும் விளக்கு கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். இரண்டு திரிகளை திரித்து ஏற்றக்கூடிய விளக்கு தெற்கு முகம் பார்க்காமல் கிழக்கு, மேற்கு, வடக்கு போன்ற திசைகளில் ஏற்றலாம். மஞ்சள் துணியில் திரி போட்டு விளக்கேற்றுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் அகலும். பஞ்சு திரி போட்டு விளக்கேற்றுவதன் மூலம் மங்களங்கள் உண்டாகும். வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றுவதன் மூலம் புத்திர தோஷம் நீங்கி, புத்திர பாக்கியம் கிட்டும். வெள்ளை பட்டு நூல் திரியை வைத்து தீபம் ஏற்றுவதன் மூலம் அனைத்து சுப காரியங்களும் தடைகள் இன்றி நடைபெறும். தாமரை நூல் திரியை போட்டு விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் கிட்டும்.

- Advertisement -

நாம் விளக்கேற்றும்போது விளக்கின் அருகில் நீர் நிரம்பிய பாத்திரத்தை வைக்க வேண்டும். அது பஞ்சபாத்திரமாகவும் இருக்கலாம் அல்லது ஒரு டம்ளர் நிறைய நீராகவும் இருக்கலாம்.விளக்கேற்றிய பிறகு அந்த தீபத்தை பார்த்து நம் கைகளால் தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லட்சுமி என்று மூன்று முறையும், தீப துர்கா என்று மூன்று முறையும், குலதெய்வ தீபம் இன்று மூன்று முறையும் ஆவாகனம் செய்ய வேண்டும். தீபம் குறைந்தது 26 நிமிடங்கள் அதாவது ஒரு நாழிகை யாவது எரிய வேண்டும். தீபத்தை வாயால் ஊதி அணைக்க கூடாது.

இதையும் படிக்கலாமே: கையில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறீர்களா? திடீர் பணவரவை ஏற்படுத்த செம்பருத்தியை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை செய்து பாருங்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் உங்களை வந்து சேரும்.

தீபம் தன்னை சுற்றி இருக்கக் கூடிய இருளை விலக்கி பிரகாசத்தை தருவது போல், நாம் ஏற்றக் கூடிய தீபமானது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும், துயரங்களையும் நீக்கி நம் வாழ்க்கை பிரகாசம் அடைய வழி செய்யும்.

- Advertisement -