கையில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறீர்களா? திடீர் பணவரவை ஏற்படுத்த செம்பருத்தியை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை செய்து பாருங்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் உங்களை வந்து சேரும்.

empty purse sembaruthi
- Advertisement -

பணத்தின் தேவை என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அன்றாடம் இருக்கக்கூடிய ஒரு விஷயமாகும். அந்த பணத் தேவை பூர்த்தியாகி விட்டால் நாம் கடன் என்ற ஒன்றை தேடி செல்லவே மாட்டோம். கடன் என்ற ஒன்று ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படாமல் இருப்பதற்கு அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணம் இருந்தாலே போதும். அவ்வாறு நம்முடைய பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கு செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கஷ்டமான சூழ்நிலையில் நாம் இருக்கும் பொழுது யாராவது ஒருவரின் ரூபத்தில் நமக்கு உதவி கிடைத்தால், அந்த உதவியை நாம் தெய்வத்தின் அருளால் கிடைத்தது என்றே கருதுகிறோம். அவ்வாறு நமக்கு இக்கட்டான சூழ்நிலையில் பணத்தேவை ஏற்படும்பொழுது ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் நம்மை வந்தடைந்தால், அது நமக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். அந்த மாதிரி ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் நம்மை வந்தடைய செம்பருத்தி பூவை வைத்து மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

- Advertisement -

இதற்கு நமக்குத் தேவைப்படுவது வெறும் மஞ்சள் தூளும், செம்பருத்தி பூவும் மட்டுமே. ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது சிறியதாகவும் இருக்கலாம். பெரியதாகவும் இருக்கலாம். ஒரு செம்பருத்தி பூவை போடும் அளவிற்கு ஒரு சிறிய கிண்ணம் ஆக கூட இருக்கலாம். பிளாஸ்டிக்கை தவிர்த்து மற்ற எந்த உலோகமாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் நாம் சுத்தமான நீரை பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் கஸ்தூரி மஞ்சள் தூளை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு அதில் சிவப்பு நிற ஒற்றை செம்பருத்தி பூவை போட வேண்டும். கிழக்கு பார்த்தவாறு நின்றபடி, அந்த கிண்ணத்தை மூன்று முறை தலை முதல் பாதம் வரை சுற்ற வேண்டும். ஆண்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களே சுற்றிக்கொள்ள வேண்டும். பெண்கள் செய்வதாக இருந்தால் அவர்களின் கணவர் சுற்றலாம் அல்லது அவர்களே சுற்றிக் கொள்ளலாம். வலம் இருந்து இடப்புறமாக மட்டுமே சுற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு இதை கால் படாத இடத்தில் அப்படியே ஊற்றி விட வேண்டும். அவ்வளவுதான் இந்த பரிகாரம். இப்படி செய்வதன் மூலம் ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் நம்மை வந்தடையும். மேலும் இந்த பரிகாரத்தை நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். நியாயமான கோரிக்கைக்காக பணத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் பலன் அடையலாம்.

இதையும் படிக்கலாமே: முருகப்பெருமானின் அருள் பார்வை உங்கள் மீது பட்டு கேட்டதெல்லாம் கிடைத்து ராஜ போக வாழ்க்கை வாழ முருகனின் இந்த மூலம் மந்திரத்தை ஒரு முறை ஜெபித்தாலே போதும்.

இந்த எளிமையான பரிகாரத்தை நாமும் நமக்கு செய்து நம்முடைய பண தேவையை பூர்த்தி செய்து கொள்வோம்.

- Advertisement -