திருமணத்தடையை போக்க இதைவிட ஒரு சுலபமான சக்தி வாய்ந்த பரிகாரம், இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய 4வது வாரம் உங்களுக்கு திருமணம் நிச்சியக்கப்படுவது உறுதி.

mangalyam
- Advertisement -

உங்களுடைய ஜாதக கட்டத்தில் திருமணத்தைத் தடுத்து நிறுத்தும்படி எந்த தோஷம் இருந்தாலும் சரி, அதற்கு நீங்கள் பரிகாரம் செய்து இருந்தாலும் சரிதான், பரிகாரத்தை செய்யாமல் இருந்தாலும் சரிதான், உங்களுக்கு திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதா. முப்பது வயதைக் கடந்தும் திருமணமாகாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பவர்கள், நம்பிக்கையோடு இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும். 11 வாரங்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்கிய 4 வாரத்தில் இருந்து 5 வாரங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமாக நல்ல வரன் அமைந்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. முழுமையான நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்தால்.

mangalyam1

நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி உங்களுக்கான வரனை அந்த இறைவன் காட்டி கொடுப்பார். சரி அந்த பரிகாரம் என்ன என்பதை இப்போது பார்த்துவிடலாம். வெட்டிவேரால் தொடுத்த மாலை வாங்கிக் கொள்ள வேண்டும். முடிந்தால் வெட்டி வேரை வாங்கி நீங்களே கூட இந்த மலையை உங்கள் கையாலேயே தொடுத்து, மேலே வாசனை மிகுந்த பன்னீரைத் தெளித்துப் மாலையை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டின் அருகில் சிவன் கோவில் இருந்தால் அந்த சிவன் கோவிலுக்கு சென்று சிவ பெருமானுக்கு இந்த மாலையை சாத்த வேண்டும். சிவன் கோவில் இல்லை என்பவர்கள் உங்களுடைய இஷ்ட தெய்வம் எந்த தெய்வம் இருந்தாலும் அந்த கோவிலுக்கு சென்று, அந்த தெய்வத்திற்கு இந்த மாலையை சாத்தலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. 11 வாரம் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்து வர வேண்டும். மாலையை இறைவனுக்குச் சாத்தும் போது உங்களுக்கு இருக்கக்கூடிய திருமணத்தடை கூடிய விரைவில் சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனையும் செய்து கொள்ள வேண்டும்.

mangalyam1

வெற்றியை கொடுக்கக் கூடிய சக்தி இந்த வெட்டிவேர் மாலைக்கு உண்டு. இந்த பரிகாரத்தை தொடங்கி ஒரு சில வாரங்களிலேயே உங்களுக்கு நல்ல வரன் கிடைத்து விட்டால் சந்தோஷம் தான் ஆனால், பரிகாரத்தை நிறுத்திவிடக் கூடாது. 11 வாரம் இந்த மாலையை இறைவனுக்கு சூட்டி விட்டுதான் பரிகாரத்தை நிறைவுக்கு கொண்டு வரவேண்டும்.

- Advertisement -

திருமணத்தில் எத்தனையோ தடைகள் நிறைய பேருக்கு இருக்கும். சில பேருக்கு எல்லாம் நிச்சயம் வரை போய் கூட திருமணம் தடை பட்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் கவலையே படாதீர்கள். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்கினால் நிச்சயம் கெட்டி மேள சத்தம் உங்களுடைய வீட்டில் கேட்கும். முழு நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

vettiver1

ஆனால் பரிகாரத்துடன் சேர்த்து, பெற்றோர்கள் வரன் பார்ப்பதை முழுமூச்சோடு முயற்சி செய்ய வேண்டும். வெட்டிவேர் மாலையை யாருக்குத் திருமணம் நடக்கவில்லையோ, அவர்களுடைய கையால் தான் இறைவனுக்கு கொடுக்க வேண்டும். நம்பிக்கையோடு முயற்சி செய்தால் நல்ல பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -