வெற்றியைத் தரும் வழிபாடு

god
- Advertisement -

வாழ்க்கை என்றாலே வெற்றி தோல்வி இரண்டும் வரத்தான் செய்யும். தோல்வியை கண்டு துவண்டு போகவும் கூடாது. வெற்றியை கண்டு தலைகனத்தில் ஆடவும் கூடாது. இரண்டையும் பேலன்ஸ் செய்ய தெரிந்தவன் தான் ஒரு நல்ல மனிதனாக இருக்க முடியும். அவனுக்கு தான் வாழ்க்கையை வாழ்வதற்கு ரொம்ப சிரமமும் இருக்காது. சந்தோஷமாக இந்த மனித ஜென்மத்தை வாழ்ந்து கடந்து செல்லலாம்.

சில பேருக்கு இந்த வெற்றியின் சந்தோஷம் எப்படி இருக்கும் என்பதை தெரியாது. தோல்வியை சந்தித்து சந்தித்து துவண்டு போய் கஷ்டத்தில் இருப்பார்கள். இவர்களுக்காக இன்று ஒரு பரிகாரம். இந்த இரண்டு பொருட்களை எடுத்துச் சென்றால் தோல்வியைத் தாண்டி வெற்றியை நம்மால் அடைய முடியும். வெற்றி பெற நம் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய இரண்டு பொருட்கள் என்னென்ன. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

வெற்றி பெற கையில் வைத்துக் கொள்ள வேண்டிய இரண்டு பொருட்கள்

இரண்டே பேர் தான். பிள்ளையார், குரு பகவான். இந்த இரண்டு பேரின் அனுகிரகம் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்துவிட்டால் தடைகள் உடையும். வெற்றி குவியும். பிள்ளையாருக்கு அருகம்புல், குரு பகவானுக்கு மஞ்சள். எந்த மஞ்சள் வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கிழங்கு மஞ்சள், எதாக இருந்தாலும் பயன்படுத்தலாம்.

உங்கள் வீட்டில் இருப்பதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சின்னத் தொட்டியில் மண் போட்டு அருகம்புல்லை வளர்த்து வாருங்கள். வீட்டிற்கு நிலை வாசலுக்கு வெளியில் இந்த அருகம்புல் செடியை வைக்கலாம். பால்கனியில், ஜன்னல் ஓரங்களில் சூரிய வெளிச்சம் கிடைத்தால் அந்த இடத்தில் வைத்து கூட இந்த செடியை வளர்த்தால் கூட தவறு கிடையாது.

- Advertisement -

இன்று முக்கியமான விஷயத்துக்காக வெளியே போறீங்க, அல்லது தினசரி வாழ்க்கையே எனக்கு கரடு முரடா இருக்குப்பா. அந்த வாழ்க்கை ரொம்ப ரொம்ப நல்லபடியா சாதாரணமான வாழ்க்கையாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் இதை செய்தாலும் தவறு கிடையாது. சாமி ரூம திறந்து சாமியை கும்பிட்டுக்கோங்க.

விளக்கு ஏற்றினாலும் சரி விளக்கு ஏற்ற வில்லை என்றாலும் சரி, உங்கள் நேரத்தை பொறுத்தது அது. உங்களுடைய சவுகரியம். இரண்டு அருகம்புல் எடுத்துக்கோங்க. ஒரு மஞ்சள் கிழங்கு எடுத்துக்கோங்க. இரண்டையும் கையில் வைத்துக்கொண்டு இரண்டு உள்ளங்களையையும் ஏந்தியபடி, பிள்ளையாரப்பா, சொல்லிக்கோங்க. குரு பகவானே சொல்லிக்கோங்க.

- Advertisement -

எனக்கு இன்று எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரு கவரில் போட்டு பையில் வையுங்கள். அவ்வளவுதான். வேலைக்கு கிளம்புங்க. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம் அல்லது பொண்ணு பார்க்க போறீங்க பையன் பார்க்க போறீங்க எதுவாக இருந்தாலும் சரி அந்த முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கிடைக்கக்கூடிய வெற்றியில் சந்தோஷமான வாழ்க்கையும் கிடைக்கும். சில பேருக்கு நல்ல மணமகன் கிடைத்துவிடும். நல்ல மணமகள் கிடைத்துவிடும். ஆனால் கல்யாண வாழ்க்கை ஒழுங்காக போகாது. சில பேருக்கு வியாபாரத்திற்கு காண்ட்ராக்ட் கையொப்பம் ஆகிவிடும். கான்ட்ராக்ட் உங்கள் கைக்கு கிடைத்துவிடும்.

ஆனால் அந்த வியாபாரத்தின் மூலம் லாபம் கிடைக்காமல் நஷ்டமாக மாறிவிடும். வெற்றி பெற்ற பிறகும் தோல்வி அடையக் கூடாது என்றால் இவர்களுடைய வழிபாடு முக்கியம்தான். ஒருவேளை அந்த வெற்றி உங்களுக்கு எதிர்காலத்தில் தோல்வியை கொடுக்கும் என்றால், கடவுள் அந்த விஷயத்தை அன்றைக்கே உங்களுக்கு நடக்க விடாமல் தடுத்து விடுவார்.

இதையும் படிக்கலாமே: சந்தோஷமாக வாழ முருகன் வழிபாடு

அதற்காக அன்று நடந்த தோல்வியை நினைத்து நினைத்து நீங்க கஷ்டப்படக்கூடாது. வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாக வாழ, தினசரி வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாமல் தப்பிக்க, இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடு உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -