விரும்பியதை அடைய விபூதியோடு இந்த 1 பொருளை சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் ஆசைப்பட்டது எதுவும் உங்கள் கையை விட்டு நழுவி போகவே போகாது.

vibuthi
- Advertisement -

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும்மே விருப்பம் ஆசை கனவு இலட்சியம் என்பது கட்டாயம் இருக்கும். சில விருப்பங்கள், சில ஆசைகள், சில கனவுகள் சீக்கிரத்தில் நிறைவேறும். சிலது எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நம் கையை விட்டு நழுவி கொண்டே செல்லும். உதாரணத்திற்கு பிடித்த மேல் படிப்பை படிக்க வேண்டும். பிடித்த வேலைக்கு செல்லவேண்டும். பிடித்த மணவாழ்க்கை அமைய வேண்டும். வீடு கட்ட வேண்டும். நம்முடைய பிள்ளைகள் நம் பேச்சை கேட்க வேண்டும். நிறைய நகை பணம் சம்பாதித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை லட்சியம் நம்மில் நிறைய பேருக்கு உள்ளது. அதை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றால் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் நாம் கைவிடக்கூடாது. இது முதல் விஷயம்.

அடுத்து நம்முடைய முயற்சிக்கு எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் முட்டுக்கட்டை போட கூடாது. நம்மை சுற்றி எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும். பொதுவாக நல்லது நடக்க வேண்டும் என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வெளியே கிளம்பும்போது ‘நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு செல்!’ என்று சொல்வது வழக்கம் தான். அதையேதான் நாம் இன்றைக்கும் செய்யப் போகின்றோம்.

- Advertisement -

ஆனால் விபூதியடன் இன்னொரு விசேஷமான பொருளையும் சேர்த்துக் கொள்ளப் போகின்றோம். அது என்ன பொருள். எல்லாவற்றையும் நமக்கு வசியப்படுத்தி தரும் வசம்பு. நாட்டு மருந்து கடைகளில் வசம்பு பொடி என்று விற்கிறது. அதை வாங்கி எடுத்துட்டு வீட்டுக்கு வாங்க. பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட சுத்தமான விபூதியை வாங்கி கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை இன்று தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏதாவது ஒரு நல்ல நாளாகப் பார்த்து, முடிந்தால் வெள்ளிக் கிழமை அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு காலை 6 மணிக்கு முன்பாக பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சிறிய தட்டில் ஒரு கைப்பிடி அளவு விபூதி, ஒரு கைப்பிடி அளவு வசம்பு பொடி இரண்டையும் சரிசமமாக சேர்த்து அந்த தட்டில் கொட்டி நன்றாக முதலில் கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கலந்து வைத்திருக்கும் வசம்புப் பொடியையும் விபூதி பொடியையும் அப்படியே உங்கள் கைகளால் லேசாக பரப்பி விட்டு விட்டு, உங்களுடைய வலது ஆள்காட்டி விரலில் அந்த தட்டில் விபூதியின் மேலேயே ‘ஓம்’ என்ற வார்த்தையை எழுத வேண்டும். பூஜை அறையில் இந்த தட்டை வைத்துவிட்டு ‘உங்களுடைய விருப்பம் என்னவோ, ஏதாவது ஒரு விருப்பத்தை மட்டும் மனதார நினைத்து பிரார்த்தனை செய்துகொண்டு அந்த விருப்பம் கூடிய சீக்கிரத்தில் நிறைவேற வேண்டி கொள்ளுங்கள்’. குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு தட்டில் இருக்கும் விபூதியை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இந்த வசம்பு பொடி கலந்த விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டு நீங்கள் என்ன செய்தாலும் அந்த காரியம் உங்களுக்கு வெற்றிதான். பிறகு உங்களுக்கு ஏது தோல்வி. விரும்பிய எல்லாவற்றையும் சுலபமாக வாழ்க்கையில் அடைந்துவிடலாம். இந்த பிரயோகத்தை கட்டாயமாக தவறாக எந்த ஒரு காரியத்திற்கும் நம்மால் பயன்படுத்த முடியாது. உங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான நியாயமான உங்களுக்கு தகுந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள, இந்த விபூதி உங்களுக்கு துணையாக நிற்கும். உங்களுடைய பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். நல்ல இடத்தில் வரன் அமைய வேண்டும் என்று பெற்றவர்கள் இந்த பரிகாரத்தை செய்து, அந்த விபூதியை தினம்தொரும் பிள்ளைகள் நெற்றியில் இட்டு வரலாம்.நம்பிக்கையோடு செய்தால் கைமேல் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -