பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது இந்த ஒரு தவறு மட்டும் நடக்கவே கூடாது. அறியாமலும் இந்த ஒரு தவறு நடக்காமல் பாத்துக்கோங்க. அது உங்க குடும்பத்திற்கு நல்லது.

vilakku-deepam
- Advertisement -

பூஜை அறையில் நாம் செய்யும் சில விஷயங்கள் நமக்கு நல்ல பலன்களை கொண்டு வந்து சேர்க்கும். அதேசமயம் அறியாமல் நாம் செய்யக்கூடிய தவறுகள் சின்ன சின்ன கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கலாம். நிறைய நன்மையை தரப்போகும் ஒரு வழிபாட்டு குறிப்பையும், விளக்கேற்றும் போது செய்யவே கூடாதா ஒரு தவறையும் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்பிக்கை உள்ளவர்கள் குறிப்பை படித்து பலன் பெறலாம்.

முதலில் விளக்கு ஏற்றும் போது செய்யக்கூடாத தவறை பற்றி பார்த்து விடுவோம். என்னதான் சுத்தபத்தமாக பூஜை அறையை நாம் வைத்துக் கொண்டு, பூஜை ஜாமான்களை தேய்த்து வைத்திருந்தாலும் சரி, சில சமயங்களில் இந்த தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. விளக்கு ஏற்ற எண்ணெய் ஊற்றி விட்ட பின்பு அந்த எண்ணெயில் நம்மை அறியாமல் சில பொருட்கள் விழுந்து விடும். சில சமயம் கொசு வந்து விழுந்து இறந்து போய்விடும். சில சமயம் கண்ணுக்கு தெரியாத தூசி தும்புகள் அதில் இருக்கும். இப்படி அசுத்தம் அடைந்த எண்ணெயில் விளக்கு ஏற்றக்கூடாது. இப்படி எண்ணெய் அசுத்தம் அடைந்து விட்டால் அந்த எண்ணெயை நீக்கி விட்டு அந்த தீபத்தை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து மீண்டும் தான் அந்த விளக்கை பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக விளக்கு ஏற்றக்கூடிய எண்ணெயில் தப்பி தவறி கூட முடி இருக்கவே கூடாது. காற்றில் பறந்தோ அல்லது உங்கள் தலைக்கு மேல் இருக்கக்கூடிய முடியோ நீங்கள் தீபம் ஏற்றும் போது தவறியும் அந்த எண்ணெயில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடியோடு ஒரு வீட்டில் விளக்கு எரிந்தால் அது அவ்வளவு நல்லது இல்லை.

முடி இருக்கிறது என்பதை பார்த்து விட்டீர்கள். உடனடியாக என்ன செய்வது. முடியை மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் அதே எண்ணெயில் தீபம் ஏற்றக்கூடாது. விளக்கில் இருக்கும் எண்ணெயை நீக்கிவிட்டு விளக்கை தேய்த்து விட்டு பின்பு தான் சுத்தபத்தமாக அந்த தீபத்தை மறுபடியும் ஏற்ற வேண்டும். இதற்காகத்தான் தலையை விரித்துக் கொண்டு கோவிலுக்கும் போகக்கூடாது. வீட்டிலும் பூஜை செய்யக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு வழிபாட்டு முறை. வீட்டில் சதாகாலமும் கஷ்டங்கள் இருந்து கொண்டே வருகிறது என்றால், இந்த வழிபாட்டை முயற்சி செய்து பாருங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் சந்தனம், கொஞ்சம் விபூதி, கொஞ்சம் குங்குமம், இந்த மூன்று பொருட்களையும் பன்னீர் ஊற்றி கலந்து ஒரு பிள்ளையாரை பிடியுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைப்பது போலவே ஒரு பிள்ளையாரை பிடித்து ஒரு தட்டில் வைத்து அதற்கு அருகம்புல் வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

தினமும் இந்த பிள்ளையாருக்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு உங்களது இருக்கும் கஷ்டங்களை இந்த பிள்ளையாரிடம் சொல்லி வழிபாடு செய்தால் உங்கள் கஷ்டங்கள் உடனே தீரும் என்பது நம்பிக்கை. இறைவழிபாட்டில் அதிசக்தி வாய்ந்த பொருள் என்றால் விபூதி சந்தனம் குங்குமம் இந்த மூன்று பொருட்கள். அவை மூன்றும் ஒன்றாக சேர்ந்து பிள்ளையார் ரூபத்தில் அமர்ந்திருப்பதால் உங்கள் வீட்டு பூஜை அறையில் அந்த பிள்ளையாரே வந்து அமர்ந்தது போல அர்த்தம்.

தொடர்ந்து 48 நாட்களுக்கு இந்த பிள்ளையாரை பிடித்து வைத்து உங்களுடைய வேண்டுதலை வைக்கும் போது அந்த வேண்டுதல் கூறிய சீக்கிரம் நிறைவேறும். 48 நாளும் இந்த பிள்ளையாரை அப்படியே வைக்கக்கூடாது. வாரத்திற்கு ஒரு நாள் பிடித்து வைத்த பிள்ளையாரை எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு, மீண்டும் புதிய பிள்ளையாரை அந்த இடத்தில் பிடித்து வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேல் சொன்ன பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்று கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -