ஒரு வேலையைக் கூட இதுவரைக்கும் நீங்க உருப்படியா செஞ்சதே கிடையாதா? வாழ்க்கையில் என்ன தான் செய்வது என்றே தெரியாமல் தடுமாறி கொண்டிருப்பவர்களுக்கு இந்த விநாயகர் வழிபாடு கை கொடுக்கும்.

pillaiyar-prayer
- Advertisement -

சில பேருடைய வாழ்க்கை மிகவும் தடுமாற்றத்துடன் நகர்ந்து செல்லும். தடுமாற்றத்தோடு வாழ்பவர்களால் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு வேலையை கூட உருப்படியாக செய்து முடிக்க முடியாது. எந்த வேலையைத் தொட்டாலும் அது பாதியிலேயே நின்று விடும். ஒரு தொழில் தொடங்கினால் அந்த தொழிலிலை நிரந்தரமாக தொடர்ந்து செய்ய மாட்டார்கள். பாதியிலேயே விட்டு விட வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஒரு வேலைக்கு செல்வார்கள். அந்த வேலையில் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள். சென்ற சில தினங்களிலேயே அந்த வேலையையும் விட்டு விடுவார்கள். எதுவுமே செய்யாமல் வீட்டில் சும்மாவே இருந்தாலும் இவர்களைத் தேடி ஏதாவது ஒரு பிரச்சனை வரும். அந்தப் பிரச்சினையின் மூலம் பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இப்படி வாழ்க்கையில் எதை தொட்டாலும் சிக்கலாக இருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையையே வெறுத்து இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை வீட்டில் இருப்பவர்கள், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், சொந்தக்காரர்கள் என்று எல்லோரும் திட்டி தீர்த்து இருப்பார்கள். ஆனால், பாவம் கஷ்டம் அவர்களுக்குத் தான் புரியும். எவ்வளவு முயற்சி செய்தும் எதுவுமே கை கொடுக்கவில்லை என்ற வருத்தம் அவர்களுக்குள் இருக்கும்.

- Advertisement -

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் இந்த ஒரு சிறிய பரிகாரத்தை செய்து பாருங்கள். நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அரச மரத்துக்கு கீழே இருக்கக்கூடிய விநாயகர் உள்ள கோவிலாக பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். சிவப்பு நிற செம்பருத்திப் பூ இந்த பரிகாரத்திற்கு அவசியம் தேவை.

நீங்கள் பிறந்த நட்சத்திரம் மாதத்தில் ஒருநாள் வரும் அல்லவா. அந்த நட்சத்திரத்தன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, செம்பருத்திப் பூவை எடுத்துக் கொண்டு அரசமரத்தடி விநாயகர் கோவிலுக்கு சென்று, அந்த விநாயகருக்கு உங்கள் கையாலேயே அந்த செம்பருத்திப்பூ மலர்களை வைக்க வேண்டும். நிறைய பூக்கள் கிடைத்தால் மாலையாகக் கட்டி கூட போடலாம். (ஒரு பூ கிடைத்தாலும் விநாயகரின் பாதங்களில் வைத்தால் தவறு கிடையாது.)

- Advertisement -

விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு, விநாயகர் கொட்டுகள் வைத்துக்கொண்டு, விநாயகரை 11 முறை வலம் வந்து, உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும். நீங்கள் தொட்ட காரியங்களில் பிரச்சனைகள் வரக் கூடாது. தடைகள் இருக்கக்கூடாது. என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். (நட்சத்திரத்தன்று மட்டும்தான் அரச மரத்தடி விநாயகரை வணங்க வேண்டும் என்பது கிடையாது. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் சென்று செம்பருத்தி பூவை வைத்து வணங்கினாலும் தவறு கிடையாது.)

இப்படி தொடர்ந்து செய்து வர நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்பிக்கையோடு விநாயகரின் பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு முறை குச்சனூர் சென்று சனி பகவானை தரிசனம் செய்து வருவது மிக மிக நல்லது. ஏனென்றால் வாழ்க்கையில் வேலையில் பிரச்சனை. தொட்டது எதுவும் விளங்கவில்லை என்றால் ஒருமுறை சனிபகவானை தரிசனம் செய்து விட்டு வருவது நல்லது என்பது சாஸ்திரம் கூறும் அறிவுரை. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -