தீராத கஷ்டங்கள் தீர விநாயகர் வழிபாடு

vinayagar vazhipadu
- Advertisement -

வாழ்க்கை என்றாலே இன்பம் துன்பம் அனைத்தும் நிறைந்தது தான். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகளும் இன்பங்களும் துன்பங்களும் நிறைந்ததாக தான் இருக்கும் ஆனால் ஒரு சிலருடைய வாழ்க்கையில் எப்பொழுதும் துன்பத்தை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பார்கள் அவர்களுடைய வாழ்க்கையில் இன்பம் என்பது பெயரளவில் கூட இருக்காது.

அப்படியான துன்பத்தில் இருப்பவர்கள் விநாயகரை இந்த நாளில் வணங்கினால் நிச்சயம் துன்ப நிலை மாறும் என்றும், கடன் நீங்கி நல்ல செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அது எந்த நாள் எப்படி வணங்க வேண்டும் பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தீராத பிரச்சனைகள் தீர விநாயகர் வழிபாடு

பொதுவாக விநாயகர் வழிபாட்டை திங்கட்கிழமையில் அல்லது புதன்கிழமையில் செய்வது சிறந்தது என்று சொல்வார்கள். ஆனால் பிரச்சனைகள் தீரவும் கடன் தீர்ந்து செல்வம் சேரவும் விநாயகரை செவ்வாய்க்கிழமையில் வழிபடுவது மேலும் நன்மைகளை தரும் என்று சொல்லப்படுகிறது.

ஆகையால் செவ்வாய்க்கிழமை பூஜை செய்வதற்கு திங்கட்கிழமை அன்றே பூஜை அறையில் சுத்தம் செய்து தயாராக வைத்து விடுங்கள். செவ்வாய்க்கிழமை அன்று காலையில் இந்த பூஜையை செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு அவசியம் தோரணை கணபதி திருவுப்படம் வேண்டும். கஷ்டத்தோடு கஷ்டமாக இந்த ஒரு படத்தையும் உங்கள் பூஜை அறையில் வாங்கி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பூஜை தொடங்குவதற்கு முன்பாக தோரணை கணபதி புகைப்படத்திற்கு முன்பு ஒரு நெய் தீபம் ஏற்றி விடுங்கள். நெய்வேத்தியமாக ஒரு கைப்பிடி பச்சரிசி மாவு அதில் நாட்டு சர்க்கரை ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து வைத்து விடுங்கள். இது விநாயகருக்கு மிகவும் உகந்த நெய்வேத்தியம்.

அதன் பிறகு விநாயகர் முன்பு அமர்ந்து உங்களுடைய வேண்டுதல் எதுவோ அதை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கடன் தீர வேண்டும் என்றாலும் அந்த கடன் பிரச்சனையும் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். விநாயகரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு இந்த நெய்வேத்தியத்தை பசுமாட்டிற்கோ, காக்கைக்கோ அல்லது எறும்புகளுக்கு தானமாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

இது போல ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தொடர்ச்சியாக 11 வாரங்கள் இந்த வழிபாடு செய்து வர வேண்டும். இந்த வழிபாடு செய்ய செய்ய உங்கள் வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பெருக்கெடுப்பதுடன் கடன் நீங்கி செல்வ வளமும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் லட்சுமி கடாக்ஷம் ஏற்பட வழிபாடு

இந்த தோரணை கணபதி வழிபாட்டுடன் தினமும் விநாயகருக்கு இரண்டு ஏலக்காய் நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டு வரும் போது குடும்பம் என்றென்றைக்கும் சீரும் சிறப்புமாக வாழ்வோம். இந்த வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் இது போல வழிபட்டு விநாயகர் அருளை பரிபூரணமாக பெறலாம்.

- Advertisement -