இந்த மந்திரத்தை மனதார சொல்லி வந்தால் போதும். திருமணமாகாத ஆண்களுக்கு மணப்பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்கும் பாக்கியம் உண்டாகும்.

marriage
- Advertisement -

“பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது” என்பது பழமொழி. அதாவது தங்கம், பணம் இவைகள் கிடைத்தாலும் புதன் கிழமையில் சுப முகூர்த்தம் கிடைக்காது என்பது தான் இதன் பொருளாகும். ஆனால் இப்பொழுது பொன் மற்றும் புதன் இவை இரண்டுமே எளிதாக கிடைத்துவிட்டாலும் திருமணத்திற்காக மணப்பெண் கிடைப்பதுதான் அரிதாக இருக்கிறது. சில ஆண்களுக்கு திருமணத்திற்காக பெண் தேடினாலும் அவர்களுக்கான வரன் சரியாக அமையாமல் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். இவ்வாறு திருமணத் தடை இருக்கும் ஆண்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து வர அவர்களுக்கு இருக்கும் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். அவ்வாறான மந்திரம் என்ன என்பதனையும், அதற்கான பலன் என்ன என்பதனையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Hindu Marriage

திருமணத்திற்காக பெண் பார்க்கும் பொழுது அந்தப் பெண் வீட்டார் அதிகம் எதிர்பார்ப்பது மணமகன் நல்ல வேலையிலும், நல்ல குணத்துடன் இருக்க வேண்டும் என்று. சில ஆண்களுக்கு இவை இரண்டும் இருந்தாலும் மணப்பெண் அமைவதில் சிக்கல்களும், திருமணம் தள்ளி போவதும் வழக்கமாக இருக்கிறது. இதற்கு காரணம் அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் அமைப்பும் மற்றும் அவர்களுக்கு இருக்கும் தோஷமும் தான் காரணமாக இருக்கும்.

- Advertisement -

இதனை சரிசெய்ய எளிய பரிகாரங்கள் செய்வதுடன், சில கோவில்களுக்கும் சென்று வந்தால் இவ்வாறான திருமணத்தடைகள் நீங்கி விரைவில் மணப்பெண் கிடைத்து திருமணம் நடைபெரும்.

திருமண தடை நீக்கும் ஸ்லோகம்:

விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி திவ்ஷா ஜஷி

- Advertisement -

பத்னீம் மனோரமாம் தேஹி
மனோவ்ருத்தனு சாரீரம்
தாரீனிம் துர்கஸம்சார
ஸாரசய குலோத்பவாம்

விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்வ்ஷா ஜஷி

- Advertisement -

mangalyam

தினமும் காலை அல்லது மாலை பூஜை அறையில் சாமி படத்திற்கு முன் அமர்ந்து உங்களுக்கு விருப்பமான தெய்வத்தை அல்லது உங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் மனதார சொல்லி வந்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

pooja-room

தோஷங்கள்:
தேவ தோஷம், பித்ரு தோஷம், ஷர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், அபிஷார தோஷம், பிரேத சாபம் இவ்வாறான ஆறுவகை தோஷங்களினால் தான் திருமணத் தடை உண்டாகிறது. மனதார விரதமிருந்து கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி வந்தால் இந்த ஆறு தோஷங்களும் நீங்கி உங்களுக்கு உடனே திருமணம் நடைபெறும்.

murugar

செவ்வாய் தோஷத்தினால் திருமணத்தடை உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

mangalyam-kungumam

திருமணத்திற்கு மணப்பெண் கிடைக்காத ஆண்கள், ஏழைப் பெண்ணுக்கு உணவு மற்றும் தங்களால் இயன்ற புத்தாடையை தானமாக வழங்கினால் திருமணத் தடை நீங்கி, உங்களுக்கான மணப்பெண் உடனே கிடைத்திடுவார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு குறிப்பிட்டுள்ள பரிகாரங்களை பின்பற்றி திருமண தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெற மனதார வாழ்த்தி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கின்றோம்.

- Advertisement -