பெண்களின் பிரச்சனை எல்லாம் தீர ஒரே ஒரு விரலி மஞ்சள் இருந்தால் போதும். தெய்வ அனுகிரகத்தோடு இதை கொண்டே எதையும் தவிடுபொடி ஆக்கலாம்.

amman manjal
- Advertisement -

மஞ்சள் என்றாலே மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட மஞ்சளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று கிழங்கு மஞ்சள், மற்றொன்று விரலி மஞ்சள். இந்த விரலி மஞ்சள் மருத்துவ ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பல விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. சுப நிகழ்ச்சிகளான திருமணம், திருவிழாக்கள் போன்றவற்றில் கையில் விரலி மஞ்சளை காப்பாக கட்டும் பழக்கம் இன்றும் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட விரலி மஞ்சளை வைத்து பெண்களின் துயரை எவ்வாறு நீக்குவது என்று இந்த ஆன்மீக பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பெண்களை தன்னலமற்றவர்கள் என்று கூறுவார்கள். ஏனென்றால் அவர்கள் தன் பெற்றோருக்காகவும், கணவருக்காகவும், குழந்தைகளுக்காகவும், உடன்பிறப்புகளுக்காகவும் பல வேண்டுதல்களை செய்வார்கள். ஆனால் தங்களுக்கு என்று எதையும் செய்ய மாட்டார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்த விரலி மஞ்சள் உதவுகிறது.

- Advertisement -

பெண்களுக்கு பொதுவாக வீட்டில் இருக்கும் போது ஒன்றும் தெரியாது. ஆனால் வெளியே சென்று விட்டு வந்தவுடன் உடல் நலனில் ஏதோ ஒரு வித பாதிப்பு ஏற்படும். இது சில எதிர்மறை ஆற்றல்களாலோ அல்லது தீய பார்வை கொண்ட ஆண்களின் திருஷ்டியாகக்கூட இருக்கலாம். இதை மிகவும் சூட்சுமமாக கந்த சஷ்டி கவசத்தில் கூட கூறியிருக்கிறார்கள் “பெண்களை தொடரும் பிரம்மராஷ்டதரும்” என்று. இப்படியான தீய திருஷ்டிகளை போக்குவதற்கு இந்த விரலி மஞ்சள் உதவுகிறது.

இதற்காக நாம் ஒரு விரலி மஞ்சளை அம்மனின் பாதங்களில் வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். அல்லது வீட்டு பூஜை அறையில் அம்மன் புகைப்படத்திற்கு கீழ் வைத்தும் எடுத்துக் கொள்ளலாம். அம்மனின் பாதங்களில் வைத்து எடுக்கும் போது அந்த மஞ்சளுக்கு இன்னும் அதிக சக்தி கிடைக்கும். பெண்கள் வெளியில் செல்லும்போது, இந்த மஞ்சளை எடுத்து தங்கள் முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ளலாம் அல்லது தாங்கள் உபயோகிக்கும் பர்ஸில் அந்த மஞ்சளை வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகி சகல சௌபாக்கியதோடு வாழ நாம் கோவிலுக்கு செல்லும்போது இதை செய்தாலே போதும்.

இவ்வாறு வைப்பதன் மூலமாக பெண்களை பாதிக்கும் எந்த கெட்ட சக்தியும் அவர்களை அணுகாது. அவர்களுக்கு கண் திருஷ்டி ஏற்படாது. தங்கள் பிள்ளைகளின் திருமண தடைகள் நீங்கும். எதிர்மறை ஆற்றல்கள் விலகி விடும். வீடு திரும்பியதும் மஞ்சளை மறுபடியும் அம்மன் பாதத்தில் வைத்து விட வேண்டும் அவ்வளவுதான். மிகவும் எளிதான இந்த பரிகாரத்தை அனைத்து பெண்களும் செய்து தங்களுக்கு வரக்கூடிய தீமைகளை விரட்டி மகிழ்ச்சியாக வாழலாம்.

- Advertisement -