வெகு நாட்களாக விற்க முடியாமல் இழுவையில் இருக்கும் சொத்துக்களை உடனடியாக விற்பதற்கு இந்த எளிமையான பரிகாரத்தை முறையாக செய்து பலன் பெறுங்கள்

- Advertisement -

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திருமணத்திற்காகவும், அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் பணமாக சேர்த்து வைக்காமல் நிலங்களாக வாங்கி வைத்திருப்பார்கள். அவர்களின் எதிர்காலத்தில் படிக்கவோ அல்லது திருமணத்தின் பொழுதோ இந்த நிலங்களை விற்று அதில் வரும் பணத்தை கொண்டு அந்த செலவை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருப்பார்கள். ஆனால் எதிர்பார்த்த நேரத்தில் இந்த நிலங்களை விற்க முடியாமல் சிலர் பெரும் பிரச்சனையில் மாட்டிக் கொள்வார்கள். இதனால் அவர்கள் நினைத்த காரியம் நடைபெறாமல் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும். அல்லது அதற்காக கடன் வாங்கி செய்திருப்பார்கள். அந்த கடனை அடைக்க முடியாமல் வட்டி கட்டிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு விற்க வேண்டிய நிலம் உடனடியாக விற்பதற்கு இந்த கள்ளிச்செடி பரிகாரத்தை தவறாமல் செய்திட வேண்டும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

black-soil-land

கள்ளிச்செடி என்கின்ற பொழுது நமக்கு உடனே ஞாபகம் வருவது படங்களில் சொல்லப்படும் விஷயங்கள் தான் இதனை தவறான செயலுக்கு பயன்படுத்தி இருப்பார்கள் ஆனால் இந்த ஜோடி மிகவும் ஆன்மீக சக்தி நிறைந்ததாக இருக்கிறது முந்தைய காலத்தில் எல்லாம் இந்த செடியை பயன்படுத்தி பல ஆன்மீக பூஜைகளை செய்துள்ளனர்.

- Advertisement -

கள்ளிச்செடி வளர்கின்ற இடத்திற்கு சென்று அந்தச் செடியில் இருக்கும் பல கிளைகளில் கிழக்கு முகமாக இருக்கும் ஒரு கிளையிலிருந்து முட்களை உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேறு ஒரு கிளையில் எடுத்த முள்ளில் இருந்து ஒரு முள்ளை பயன்படுத்தி வீட்டிலுள்ள எவருக்காவது செய்வினை கோளாறு இருந்தால் அவரின் பெயரை அதில் எழுதி செய்வினை நீங்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவருக்கு இருக்கும் செய்வினை பாதிப்புகள் அவரை விட்டு விலகி விடும்.

chappathi-kalli

அவ்வாறு எடுத்து வந்த முட்களை ஒரு சிறிய தட்டில் வைத்து, அதன் மீது கற்பூரம் சேர்த்து, எரித்துவிட வேண்டும். பின்னர் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலில் ஒரு சொட்டு பசு கோமியம் சேர்த்து, அதனுடன் பசு நெய் கலந்து மை போன்று கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வெற்றிலையில் இந்த மையை லேசாக தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த வெற்றிலையை இரண்டாக மடித்து நாம் தூங்கும் தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் துர் சக்திகள் விலகி நேர்மறை சக்திகளின் தாக்கம் நமது வீட்டில் நிலைத்திருக்க செய்யும்.

farmland

அவ்வாறு கள்ளிச்செடியின் ஒரு கிளை தானாக காய்ந்து கீழே விழுந்திருக்க வேண்டும். அதனைக் கொண்டுவந்து வெகுநாட்களாக விற்க முடியாத நிலத்தின் மீது வைத்து, அதற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக் கொண்டு, தீபம் காண்பித்து பூஜை செய்து, இந்த நிலம் விரைவில் விற்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு, அந்தக் கள்ளிச்செடியின் கிளையை மண் தோண்டி புதைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த நிலம் விரைவில் விற்கப்பட்டு நமது கைக்கு பணம் வந்து சேரும்.

- Advertisement -