இந்த தண்ணீரை மட்டும் விற்க்காத பொருட்களின் மீது தெளித்து பாருங்களேன். வீட்டில் விற்காமல் இருக்கும் சின்ன சின்ன பொருட்களிலிருந்து, பெரிய பெரிய சொத்துக்கள் வரை நல்ல விலை போகும்.

house1
- Advertisement -

கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. வாங்கிய பொருளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியே அந்த பொருளை பயன்படுத்த முடியவில்லை என்றால், வாங்கிய பொருளை நஷ்டம் ஆகாமல் சரியான நேரத்தில் விற்றுவிட வேண்டும். நிறைய பேர் வாங்கிய சொத்தை விற்க முடியாமல் கஷ்டப்பட்டு வருவார்கள். ஒரு சில பேர் தங்களுடைய வீட்டிற்கு தேவைப்படும் என்று ஒரு சில பொருட்களை வாங்குவார்கள். ஆனால் அந்தப் பொருட்களை சில நாட்கள் மட்டுமே பயன்படுத்தி விட்டு, அதை விற்கவும் முடியாமல், பயன்படுத்துவும் முடியாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்பார்கள்.

house

இப்படி உங்களுக்கும் விற்காத வீடு நிலம் வண்டி வாகனம் போன்ற சொத்துக்கள் இருக்கிறதா? அல்லது வீட்டில் உபயோகப்படுத்தாத உடற்பயிற்சி மெஷின், டெய்லர் மெஷின், என்று ஏதாவது பொருட்கள் இருக்கின்றதா. இந்த பொருட்கள் எல்லாம் விற்க தாந்த்ரீக ரீதியாக ஒரு சுலபமான வழி உள்ளது. அது என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முதலில் இந்த பரிகாரத்திற்க்கு நமக்குத் தேவையான பொருள் தொட்டாசினிங்கி இலைகள். தொட்டாச்சுனிங்கி செடியிலிருந்து இலைகளை மட்டும் எடுத்து வந்தால் போதும். அதாவது வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டாம். அதில் இருக்கும் கிளைகளை மட்டும் உடைத்து வீட்டுக்கு எடுத்து வாருங்கள். அந்த செடியிலிருந்து இலைகளை மட்டும் உருவி தண்ணீரில் போட்டு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.

tailor-mechine

ஒரு சிறிய பாத்திரத்தில் நல்ல தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள் அந்த தண்ணீரில் 2 சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு கொள்ளுங்கள். இந்த மஞ்சள் தண்ணீரில் தொட்டாச்சிணுங்கி இலைகளை போட்டு உங்கள் கையைக் கொண்டு கசக்கி நன்றாக கலந்து விடுங்கள். தொட்டாசினிங்கி இலையிலிருந்து சாறு அந்த தண்ணீரில் இறங்க வேண்டும்.

- Advertisement -

இப்போது நமக்குத் தேவையான தீர்த்த தண்ணீர் தயாராகிவிட்டது. தொட்டாசினிங்கி சாறு இறங்கியிருக்கும் இந்த தண்ணீரை விற்காத பொருட்களின் மீது மூன்று முறை தெளித்து விட வேண்டும். உங்கள் கையாலேயே எடுத்து தெளிக்கலாம். உங்கள் வீட்டில் வெற்றிலை, மாயிலை இருந்தாலும் அதை வைத்து இந்த தீர்த்தத்தை விற்காத பொருட்களின் மீது தெளியுங்கள். (இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் அது உங்களுடைய இஷ்டம்தான்.)

thotta-sinungi1

என்னிடம் இருக்கும் இந்தப் பொருள் சீக்கிரமே நல்ல விலைக்கு விற்கப்பட வேண்டும் என்று மனதார குலதெய்வத்திடம் வேண்டி இந்த தண்ணீரை, விற்காத பொருட்களின் மேல் தெளிக்க வேண்டும். விற்காத வீடு நிலம் எதுவாக இருந்தாலும் சரி அதன் மேல் தெளித்து விடுங்கள். இதே போலவே, உங்கள் வீட்டிற்குள் பயன்படுத்தாமல் விற்பதற்காக ஏதேனும் சின்ன சின்ன பொருட்கள் வைத்து இருந்தாலும் அதன் மேல் இந்த தண்ணீரை லேசாக தெளித்து விட்டாலே போதும். அந்த பொருட்கள் அனைத்தும் சீக்கிரமே நல்ல விலைக்கு விற்கப்படும்.

thotta-sinungi

இதே போல் நிறைய பேர் கடைகளில் இருக்கும் பொருட்கள் விற்காமலேயே இருக்கும். குறிப்பாக அன்றாட காய்கறி வியாபாரம் செய்பவர்கள், பழ வியாபாரம் செய்பவர்கள் இவர்களுக்கெல்லாம் அன்றைய தினமும், அந்த பொருட்கள் விற்கவில்லை என்றால் நஷ்டம் தான். கெட்டுப்போகும் பொருட்கள் அல்லவா அது. இப்படி வியாபாரத்திற்காக நாம் வாங்கும் பொருட்கள் சீக்கிரமே விற்க வேண்டுமென்றால் கூட இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம். நல்ல பலன் கிடைக்கும். அதேசமயம் விற்காத பொருட்களை விற்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் கைவிடக் கூடாது. முயற்சியோடு சேரும் பரிகாரங்கள் கூடிய விரைவில் சீக்கிரமே நல்ல பலனைக் கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -