பூஜை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் வீட்டு தூரம் வருகிறதா? அப்போது தவறாமல் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். விரைவில் இந்தப் பிரச்சனை தீர்ந்து விடும்

pengal
- Advertisement -

வீட்டின் அனைத்து வேலையையும் செய்பவர்கள் அதிகமாக பெண்கள் தான். அவ்வாறு பூஜை செய்வதாக இருந்தாலும் அதில் முக்கிய பங்கு பெண்களுக்கு தான் இருக்கும். ஒரு வீட்டில் அன்றைய தினம் தீபாவளி, பொங்கல், அமாவாசை போன்ற விசேஷ நாட்கள் என்றால் காலை வீடு சுத்தம் செய்வது, பூஜை அறையை அலங்காரம் செய்வது, கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து ஆராதனை காண்பிப்பது வரை பெண்கள் தான் அனைத்தையும் செய்கின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் இவ்வாறான பூஜைகளில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு அல்லது வீட்டில் பூஜையே செய்ய முடியாத அளவிற்கு மாதவிடாய் வந்துவிடுகிறது. இதுபோன்ற நேரங்களில் பெண்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள். இதற்கு காரணம் உங்களுக்கு தெரியாமல் நீங்கள் செய்த சிறு தவறுகளால் உண்டான தோஷமாகும். இந்த தோஷத்தில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்.

pongal

பெண்கள் காலையில் குளித்து முடித்து பூஜை செய்ய தயாராக இருப்பார்கள். அவர்களுக்கு அந்த மாதம் அன்றைய தினம் மாதவிடாய்க்கான தினமாக இருக்காது. ஆனால் எதிர்பாராமல் அந்த நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டு விடும். அவ்வாறு கோவிலுக்கு புறப்படும் பொழுது, விசேஷங்களின் போது இவ்வாறான பிரச்சினைகள் பெண்களுக்கு உண்டாகின்றன.

- Advertisement -

இதற்கு காரணம் என்னவென்று அவர்களுக்குப் புரிவதில்லை. ஒருமுறை, இரண்டு முறை இவ்வாறு நடந்தால் சரி. ஆனால் தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களில் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றால் நிச்சயம் அவர்களுக்கு தோஷம் இருப்பது உறுதி. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அடிக்கடி சொல்லிக் கொடுப்பார்கள். வீட்டை பெருக்கி மூளையில் சேர்க்கக்கூடாது என்று. சில பெண்கள் பல வேலைகள் செய்தாலும் வீட்டை பெருக்குவதில் சற்று சோம்பேறித்தனமாக இருப்பார்கள்.

broom

அதனால் அந்த குப்பையை வாரி கொட்டாமல் மூளையில் சேர்த்து விட்டு, பிறகு செய்து கொள்ளலாம் என்று விட்டுவிடுவார்கள். இவ்வாறு செய்வது இவர்களுக்கு தோஷத்தை உண்டாக்கும். இந்த தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு ஒரு கட்டு அருகம் புல்லை வாங்கி ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு வீட்டின் ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

மறுநாள் குளிக்கும்போது சிறிதளவு அருகம்புல்லை எடுத்து செல்ல வேண்டும். பின்னர் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தலையில் தண்ணீரை ஊற்றுவதற்கு முன்பு அருகம்புல்லை தலையில் வைத்து இரண்டு, மூன்று முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு எப்பொழுதும் போல குளித்து முடிக்க வேண்டும்.

Arugampul juice benfits Tamil

பின்னர் இறுதியாக அந்த அருகம்புல்லை குப்பையில் போட்டு விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் ஸ்நானம் செய்ய வேண்டும். ஒன்பது கிரகங்களில் எந்த கிரகத்தின் மூலம் இந்த தோஷம் ஏற்பட்டு உள்ளதோ அது நிவர்த்தியாக வேண்டும் என்பதற்காக தான் ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பூஜை மற்றும் விசேஷங்களின் போது வீட்டு தூரம் வருவது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -