தொழில் முன்னேற்றத்திற்கான தடைகள் விலகி, தொழிலில் நல்ல லாபம் கிடைக்கவும், பணம் பெருகவும் இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்

cow
- Advertisement -

நாம் பிறருக்கு எந்தவித துன்பம் செய்யவில்லை என்றாலும், நமது வாழ்க்கையை மட்டும் வளமாக வாழ முயற்சி செய்து கொண்டிருந்தாலும் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் அவ்வாறு இருப்பதில்லை. ஒரு மனிதன் மற்றொரு மனிதனை பார்த்து அவனது வளர்ச்சியை கண்டு பொறாமைப் படுகிறான். ஒருவனின் வளர்ச்சி மற்றவனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இதன் மூலம் போட்டியும், பொறாமையும் உருவாகிறது. இதனால் நம்மை அறியாமலேயே நமக்குப் பின்னால் பல எதிரிகள் உருவாகிறார்கள். இவர்கள் நமக்குத் தெரியாமல் பலவித வழிகளில் நமது முன்னேற்றத்தை தடுப்பதற்காக பல வேலைகளை செய்து வருவார்கள். இதுபோன்ற விஷயங்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் இந்த எளிய பரிகாரத்தைச் செய்து சிறந்த பலனைப் பெறுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பணம் பெருகுவதற்கும், தொழில் சிறப்புடன் அமைவதற்கும் இந்த பரிகாரத்தை வீட்டிலேயும் செய்து பலன் பெறலாம். அல்லது தொழில் செய்யும் வியாபார ஸ்தளத்திலும் செய்யலாம். அதற்காக முதலில் வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தில் சத்விக் சக்கரத்தை வரைய வேண்டும். பின்னர் இதனை சுற்றி மஞ்சள் குங்கும பொட்டு வைக்கவேண்டும். வீட்டில் இதனை வரைவதற்கு இடமில்லை என்றால் இதனை ஒரு பேப்பரில் வரைந்து வீட்டின் பூஜை அறையில் ஒட்டி வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் தினமும் காலை காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி ஒரு கைப்பிடி பச்சை அரிசி மற்றும் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை வைத்து படைக்க வேண்டும். இதனை வீட்டில் செய்வதாக இருந்தால் வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் இந்த பூஜையை துவங்கி தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர வேண்டும்.

அதுவே தொழில் செய்யும் இடத்தில் செய்வதாக இருந்தால் காலையில் அல்லது மாலை வேளையில் இவ்வாறு அரிசி மற்றும் வெல்லம் நெய்வேத்தியம் படைத்து பூஜை செய்து விட வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் செய்து முடிக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து படைத்து வந்த அரிசி மற்றும் வெல்லத்தை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த அரிசி மற்றும் வெல்லத்தை பசுமாட்டிற்கு உணவாக வழங்க வேண்டும். பசுமாடு அவற்றை முழுவதுமாக உண்டு முடிக்கும் வரை அவற்றின் அருகிலேயே இருக்க வேண்டும். அரிசி மற்றும் வெல்லத்தை பசுமாடு முழுவதுமாக சாப்பிட்டு முடிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்துவர உங்கள் தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் விலகி நல்ல முன்னேற்றம் கிடைக்கும் பணம் பல மடங்கு பெருக ஆரம்பிக்கும் எனவே இந்த எளிய பரிகாரத்தை செய்து உங்கள் வியாபாரம் நல்ல முறையில் வளர்ச்சி அடைவதற்கும் உங்கள் வீட்டில் பணம் எப்பொழுதும் பெருகி வறியவன் வாழ்த்தி இந்த பதிவினை முடித்துக் கொள்கிறோம்.

- Advertisement -