இந்த சூட்சும ரகசியத்தை மட்டும் தெரிந்து கொண்டால் உங்கள் வியாபாரத்தில் சரிவு என்பதே இருக்காது. பணம் கொட்டிக் கொண்டே இருக்கும்

dhurgai
- Advertisement -

ஒரு சிலர் பலவாறு புலம்பி கொண்டிருப்பார்கள். எனது கணவர் தினமும் தவறாமல் வேலைக்கு செல்கிறார், அவ்வளவு கடினமாக உழைக்கிறார், காலை முதல் இரவு வரை சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் வேலை பார்க்கிறார், இருப்பினும் வருமானம் என்பது போதிய அளவில் இருப்பதில்லை, அதில் போதுமான லாபம் கிடைக்கவில்லை, வருகின்ற வேலை பாதியிலேயே நின்று விடுகிறது, இப்படி புலம்பிக் கொண்டிருப்பதைப் கேட்டிருப்போம். இவ்வாறு தொழில் மற்றும் வேலை செய்யும் இடத்தில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் நமது கிரக நிலைகளாகவும் இருக்கலாம். அல்லது நாம் செய்த கர்மாக்களின் காரணமாக நமது வாழ்க்கை கொஞ்சம் சிக்கல் நிறைந்ததாகவும் இருக்கலாம். இப்படி எந்தவித காரணமாக இருந்தாலும் அவற்றை உடனே நிவர்த்தி செய்ய இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒரு சிலர் நன்றாக வேலைக்கு சென்று கொண்டிருப்பார்கள். அவர்கள் எதிர்பாராத நேரத்தில் வேலை செய்யும் இடத்தில் புதிய புதிய சிக்கல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். ஒரு நேரத்தில் இந்த வேலையை விட்டு விடலாம் என்கின்ற நிலைமை கூட ஏற்படும். ஆனால் வேலையை விட்டு விட்டால் அவர்களின் வாழ்வாதாரம் என்பது கேள்விக்குறியாக மாறிவிடும்.

- Advertisement -

அதுபோலத் தான் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென எதிர்பாராத சரிவுகள் ஏற்படும். இதற்கு முதலில் உங்கள் ஜாதகத்தை சரி பார்த்து, அதில் கிரகதோஷம் இருந்தது என்றால் அந்த கிரகத்திற்கு உரிய தெய்வங்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும். அப்படியும் சரியாகவில்லை எனில் செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று, செவ்வாய் கிரகத்திற்கும், முருகப்பெருமானுக்கும் விளக்கு ஏற்றி வணங்கி வர வேண்டும்.

முருகப்பெருமான் தொழில் மற்றும் வியாபாரத்திற்க்கு உரிய கடவுள் ஆவார். இவரை வணங்கி வர உங்கள் வேலை மற்றும் தொழிலில் எந்தவித சிக்கல்களும் இல்லாமல் லாபம் மட்டுமே கிடைக்கும். இதையும் தாண்டி சிக்கல்கள் இருந்தால் துர்க்கை அம்மனுக்கு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -

நாட்டு மருந்து கடையில் சந்தன கட்டையை வாங்கிக் கொண்டு, அதனை உங்கள் வீட்டில் சுத்தமான இடத்தில் தேய்த்து சந்தன பேஸ்ட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை கோவிலுக்கு எடுத்துச் சென்று, விஸ்வரூப அம்பிகையாக இருக்கும் துர்க்கை அம்மனின் திருஉருவம் முன்பு நின்று முதலில் அந்த சந்தனத்தில் இருந்து ஒரு பொட்டு எடுத்து அம்மனின் நெற்றியில் வைக்க வேண்டும்.

பின்னர் மீதமிருக்கும் சந்தனப்பேஸ்ட்டை அம்மனின் இரண்டு கைகளின் விரல் நகங்களிலும் வைத்துவிட வேண்டும். பிறகு துர்க்கை அம்மனின் கால்விரல் நகங்களிலும் அதேபோல் வைக்க வேண்டும். அதாவது பெண்கள் தங்கள் கையில் எப்படி மருதாணி வைத்துக் கொள்கிறார்களோ அதேபோல் அம்மனின் கைகளிலும், கால்களிலும் வைத்துவிட வேண்டும். இதில் மனம் மகிழ்ந்து துர்கை அம்மன் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வாள். விரைவில் உங்கள் வியாபார சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும்.

- Advertisement -