கடையில் சரியாகவே வியாபாரம் நடக்கவில்லையா? கடைவாசலில் இந்த பொடியை தூவி விடுங்கள் போதும். பெரிய நஷ்டத்தில் முடங்கிக் கிடக்கும் வியாபாரம் கூட நல்ல லாபத்தை தரும்.

viyabaram
- Advertisement -

நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. நன்றாக வியாபாரம் நடந்து கொண்டிருந்த கடையில் இப்போது சுத்தமாக வியாபாரமே இல்லை. வியாபார வசியம் ஏற்பட என்ன செய்வது. நஷ்டத்தில் இருக்கும் தொழிலை லாபகரமாக மாற்ற நாம் செய்ய வேண்டிய சுலபமான தாந்த்ரீக பரிகாரம் என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள் சொந்தமாக தொழில் செய்கிறீர்கள் உங்களுக்கு சொந்தமாக கடை, தொழிற்சாலை ஏதோ ஒன்று உள்ளது. அதில் லாபம் குறைவாக வருகிறது, அல்லது லாபமே வருவதில்லை நஷ்டத்தில் செல்கிறது என்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

viyabaram

இரவு உங்களுடைய கடையை அடைப்பதற்கு முன்பு, நீங்கள் தொழில் செய்யும் அந்த இடத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சுத்தம் செய்துவிட்டு அதன் பின்புதான் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு வரவேண்டும். மறுநாள் காலை கடை திறப்பதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்து விட்டு அதன் பின்புதான் கடையின் முதலாளி கடைக்குள் செல்ல வேண்டும். கடையின் முதலாளி கையால்தான் இந்த பரிகாரத்தை செய்யவும் வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய கடையில் வேலை ஆட்கள் இருந்தால் பிரச்சனை இல்லை. காலையிலேயே அவர்கள் வந்து கடையை சுத்தப்படுத்தி திறந்து வைத்திருப்பார்கள். நீங்கள் கடைக்கு உள்ளே செல்லும்போது இதை செய்துவிட்டு கடைக்கு உள்ளே செல்லவேண்டும். இந்த பரிகாரத்திற்க்கு நாம் பயன்படுத்த போகும் பொடி கோதுமை மாவு.

shop-owner

நீங்கள் கடையின் உரிமையாளர். வீட்டில் இருந்து கடைக்கு செல்லும் போது, கொஞ்சம் கோதுமை மாவை உங்கள் கையில் எடுத்து செல்ல வேண்டும். கடையின் நிலை வாசலில் இரண்டு பக்கத்திலும் இந்த கோதுமைமாவு பொடியை தூவி விட்டு அதன் பின்புதான் கடையின் உரிமையாளர், கடைக்கு உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் அமர வேண்டும்.

- Advertisement -

ஒருவேளை உங்களுடைய கடையில் வேலை செய்பவர்கள் யாரும் இல்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் கடைக்கு சென்று முதலில் கடையை திறந்து விடுங்கள். அதன் பின்பு நிலைவாசலில் இந்த பொடியை தூவி விட்டு, அதன்பிறகுதான் கடைக்கு உள்ளே நுழைய வேண்டும். கடைக்கு உள்ளே சென்று விட்டு, மீண்டும் வெளியே வந்து கோதுமை பொடியை தூவி விட்டால் இந்த பரிகாரம் பலன் தராது.

Gothumai

தினமும் இந்த பரிகாரத்தை செய்து விட்டு அதன் பின்பு கடைக்குள் செல்ல வேண்டும். கோதுமை பொடியை தூவி விட்டு கடைக்கு உள்ளே சென்று நீங்கள் கல்லாப்பெட்டியில் அமர்ந்து கொள்ள வேண்டும். உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து கடையிலிருந்து வெளியே சென்றுவிடக் கூடாது. வரக்கூடிய வியாபாரத்தை கவனித்து கல்லாப்பெட்டியில் வருமானத்தை போட்டு, ஒரு 2 மணி நேரம் கழித்து அதன் பின்பு கடையில் இருந்து வெளியே செல்வதாக இருந்தால் செல்லலாம்.

- Advertisement -

shop

வீதியில் கடை வைத்து இருக்கிறார்கள் அல்லவா. தள்ளுவண்டி கடைக்கு இந்த பரிகாரம் பயனுள்ளதாக அமையாது. கதவு போட்டு அமைப்பு உள்ள கடைகளுக்கு தொழிற்சாலைகளுக்கு மட்டுமே இந்த பரிகாரம் பலன் தரும்.

shop

வியாபார வசியம் ஜன வசியம் இவைகளுக்கு தாந்திரீக ரீதியாக சொல்லப்பட்டுள்ளன சுலபமான பரிகாரம் முறைகளில் இதுவும் ஒன்று. கண் திருஷ்டியின் மூலம் உங்களுடைய கடையில் வியாபாரம் ஆகாமல் இருந்தாலும் சரி, அல்லது வேறு ஏதேனும் எதிர்மறை ஆற்றலின் மூலம் உங்களுடைய வியாபாரத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு இருந்தாலும் சரி உங்களுடைய கெட்ட நேரத்தில் வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்றாலும் சரி, எல்லாவற்றையும் சரி செய்யக் கூடிய சக்தி இந்த கோதுமைமாவு பரிகாரத்திற்கு உண்டு.

cash

தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் இந்த தாந்திரீக பரிகாரத்தை உங்களுடைய கடையில் செய்து வாருங்கள். நிச்சயமாக வியாபாரத்தில் வித்தியாசத்தை உணர்வீர்கள். நம்பிக்கையோடு செய்யக் கூடிய பரிகாரங்கள் எதுவாக இருந்தாலும் அது நமக்கு பல மடங்கு பலனை கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -