உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருந்தால் உடனே இதனை மட்டும் செய்திடுங்கள்

viyabaram
- Advertisement -

தொழில் செய்யும் இடம் என்பது நாம் பூஜை செய்யும் இடத்திற்கு சமமாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருந்தால் மட்டுமே குடும்பமும், நமது வாழ்க்கையும் நல்ல விதமாக அமையும். அப்படி ஒருவரின் வாழ்க்கைக்கு ஆணிவேராக அமையும் வருமானம் தரக்கூடிய அந்த இடம் எப்பொழுதும் நல்ல மகாலட்சுமி கடாட்சத்துடன், மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அங்கு வந்த அனைவரும் மகிழ்ச்சியாகவும், நேர்மறை எண்ணம் நிறைந்தவராகவும் மாறிவிட வேண்டும். இப்படி இல்லாமல் எப்பொழுதும் வேலை செய்யும் இடம் சற்று மந்தமாக, சுறுசுறுப்பாக இல்லாமல் இருந்தால் தொழிலில் முன்னேற்றம் என்பது இருக்காது. நாம் செய்ய நினைக்கும் காரியம் அனைத்திலும் ஏதாவது ஒரு தடை வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்ட தரித்திர நிலை விலகுவதற்கு இந்த பரிகாரத்தை செய்து பலன் பெற முடியும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

poojai arai

காலை எழுந்து குளித்து முடித்து, நன்றாக துணி அணிந்து கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு வந்து விடுவோம். இன்று அலுவலகத்திற்கோ அல்லது வியாபார ஸ்தலத்திற்கோ சென்றவுடன் இந்த பணியை முதலில் செய்ய வேண்டும். இவ்வாறான வேலைகளை இப்படிப்பட்ட முறையில்தான் செய்ய வேண்டும். என்று பலவித முன்னேற்பாடுகளுடன் சென்றிருப்பீர்கள். அங்கு சென்றவுடன் அப்படிப்பட்ட எண்ணமே உங்களுக்கு வராமல் போய்விடும்.

- Advertisement -

உடன் வேலை செய்பவர்களும் எந்தவித சுறுசுறுப்பும் இல்லாமல் மந்தமாகவே இருப்பார்கள். மனமும் சரி, உடலும் சரி எதற்கும் தயாராக இல்லாமல் சோம்பலாக இருக்கும். நம்மைத் தேடி வியாபாரம் பேச வருபவர்களும் நமது இடத்திற்கு வந்தவுடன் அவர்களின் முடிவை மாற்றிக் கொள்வார்கள். அதனைப் பற்றி பேசாமல் திரும்பி சென்று விடுவார்கள். இப்படி இருக்கும் நிலையை சரியாக கவனித்து அதற்கான பரிகாரத்தை செய்யாமல் இருந்தோம் என்றால் நமது வாழ்க்கை மேன்மேலும் பிரச்சனைகுரியதாக மாறிவிடும்.

uppu

இதற்கு காரணம் என்னவென்று யோசித்தால் பலரின் கண் திருஷ்டியாகவும் இருக்கலாம், மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமை படுவதாகவும் இருக்கலாம், தொழில் போட்டியின் காரணமாக எதிரிகள் உங்களை வளர விடாமல் இருப்பதற்கு ஏதேனும் எதிர்மறை விஷயங்களையும் செய்திருக்கலாம். இவை என்ன என்று தெரிந்து கொள்வதை விட இவற்றின் கெடுபலனில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ஒரு எளிமையான பரிகாரத்தை மட்டும் தொடர்ந்து செய்தால் போதும்.

- Advertisement -

காலையில் முதன்முதலில் கடையாக இருந்தாலும், கம்பெனியாக இருந்தாலும் திறந்தவுடன் ஒரு சிறிய டப்பாவில் எலுமிச்சை அளவு கூடம் புளி மற்றும் ஒரு கைப்பிடி கல் உப்பை தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். கொடம்புளி என்பது முந்தைய காலத்தில் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்ததாகும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அவை முழுவதுமாக தண்ணீரில் கரைந்தவுடன் அதில் இருக்கும் சக்கைகளை எடுத்து தூரமாக போட்டு விட்டு அந்த தண்ணீரை கடையின் உள் பகுதியிலிருந்து வாசல்வரை தெளித்து வர வேண்டும்.

kodmpuli

கடையில் எத்தனை அறைகள் இருந்தாலும் அங்கு முழுவதுமாக தெளித்து விட்டு, இறுதியாக வாசல் புறம் வந்து மீதம் இருக்கும் தண்ணீரை ஊற்றி விட வேண்டும். இப்படி தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கண் திருஷ்டி, பொறாமை இவை தவிர எந்த வித எதிர் மறை சக்திகள் இருந்தாலும் அவை உங்களை விட்டு விலகி தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

- Advertisement -