வியாழக்கிழமை பூஜையறையில் 1 டம்ளர் தண்ணீரை இப்படி வைத்தாலே போதும். விரைய செலவு வேகமாக குறையும்.

guru
- Advertisement -

நிறைய பணத்தினை சம்பாதிப்பது கூட அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. ஆனால், சம்பாதித்த பணத்தை வீண் விரயம் செய்யாமல் பாதுகாப்பாக வைப்பது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம். எல்லோருக்கும் வருமானம் வருகின்றது. ஆனால் வரக்கூடிய வருமானத்திலிருந்து செய்யக்கூடிய செலவு நன்மைக்காக மட்டும்தான் செய்யப்படுகிறதா? என்று கேட்டால் நிச்சயமாக கிடையாது. வரக்கூடிய வருமானத்தில் பாதி மருத்துவச் செலவுக்கே சரியாக போகின்றது. மீதி இருக்கக்கூடிய பணத்தையாவது சேமித்து வைக்கலாம் என்று பார்த்தால் அடுத்து அடுத்து ஏதாவது ஒரு வீண் விரய செலவுகள் வந்து கழுத்தை நெறிக்கும். இதில் இருந்து எப்படி தப்பிப்பது.

ஒரு சுலபமான ஆன்மீக ரீதியான பரிகாரம் உள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம். வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள் என்பது நாம் எல்லோருக்குமே தெரியும். இந்த வியாழக்கிழமை அன்று குரு பகவானை வழிபாடு செய்பவர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். குருபகவானுக்கு மஞ்சள் நிறம் உகந்தது என்பதால், உங்கள் வீட்டின் அருகில் தட்சிணாமூர்த்தி சன்னிதானம் இருக்கும் கோவிலுக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை வாங்கி கொடுத்து மஞ்சள் நிற பிரசாதத்தை நிவேதனம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்பது மிகவும் சிறந்ததொரு பலனை கொடுக்கும். அப்படி இல்லை என்றால் நவகிரகளில் இருக்கும் குருவுக்கு கூட இதே பரிகாரத்தை செய்யலாம். இப்படி குரு பகவானை வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்வில் செல்வவளம் நிறைவாக இருக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக வியாழக்கிழமை அன்று வீட்டில் செய்யக்கூடிய பரிகாரத்தையும் தெரிந்து கொள்வோம். வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். வழக்கம்போல தான், பூஜை செய்ய வேண்டும் என்றால் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜையை தொடங்குங்கள். பூஜை அறையில் அமர்ந்து தீபம் ஏற்றி வைத்து விட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீரை உங்கள் முன்பு வைத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள். அந்த தண்ணீரின் நிறம் கூட மாற வேண்டாம். சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளை தண்ணீரில் சிட்டிகை அளவு போட்டுக் கொள்ளலாம்.

மஞ்சள் போட்ட இந்த தண்ணீரை உங்களுக்கு முன்பாக வைத்துவிட்டு மனதார வீண் செலவு குறைய வேண்டும் என்ற வேண்டுதலை குரு பகவானிடம் வையுங்கள். பிறகு உங்களுக்கு எந்த பண கஷ்டம் இருந்தாலும், அதை சொல்லி அந்த கஷ்டம் தீருவதற்கு பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

- Advertisement -

வேண்டுதலை முடித்துவிட்டு தீப தூப ஆராதனைகள் செய்து விட்டு இந்த தண்ணீரை எடுத்து நீங்கள் குடித்து விடுங்கள். இந்த பூஜை செய்ய குருபகவானின் படம் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபச் சுடரே குருபகவானாக எண்ணிக் கொள்ளுங்கள்.

11 வாரம் வியாழக்கிழமை நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் படிப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய வீண் விரயச் செலவுகள் குறையத் தொடங்கும். சேமிப்பில் பணம் இரட்டிப்பு மடங்காக உயரும். ஒரே ஒரு டம்ளர் தண்ணீருக்கு எப்படிங்க இதெல்லாம் நடக்கும் என்ற சந்தேகம் ஒரு துளி இருந்தாலும், நீங்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பலன் கிடைக்காது. ஒரு டம்ளர் தண்ணீர் உங்கள் தலைவிதியை மாற்றும் என்ற நம்பிக்கை இருப்பவர்களுக்கு நிச்சயம் நற்பலன்கள் கிடைக்கும். மருத்துவ செலவோடு சேர்ந்த வீண் விரயச் செலவுகள் குறைய இந்த பரிகாரம் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -