வியாழக்கிழமை இதை செய்தால் உங்களுடைய வீட்டில் மங்கலம் உண்டாகும். மகிழ்ச்சி பெருகும். மகாலட்சுமியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

gold-manjal
- Advertisement -

நம்முடைய வீட்டில் மங்கலம் நிறைவாக இருப்பதற்கு, மகாலட்சுமி ஆசிர்வாதத்தை நிறைவாக பெறுவதற்கு, வீட்டில் செல்வக் கடாட்சம் தடையின்றி ஊற்றெடுகாக இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். இதை பரிகாரம் என்று சொல்லுவதை விட ஒரு சிறப்பான பூஜை. வீட்டிலேயே செய்யக்கூடிய பூஜை தான். ஆத்மார்த்தமாக இந்த பூஜையை ஐந்து வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தாலே உங்களுடைய வீட்டில் மகிழ்ச்சி பல மடங்கு பெருகும்.

வியாழக்கிழமை அன்று இந்த பூஜையை செய்ய வேண்டும். நேரம் என்பது உங்களுடைய விருப்பம் தான். காலை அல்லது மாலை எந்த நேரத்தை வேண்டும் என்றாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த பூஜைக்கு மகாலட்சுமியின் திரு உருவ சிலை அல்லது திருவுருவப்படம் எது இருந்தாலும் சரி. ஒரு மனப்பலகையின் மீது மஞ்சள் துணியை விரித்து அதன் மேலே மகாலட்சுமியின் திருவுருவ படத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்த திருவுருவப் படத்திற்கு மஞ்சளால் அர்ச்சனை செய்ய வேண்டும். திருவுருவ சிலையாக இருந்தால் மகாலட்சுமியின் பாதங்களில் படும்படி இந்த மஞ்சள் அர்ச்சனையை நம்மால் சுலபமாக செய்ய முடியும். திரு உருவப்படம் என்றால் அந்த மஞ்சள் மகாலட்சுமி பாதங்களில் சரியாக போய் சேராது. இருப்பினும் அந்த பாதங்களை தொட்டபடி மஞ்சளை போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அர்ச்சனைக்கு தேவையான மஞ்சள்துளை உங்கள் கையில் ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, நீங்களும் லட்சுமி தேவியை பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை மஞ்சள் தூளை எடுத்து மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் போடும்போதும், உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமி மந்திரத்தை சொல்லலாம். ‘ஓம் மகாலட்சுமி தாயே போற்றி’ ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி நமஹ’ இப்படி எந்த மந்திரத்தை சொன்னாலும் சரி.

108 முறை இப்படி மந்திரத்தை சொல்லி மஞ்சளால் மகாலட்சுமி தாயாரின் பாதங்களுக்கு அர்ச்சனை செய்து, இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். மஞ்சள் அர்ச்சனை செய்தீர்கள் அல்லவா அந்த மஞ்சளை எடுத்து ஒரு டப்பாவில் கொட்டி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வியாழக்கிழமை அன்றே மகாலட்சுமி பாதத்திலிருந்து மஞ்சளை எடுக்க வேண்டாம். அது அப்படியே இருக்கட்டும். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை இந்த மஞ்சளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டில் நிலை வாசல் படிக்கு இந்த மஞ்சளை வைத்து பொட்டு வைக்கலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த மஞ்சளை பூசி குளிக்கலாம். குளிக்கும்போது சிறிது மஞ்சளை குளிக்கின்ற தண்ணீரில் போட்டும் குளிக்கலாம். இந்த மஞ்சள் கலந்த தண்ணீரில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆண்கள் கூட குளிக்கலாம் தவறு கிடையாது. இந்த மஞ்சளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வர உங்களுடைய வீட்டில் மங்கலம் உண்டாகும். சுபிட்சம் உண்டாகும். மகாலட்சுமியின் அருட்கடாட்சம் வீட்டில் இருக்கும். பெண்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். அந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்த மஞ்சள் தான் அது.

இந்த பூஜையை எத்தனை வாரம் செய்வது. உங்களுடைய விருப்பம் தான். 5 வியாழக்கிழமைகள், 7 வியாழக்கிழமைகள் இப்படி உங்களால் எத்தனை வாரம் இதை செய்ய முடியுமோ அத்தனை வாரங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்குவதை உங்களாலேயே உணர முடியும். நிறைய குடும்ப கஷ்டம் இருக்கும் அல்லவா. அந்த கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து வீட்டில் மங்கலம் உண்டாக இந்த சின்ன வழிபாட்டு முறையே போதும்.

- Advertisement -