வியாழக்கிழமை அன்று ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி குடித்து விட்டால், வாழ்வில் வீழ்ச்சி என்பதே இருக்காது. வெற்றியும் அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் நிற்க தவமிருக்கும்.

guru
- Advertisement -

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லுவார்கள். அந்த குரு பகவானின் ஆசிர்வாதத்தை எளிமையாக பெறுவதற்கு உண்டான ஆன்மீகம் சார்ந்த சில வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். குழந்தைகள் சரியாக படிக்கவில்லை, குழந்தைகள் புத்திசாலித்தனத்தோடு நடந்து கொள்ளவில்லை, எல்லா விஷயத்திலும் குழந்தைகள் பின்தங்கியே இருக்கிறார்கள், என்றால் அவர்களை முன்னுக்கு கொண்டு வர இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டில் சுபகாரிய தடை உள்ளது. வருமானத்தில் பிரச்சனை, நிரந்தர வேலை இல்லை, செய்யக்கூடிய வேலையிலும் தொடர்ந்து பிரச்சனை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். வாழ்வில் எல்லாவிதமான வளமும் பெற இந்த சின்ன சின்ன பரிகாரங்களே செய்தாலே போதும்.

குருவின் ஆசிர்வாதத்தை பெற பரிகாரம்:
முதலில் குழந்தைகளுக்கான பரிகாரத்தை பார்த்து விடுவோம். குரு என்றாலே அது மஞ்சள் நிறத்தை குறைப்பது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற வாழைப்பழத்தை வாங்கிக் கொண்டு போய் குரு பகவானின் பாதங்களில் வைத்து உங்கள் பிள்ளையின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, உங்களுடைய குழந்தையின் கையாலேயே அந்த வாழைப்பழத்தை கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் ஏழைகளுக்கு அந்த மஞ்சள் நிற வாழைப்பழத்தை தானமாக கொடுக்கலாம். அல்லது ஆசிரமங்களுக்கும் உங்கள் கையாலேயே அந்த வாழைப்பழத்தை தானமாக கொடுங்கள்.

- Advertisement -

குழந்தைகள் இருக்கக்கூடிய ஆசிரமங்கள் எத்தனையோ இருக்கிறது அல்லவா. அந்த இடத்தில் இந்த தானத்தை செய்வது மிக மிக சிறப்பு. வியாழக்கிழமை அன்று இதை செய்ய வேண்டும். குரு பகவானுக்கு உண்டான காரகப் பொருட்களில் சீரகமும் அடங்கும். ஆகவே உங்களுடைய குழந்தைகளுக்கு தினம்தோறும் சாதாரண தண்ணீரை குடிக்க கொடுப்பதை காட்டிலும், சீரகத் தண்ணீர் கொடுக்கலாம். பொதுவாகவே இந்த சீரக தண்ணீருக்கு பவர் அதிகம். ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். கேரளாவில் சாதாரணமாகவே தண்ணீர் குடிக்கும் போது அதில் சீரகத்தை போட்டு காய்சி தான் குடிப்பார்கள் என்பது நமக்கு தெரியும் அல்லவா.

தினமும் இந்த சீரகத் தண்ணீரை குடிக்க முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை. வாரத்தில் ஒரு நாள் குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி வியாழக்கிழமை காலை குரு பகவானை நினைத்து, 1 டம்ளரை  சீரகத் தண்ணீரை குடிப்பது மிகவும் நல்ல பலனை கொடுக்கும். இது குரு பகவானின் ஆசிர்வாதத்தை நிச்சயமாக பெற்று தரும். ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சமாக சீரகம் போட்டு கொதிக்க வைத்தால் அந்த தண்ணீர் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். அந்த தண்ணீர் ஆறிய பின்பு குடித்து விடுங்கள் அவ்வளவுதான்.

- Advertisement -

பெரியவர்களும் இந்த மஞ்சள் வாழைப்பழ தானத்தை கொடுக்கலாம். மஞ்சள் நிறத்தில் பிரசாதம் செய்து, அதை குரு பகவானுக்கு நிவேதனம் வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதன் மூலம் குருபகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற முடியும். ஒரு சிறிய மஞ்சள் துணியில் கொஞ்சமாக சீரகம் வைத்து முடித்து போட்டு எப்போதுமே உங்களுடைய கையில் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு வெற்றியையும் அதிர்ஷ்டத்தையும் ஈர்த்துக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த இரண்டு பொருட்கள் மட்டும் உங்கள் மணி பர்ஸில் இருந்தால் போதும், பணம் நிரம்பி வழிவதுடன், அதிர்ஷ்டத்தையும் எப்போதும் உங்களுக்கு தந்து கொண்டே இருக்கும்.

குரு பகவான் என்பது நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானையும் குறிக்கும். தக்ஷிணாமூர்த்தி இறைவனையும் குறிக்கும். எந்த குருவுக்கு வேண்டும் என்றாலும் நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். எளிமையான இந்த ஆன்மீக தகவல் மீது நம்பிக்கை இருந்தால் செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -