தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கி உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிகள் குவிய விநாயகருக்கு எளிமையான இந்த எருக்கம் இலை வழிப்பாட்டை செய்தாலே போதும்.

erukkan-poo-vinayagar
- Advertisement -

எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாகவும் நாம் முழு முதல் கடவுளான விநாயகரை வணங்கியே செய்ய ஆரம்பிப்போம். அவ்வாறு செய்வதன் மூலம் அந்த காரியம் வெற்றி அடையும் என்று நம்பப்படுகிறது. ஒரு காரியத்தை நாம் செய்வதற்கு முன்பாக அதை செய்வதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வோம். அவ்வாறு முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது எந்த முறையில் விநாயகரை வழிபட்டால் அந்த முயற்சிகள் வெற்றியடையும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

முயற்சிகள் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு:
மனிதர்களான நாம் பல முயற்சிகளை மேற்கொள்வோம். அந்த முயற்சிகளில் எது வெற்றியை தருகிறதோ அந்த செயலையே நாம் செயல்படுத்துவோம். பல பேருக்கு எவ்வளவு தான் முயற்சிகள் செய்தாலும் அந்த முயற்சி தோல்வியை சந்திக்க நேரிடும். அவ்வாறு தோல்வியை சந்திக்கும் நபர்கள் விநாயகரை தொடர்ந்து மூன்று வாரம் திங்கட்கிழமைகளில் பின்வரும் முறையில் வழிபடுவதன் மூலம் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். ஒரு செயலை செய்யலாமா என்று யோசிக்கும் பொழுதே இந்த வழிபாட்டு முறையை நாம் மேற்கொண்டோம் என்றால் அந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும்.

- Advertisement -

திங்கட்கிழமை பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து நீராடி விட்டு, பூஜை அறையில் இருக்கும் விநாயகர் சிலைக்கு சுத்தமான தண்ணீர் மற்றும் பசும்பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு விநாயகர் சிலைக்கு சந்தனத்தால் அலங்காரம் செய்ய வேண்டும். குங்குமம் இட வேண்டும். அருகம்புல் மாலையை விநாயகருக்கு சாற்ற வேண்டும். எருக்கம் பூ கிடைத்தால் ஐந்து எருக்கம் பூக்களை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு ஒரு எருக்கம் இலையை பறித்து வந்து சுத்தம் செய்து, அலங்காரம் செய்து வைத்திருக்கும் விநாயகர் சிலைக்கு முன்பாக அந்த இலையை வைக்க வேண்டும். பிறகு அதில் ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விநாயகர் சிலை இல்லாதவர்கள் விநாயகரின் புகைப்படத்திற்கு முன்பாக இந்த பூஜையை செய்ய வேண்டும். பிறகு விநாயகர்குரிய துதி பாடல்கள் பாட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு நாம் தொடர்ந்து மூன்று வாரங்கள் விநாயகர் பெருமானை வழிபடுவதன் மூலம் நாம் எடுக்கப் போகும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த வழிபாட்டை நாம் செய்வதால் நம் வீட்டில் சண்டை சச்சரவு எதுவும் ஏற்படாது. மேலும் குழந்தைகள் நம் பேச்சை கேட்பார். குழந்தைகள் படிப்பில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் தொடர்ந்து தோல்விகள் ஏற்பட்டிருக்கும் நிலையும் மாறும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பணம் நகை குவியலாக சேர வியாழக்கிழமையில் வெந்தியத்தை இத்துடன் சேர்த்து கட்டி வைத்து விடுங்கள். எப்போதும் பொன்னனும் பொருளும் உங்களை நாடி வந்து கொண்டே இருக்க எளிமையான பரிகாரம்.

இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து தும்பிக்கை முகத்தானை நம்பிக்கையுடன் வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் பல வெற்றிகளை சுலபமாக அடைவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் முயற்சிகள்யாவும் வெற்றி பெற இந்த வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -