- Advertisement -

உன் விழி எனும் சிறையினில்
நான் வந்து உறங்கிட..
உன் அமுதூட்டும் பேசினில்
என்னை கட்டி அணைத்திட..
மௌனத்திலும் உதடுகள்
என் பெயரை சொல்லிட..
உன் இதய கூட்டுக்குள் இந்த
ஏழைக்கு ஒரு இடம் வேண்டும் அன்பே..

இதையும் படிக்கலாமே:
இதய கூட்டில் அவள் – காதல் கவிதை

- Advertisement -
kadhal kavithai Image

காதலிக்க பலரும் ஆசைப்படுவதுண்டு. ஆனால் காதலை வெளிப்படுத்த தான் பலரும் தயங்குவதுண்டு. தன் காதலை அவர் ஏற்பாரா மாட்டாரா என்ற தயக்கம் எல்லோருக்கும் இருப்பதுண்டு. அதிலும் குறிப்பாக நண்பர்களுக்கு இடையே காதல் மலர்ந்தால் அதில் பல சிக்கல்கள் இருக்கும். அவர்கள் நம்மை காதலிப்பது போலவும் இருக்கும், விலகி செல்வது போலவும் இருக்கும். ஒரு முடிவிற்கே வராத தொடர்கதையாக இருக்கும் நண்பர்கள் காதல்.

இப்படி காதல் வலையில் சிக்கி, தன் காதலை எப்படியாவது வெளிப்படுத்தி விட வேண்டும் என்று துடிக்கும் அனைத்து காதல் உள்ளங்களுக்கும் இந்த கவிதை சமர்ப்பணம். இந்த கவிதையை கொண்டு கூட நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்தலாம்.

Love kavithai image

காதல் கவிதைகள், காதல் தோல்வி கவிதைகள், அன்பை உணர்த்தும் கவிதைகள் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -