இதய கூட்டில் இருந்து என்னை
தூக்கி எறிந்துவிட்டாள்..
அவளின் இதய துடிப்பே நான் தான்
என்பதை அறிய மறந்த அவள்
இதயமில்லாமல் இனி எப்படி
வாழப்போகிறாளோ தெரியவில்லை.
காதலின் நினைவுகளோடும்
காயப்பட்ட இதயத்தோடும்
வாழ்வதா இல்லை வாழ்வது போல
நடிப்பதா என்று தெரியாமல்
திசை தேடி பறக்கும் பறவையாய் நான்.
இதையும் படிக்கலாமே:
என் விழியன் கனவில் புது உலகம் – காதல் கவிதை
காதலிக்கும் இருவர் சில சூழ்நிலைகளால் பிரிவது இயல்பு என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் வலியும் வேதனையும் அவரவருக்கு வந்தால் தான் புரியும். அதிலும் காதல் தரும் வலிக்கு எல்லை இல்லை. காதலியோ அல்லது காதலனோ பெற்றோரோர்களுக்காக தன் காதலை துறந்து இனொருவரை கை பிடிக்கின்றனர். இதில் ஒரு மனதை எரித்து திருமணத்தை செய்கிறோம் என்ற எண்ணம் பலருக்கு இருப்பதை என்பது உண்மை. காதலிப்பது தவறல்ல என்பதை பெற்றோர்கள் உணர்ந்தால் போதும் காதலர்கள் நீடுடி வாழ்வர்.
இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், நட்பு ரீதியான கவிதைகள், அன்பை போற்றும் கவிதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.