வியாபாரம் நடக்க துர்க்கை வழிபாடு

durgai
- Advertisement -

ஒருவர் வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கின்றார். அவருடைய கடைக்கு நிறைய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து சென்று வியாபாரம் செய்கிறார்கள். அந்த கடை ரொம்பவும் பிரபல்யமாக மாறுகிறது என்றால், ஒரு சில காலகட்டத்திற்கு பின் அந்த கடையில் வியாபாரம் ஒன்றுமே இல்லாமல் போய்விடும். இதற்கெல்லாம் காரணம் கண்திருஷ்டி. இப்பதான் கடையை திறந்தாங்க. ஒரு வருடம் கூட முடியவில்லை. அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம்.

அதுக்குள்ள இவ்வளவு லாபம் சம்பாதித்துவிட்டார்கல், என்று ஊர் முழுவதும் பேசும்போது அந்த கண் திருஷ்டியால் அந்த வியாபாரம் அப்படியே படுத்து விடும். உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்குதா. உங்களுடைய வியாபாரம் நொடிந்து போய்விட்டதா. ஓஹோ என வியாபாரத்தை பார்த்த கடையில், கல்லா பெட்டியில் இப்போது ஈ ஓட்டுகிறதா. கஷ்டமே படாதீங்க. செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாளை இந்த முறைப்படி வழிபாடு செய்யுங்கள். திரும்பவும் நீங்கள் வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கலாம்.

- Advertisement -

வியாபாரம் நன்றாக நடக்க பரிகாரம்

செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். அம்பாளிடம் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும். கண்திருஷ்டி நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை வைக்க வேண்டும். கூடவே அம்பாளுக்கு அகல் விளக்கு ஏற்றி வையுங்க. ஒரு விளக்கு ஏற்றலாம் அல்லது இரண்டு விளக்கு ஏற்றலாம்.

நெய் விளக்கு ஏற்றலாம். நல்லெண்ணையில் விளக்கு போடலாம். அது உங்கள் சௌகரியம். விளக்கு ஏத்தணும். அம்பாளுக்கு செவ்வரளி பூக்களை வாங்கிக் கொண்டு போங்க. மல்லிகை பூ சீசன் இருந்தால் மல்லிகை பூ வாங்கலாம். கூடவே 1 எலுமிச்சம்பழம், 1 விரலி மஞ்சள். இந்த 2 பொருளையும் அம்பாளின் பாதங்களில் வைத்து தரும் படி கேளுங்கள்.

- Advertisement -

அந்த ராகு கால பூஜையில் சொன்னால் அர்ச்சகர் உங்களுக்கு இதை செய்து கொடுப்பார். ஒரு மஞ்சள் துணியில் அந்த எலுமிச்சம் பழத்தையும், விரலி மஞ்சளையும் வைத்து கட்டி உங்களுடைய கடையில் மாட்டி தொங்க விட வேண்டும். கடைக்கு நிலை வாசல் படி இருக்கும் அல்லவா. ஷட்டர் இருந்தால் அந்த ஷட்டருக்கு உள்பக்கமாக, சின்ன ஆணி அடித்து, இந்த முடிச்சை மாட்டி விடுங்கள்.

உங்கள் கடைக்கு கதவு தான் இருக்கிறது என்றால் கதவுக்கு உள் பக்கமாக இந்த முடிச்சை மாட்டி விடுங்கள். வாரம் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அன்று பழைய முடிச்சை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதியதாக இரண்டு பொருளையும் வாங்கி துர்க்கை அம்பாள் கோவிலில், அம்பாளின் பாதத்தில் வைத்து எடுத்து வந்து வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக மாசி மகம் குங்கும பூ பரிகாரம்

இதே போல தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்தால் உங்கள் கடை மேல் பட்ட கண் திருஷ்டி நீங்கும். நஷ்டம் அடைந்த உங்கள் வியாபாரம் ஓஹோ என நடக்கும். இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் துர்க்கை அம்பாலின் பாதங்களை பற்றிக் கொள்ளுங்கள் நல்லது நடக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -