செல்வம் பெருக மாசி மகம் குங்கும பூ பரிகாரம்

poojai arai cash
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் சில தமிழ் மாதங்கள் வழிபாட்டிற்கென ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் மாசி மாதமும் தெய்வ வழிபாட்டிற்கும் பூஜைக்கும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. மாசி மாதத்தில் வரக் கூடிய பல்வேறு விசேஷமான நாட்களில் மாசி மகமும் முக்கியமான ஒரு வழிபாட்டிற்குரிய நாள்.

மாசி மகம் புனித நீராடலுக்கு சிறப்பு வாய்ந்ததாக நாளாக கருதப்படுகிறது.இந்த மாசி மகமானது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் வரும் நாள் தான். இந்த வருடம் அதே நாளில் பௌர்ணமியும் இணைந்து வந்திருப்பது மிகவும் அற்புதமான நாளாக கருதப்படுகிறது. இது பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது தான் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

அத்தகைய நாளில் நம் வீட்டில் செல்வ வளம் பெருக இந்த ஒரு சிறிய பரிகார முறையை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் அடைந்து செல்வம் பெருக குங்குமப்பூ பரிகாரம்

எல்லா நாட்களிலும் நாம் இறைவனின் வழிபட்டாலும் கூட சில நாட்களில் ஒரு சில வழிபாடுகளும் பரிகாரங்களும் அதிக பலனை தருவதாக இருக்கும். அத்தகைய பலனை தரக்கூடிய நாளில் இந்த மாசி மகமும் முக்கியமான நாள் ஆகையால் இந்த பரிகாரத்தை இந்த நாளில் செய்வது அதீத பலன்களை நமக்கு பெற்று தரும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான ஒரே ஒரு பொருள் குங்குமப்பூ தான். இதன் விலை சற்று கூடுதல் என்றாலும் இது ஆன்மீகத்தில் அதிக அளவு பயன் படுகிறது. குங்குமப்பூவை பொறுத்த வரையில் உடல் ஆரோக்கியத்திற்கு சமையலுக்கு பயன்படும் என்பது பலரும் அறிந்த தகவல். இது ஆன்மீகத்திலும் குங்குமப் பூவிற்கு அதிக பங்கு உள்ளது.

இந்த பரிகாரத்தை மாசி மகம் அன்று காலை முதல் இரவுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அதற்கு முதலில் ஒரு சிறிய கண்ணாடி பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி ஒரே ஒரு குங்குமப்பூவை அதில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

மகாலட்சுமி தாயார் குலதெய்வம் உங்கள் இஷ்ட தெய்வம் அனைவரையும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த குங்குமப்பூ உள்ள பவுலை பூஜை அறையில் வைத்து விடுங்கள். அன்றைய நாள் முழுவதும் இது பூஜை அறையில் இருக்கட்டும்.

மறுநாள் இந்த பௌலில் உள்ள தண்ணீரை வீட்டை சுற்றி வெளியே தெளித்து விட்டு பூவை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக துடைத்து விட்டு பீரோவில் வைத்து விடுங்கள். இதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும் கடன் தொல்லை குறையும் என்று சொல்லப்படுகிறது. இது மிக மிக எளிய பரிகாரம் தான். ஆனால் இதன் பலன் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஏனெனில் இந்த குங்குமப்பூவை சுக்கிர தோஷம் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பயன்படுத்தும் போது தோஷ நிவர்த்தி ஆகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த குங்குமப்பூவிற்கு பணம் ஈர்ப்பு தன்மை அதிகம் உள்ளதாகவும் சுக்கிரவசியம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: துன்பங்கள் நீங்க பௌர்ணமி தின சிவ வழிபாடு

அத்தகைய சிறப்பம்சம் மிக்க குங்குமப்பூவை இந்த பரிகார முறைக்கு பயன்படுத்தி நம்முடைய கடன் தீர்ந்து பணவரவை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -