ஜோதிட ரீதியாக பனிரெண்டு ராசிகளில் சில ராசிகளை நெருப்பு ராசி என்றும், சிலதை நீர் ராசி என்றும், சிலதை நில ராசி என்றும், சிலதை காற்று ராசி என்றும் அழைப்பது உண்டு. உங்கள் ராசி எந்த வகையை சேர்ந்தது. அதற்கான குணம் என்ன? பார்ப்போம் வாருங்கள்.
நெருப்பு ராசிகள்:
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளையும் ‘நெருப்பு ராசிகள்’ என்று அழைப்பது உண்டு. இந்த ராசியை சேர்ந்தவர்கள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார்கள்.
நில ராசிகள்:
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகளையும் ‘நில ராசிகள்’ என்று அழைப்பது உண்டு. இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள்.
காற்று ராசிகள்:
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளையும் ‘காற்று ராசிகள்’ என்று அழைப்பது உண்டு. இந்த ராசியை சேர்ந்தவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்துகொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.
நீர் ராசிகள்:
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிகளையும் ‘நீர் ராசிகள்’ என்று ஜோதிடர்கள் அழைக்கிறார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.