இந்த 1 பொருள் இருந்தால் போதும் உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நிரந்தரமாக அகற்றி விடலாம்.

face-hair
- Advertisement -

இன்றைய பெண்கள் தங்களின் முகத்தை அழகுப்படுத்திக் கொள்ள அழகு நிலையம் சென்று பெருமளவிற்கு பணத்தை செலவு செய்கிறார்கள். ஆனால் என்ன தான் செலவு செய்து முக அழகை கூட்டி கொண்டாலும் சில பெண்களுக்கு முகத்திலும், தாடையிலும் ஆண்களுக்கு உள்ளதைப் போல மீசை முடிகள் இருக்கும். இன்னும் சிலருக்கு முகத்திலும் கூட சிறு சிறு முடிகள் இருக்கும். இதனை பூனை முடிகள் என்றும் கூறுவார்கள். இதை அகற்ற பார்லர்களுக்கு சென்றாலும் தற்காலிகமாக நீக்கி அல்லது அதை மறைக்க கிரீம் போன்றவற்றை உபயோகிப்பார்களே தவிர, நிரந்தரமாக இதற்கு அவர்களிடம் தீர்வு இருக்காது. இதற்காக பார்லர் சென்று அதிக பணம் செலவு செய்யாமல் வீட்டில் நாம் அன்றாட உபயோகப்படுத்தும் ஒரே ஒரு பொருளை மட்டும் வைத்து நிரந்தரமாக சரி செய்து விடலாம். அது என்ன பொருள் எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோமா. கோதுமை மாவு இந்த ஒரு பொருள் தான். உங்களின் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி உங்களை பளிச்சிட வைக்கும்.

கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1 டேபிள் ஸ்பூன், பன்னீர்- 1 டேபிள் ஸ்பூன், பேபி ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

கோதுமை மாவு, கஸ்தூரி மஞ்சள், இவை இரண்டையும் பன்னீருடன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இதில் சிறிதளவு பேபி ஆயில் கலந்து முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வேண்டும் . (தேங்காய் எண்ணெய் சேர்க்க கூடாது) இதை குளிப்பதற்கு பத்து நிமிடம் முன் உங்கள் முகத்தில் எங்கெல்லாம் முடிகள் உள்ளதோ அங்கு தேய்த்து விடுங்கள். அதன் பின் ஒரு காட்டன் துணி கொண்டு உங்கள் முகத்தில் முடி வளர்ந்திருக்கும் இடத்திற்கு எதிர் புறமாக, அதாவது உங்கள் முகத்தில் மேலிருந்து கீழாக முடி வளர்ந்து இருந்தால், நீங்கள் இந்த பேஸ்ட்டை கீழிருந்து மேலாக தேய்த்து துடைத்து எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த முடிகள் சீக்கிரமாக உங்கள் முகத்தில் இருந்து உதிர்ந்து விழும்.

இந்த முறையை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கி முகம் அழகுடன் பிரகாசிக்கும் அதிசயத்தை நீங்களே காண்பீர்கள்.

- Advertisement -

தேவையற்ற முடிகளை உடனடியாக அகற்றுவதற்கு கூடுமானவரை ரேசர் பயன்படுத்த வேண்டாம். ரேசர் பயன்படுத்தும் போது உங்களுடைய முடி திக்காக வளர்வது போல ஒரு உணர்வு ஏற்படும். லேசாக வளரக்கூடிய முடி கூட, அடர் கருப்பு நிறத்தில் வளர தொடங்கி விடும். முடியை நீக்கிய இடத்தில், ஒரே நாளில் முடி வளர்ச்சி தெரியும். முள் போல அந்த இடம் சொரசொரப்பாக குத்தும்.

கூடுமானவரை முகத்தில் இருக்கும் தேவையற்ற முடியை நீக்க த்ரெட்டிங் பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் வேக்சிங் செய்யலாம். சில பேருக்கு வேக்ஸிங் செய்வதன் மூலமாக கூட தோல் சீக்கிரம் சுருங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேவையற்ற முடிகளை உடனடியாக நீக்குவதற்கு கடையில் விற்கக்கூடிய கிரீம்களையும் அளவோடு தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி அதை சருமத்தில் போடுவதன் மூலம் எதிர்காலத்தில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -