இந்த ஒரு கிரீமை தினமும் இரவில் தடவி வர கொஞ்சம் நாட்களில் உங்கள் நிறம் பளபளப்பாக மாறிவிடும். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் மேனி பளிச்சிடும் நிறத்தில் இருக்கும்

face
- Advertisement -

தினமும் வெளியில் சென்று வருபவர்கள் தங்கள் சருமத்தை பாதுகாக்க பலவித க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இந்த க்ரீம்களில் உள்ள வேதியல் பொருட்களின் காரணமாக நமது சருமம் வறட்சி தன்மையுடனும், நிறம் குறைந்தும் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மற்ற கிரீம்களை உபயோகிக்கும் பொழுது விரைவிலேயே முகச் சுருக்கம், கருவளையம் போன்ற பிரச்சனைகளும் உண்டாகிறது. ஆனால் இதுபோன்ற கிரீம்களை பயன்படுத்தாமல் வெளியில் சென்றாலும் சூரிய ஒளியின் காரணமாக நமது சருமத்தில் பல பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்பும் உள்ளது. எனவே இது போன்ற கெமிக்கல் பொருட்களை மட்டும் பயன்படுத்தி உங்களை அழகுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து, இயற்கையான முறையில் உங்கள் சருமத்தைப் பாதுகாக்க வீட்டிலேயே இந்த நைட் க்ரீமை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் இரவில் தடவி வர நீங்களே வியந்து போகும் அளவிற்கு உங்கள் தோலின் நிறத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். கருவளையம் மறையும், முகச்சுருக்கம் இருந்த இடம் தெரியாமல் போகும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை மூக்கடலை – 2 ஸ்பூன், அரிசி – 2 ஸ்பூன், ஆலுவேரா ஜெல் – 2 ஸ்பூன், பாதாம் எண்ணெய் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இந்த கிரீம் செய்வதற்காக 2 ஸ்பூன் அரிசி மற்றும் இரண்டு ஸ்பூன் மூக்கடலையை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றில் தண்ணீர் ஊற்றி, தட்டு போட்டு மூடி, 12 மணி நேரம் ஊற வைத்துவிட வேண்டும்.

12 மணி நேரத்திற்குப் பிறகு தண்ணீரை வடிகட்டி, அரிசி மற்றும் கடலையை மற்றும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன்பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது இந்த பேஸ்ட் உள்ள பாத்திரத்தை வைத்து, 5 நிமிடம் சூடுபடுத்த வேண்டும். இவை நன்றாக சூடானதும் அடுப்பை அனைத்து விட்டு, இந்த க்ரீமை நன்றாக ஆற வைக்க வேண்டும். இவை ஆறிய பின்னர் இவற்றுடன் இரண்டு ஸ்பூன் அலோ வேரா ஜெல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இறுதியாக இவற்றுடன் ஒரு ஸ்பூன் பாதாம் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். ஒரு ஐந்து நிமிடம் இவை அனைத்தையும் ஒன்று சேர கலந்து விட்ட பிறகு, க்ரீமை ஒரு டப்பாவில் மாற்றி, இதனை மூடி போட்டு, மூடி வைக்க வேண்டும். பிறகு இரவு படுக்கும் முன்னர் இதிலிருந்து கொஞ்சம் க்ரீமை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்து, தடவி விட வேண்டும். பிறகு மறுநாள் காலை முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இந்த க்ரீமை பயன் படுத்தி வர உங்கள் சருமத்தில் உண்டாகும் மாற்றத்தை நிச்சயம் உங்களால் உணர முடியும்.

- Advertisement -