துர்கைக்கு மட்டும் ராகு காலத்தில் பூஜை ஏன் ?

dhurgail
- Advertisement -

துங்காதேவிக்கு மட்டும் ராகுகால பூஜை இருப்பது ஏன்? புராணங்களில் இது குறித்து ஏதேனும் கூறப்பட்டுள்ளதா? வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

dhurgai

கடவுள் திருவுருவங்களுக்கு நேரம் காலம் என்ற சம்பந்தத்தால் பொதுவாக சிறப்பு இருக்க வாய்ப்பில்லை. முழுமை பெற்ற கடவுளுக்கு எந்த நேரமும் பணிவிடை செய்யலாம். நேரம் காலம் எல்லாம் நம்மோடு சம்பந்தப்பட்டது.

- Advertisement -

ராகு காலத்தில் வேறு அலுவல்களுக்கு இடமில்லாததால், அது பணிவிடைக்கு உகந்ததாக மாறிவிடும். நம் மனம் மற்ற அலுவல்களின் தொடர்பு இல்லாமல் இருக்கும் வேளையில், கடவுள் வழிபாட்டில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். இறை உருவத்தை மட்டுமே மனத்தில் நிறுத்தி, அதில் லயித்து வழிபடும்போது அந்த வழிபாடு சிறப்பு பெறும். இந்த அடிப்படையில் ராகுகால வழிபாடும் சிறப்பு பெற்றுவிடுகிறது.

dhurgai

நமது விருப்பப்படி மற்ற அலுவல்களைத் துறந்து, இறையுருவத்தை தியானிக்க வேண்டும். இந்த வழக்கம் வளர்வதற்கு ராகுகால பூஜை அடித்தளமாக அமையும். அதற்காக, மற்ற அலுவல்கள் இல்லாத வேளையை மட்டுமே வழிபாட்டு வேளையாக நினைக்கக் கூடாது.

- Advertisement -

அலுவல்கள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு வழிபாட்டில் பிடிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனத்தை ஒருநிலையில் நிறுத்த இயலாதவர்கள், அதைப் பழக்கப்படுத்த ராகுகால பூஜையை ஏற்கலாம். மற்றபடி, ராகுகால பூஜை மட்டும்தான் செய்வேன், அதுமட்டுமே சிறப்பு என்று இருக்கக் கூடாது.

dhurgaiசமீபத்தில்தான் ராகுகால பூஜை பிரபலமாகி யிருக்கிறது. மக்களின் ஆதரவு பெருகியுள்ளதால், அவர்களை நம்பி அந்த பூஜை நிரந்தரமாக்கப் பட்டுள்ளது. கோயில்களில் நான்கு கால பூஜை, ஆறு கால பூஜை, பிரம்மோத்ஸவம், தீர்த்தவாரி போன்ற நடைமுறைகளில் எல்லாம் ராகுகால பூஜை இருக்காது.

‘தினமும் துர்கையை நினை’ என்றால், மனம் அதைச் செய்யாது. ராகுகாலம் துர்கைக்கு விசேஷம் என்றால் உடனே ஏற்கும். ஆகையால், பூஜையில் ஈடுபட வைப்பதற்காக ராகுகாலத்தை ஏற்கலாம். காலப்போக்கில் தெளிவுவந்த பிறகு ஆஸ்திகத்தில் பற்று ஏற்பட்டு, பணிவிடையில் விருப்பத்தை அடைய வழி பிறக்கும்.

dhurgai‘தேவ தார்ச்சனம்’ என்ற பெயரில் நித்தமும் வழிபடச் சொல்லும் சாஸ்திரம். அதில் ஐந்து இறையுருவங்கள் இருக்கும். அதற்கு பஞ்சாயதனம் என்று பெயர். ஆதித்யன், அம்பிகை, விஷ்ணு, கணபதி, ஈசன் ஆகியோரை வழிபடச் சொல்லும். இதுவே முழு வழிபாடாக மாறுவ தால், ராகுகால துர்கை, குளிகைகால பைரவர் என்று தேவையில்லாமல் மனம் குழம்பியிருப்பது தவறு. எந்த வேளையிலாவது ஏதாவதொரு இறையுருவை வழிபடுங்கள். விருப்பம் ஈடேறும்.

- Advertisement -
SOURCEvikatan