செல்வம் கொழிக்க பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான பொருள் என்ன? இது இருந்தா எல்லாமே தானாகவே கிடைக்குமாம்!

vinayagar-elephant
- Advertisement -

இந்த ஒரு பொருள் இக்காலத்தில் மட்டுமல்ல, மன்னாதி மன்னர்கள் காலத்திலும் ரொம்பவும் விரும்பி வாங்கப்பட்ட ஒரு பொருளாக இருக்கிறது. இப்பொருள் இருக்கும் இடங்களில் எல்லாம் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். பல்லாயிரம் பலம் மிக்க இந்த ஒரு பொருள் வீட்டில் இருப்பதால் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைகள் நீங்குவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய பொருள் பூஜை அறையில் இருப்பது எவ்வளவு நன்மைகளை கொடுக்கும்? அது என்ன பொருள் என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஹிந்து சமயத்தில் ரொம்பவும் போற்றப்படும் ஒரு உயிரினமாக இருக்கக்கூடிய இந்த பொருளுக்கு தெய்வாம்சம் நிறையவே உண்டு. மிகப்பெரிய அளவுகளில் இருந்து மிகச் சிறிய அளவுகள் வரை இருக்கக்கூடிய இந்த ஒரு பொருள் வாஸ்து குறைபாட்டை மட்டுமல்ல, வீட்டில் இருக்கும் துர் சக்திகளையும் விரட்டி அடிக்கக்கூடிய தன்மை கொண்டது. சில பொருட்களுக்கு இயல்பாகவே எதிர்மறையாற்றல்களை விரட்டியடிக்க கூடிய சக்தி உண்டு. அதில் இந்த ஒரு பொருள் ரொம்பவே சிறந்த பலன்களை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. இப்பொருள் இருக்கும் இடங்களில் கண்டிப்பாக எதிர்மறை ஆற்றல்கள் இருப்பதில்லை.

- Advertisement -

விநாயகரின் தலையை துண்டித்த ஈசனுக்கு வேறு தலை கிடைக்காததால் யானையின் தலையை விநாயகருக்கு பொருத்த வேண்டியதாயிற்று! அன்று முதல் யானைக்கு தனித்துவமான மகத்துவம் ஏற்பட்டு விட்டது. உருவத்தில் பெரியதாக இருந்தாலும், யானையின் குணம் என்னவோ மனிதர்களை காட்டிலும் உயர்ந்ததாக இருக்கிறது. கொட்டுவது தேளின் குணம், கொத்துவது பாம்பின் குணம் என்று கூறுவார்கள். ஆனால் ஐந்தறிவே இருந்தாலும் யானைக்கு மனிதனின் மீது தனி பிரியமும், மனிதனைப் போலவே துக்கப்பட்டு, அழவும் தெரியும்.

இந்த யானையின் உருவ சிலைகளை பெரிய பெரிய அரண்மனைகளில் நாம் இன்றும் காண முடிகிறது. மிகப்பெரிய கட்டடங்களில் கண்டிப்பாக யானையின் உருவம் பொறிக்கப்பட்ட சிலைகள் வடிப்பது உண்டு. யானை பொம்மை வீட்டில் இருந்தால் வாஸ்து குறைகள் நீங்கும். இதற்காக வீட்டிற்கு முன் பெரிய பெரிய யானை சிலைகளை வாங்கி வைப்பது உண்டு. அது போல யானை படங்கள் வரவேற்பறையில் பெரிதாக ஒட்டப்பட்டு இருந்தால் அந்த இடத்தில் எதிர்மறை சக்திகள் குறையும் என்று கூறுவார்கள்.

- Advertisement -

அத்தகைய மாபெரும் சக்தி வாய்ந்த இந்த யானை சிலை கஜலட்சுமி அம்சமாகவும் விளங்குகிறது. கஜம் எனப்படும் யானை கஜலட்சுமி தேவியின் வாகனமாக விளங்குகிறது. கஜலட்சுமி படத்தில் பார்த்தால் இருபுறமும் யானை தண்ணீர் ஊற்றுவது போல அமைக்க பெற்றிருக்கும். இந்த படம் ஒன்றை பீரோவில் ஒட்டி வைத்தால் பீரோ நிறைய பணமும், நகையும் சேரும் என்று ஒரு தாந்திரீக பரிகாரம் உண்டு.

அத்தகைய சக்தி வாய்ந்த இந்த கஜன் என்கிற யானை படத்தை வைத்திருப்பது எவ்வளவு பலன்களை கொடுக்குமோ, அதை விட யானை சிலைகளை பூஜை அறையில் மகாலட்சுமிக்கு அருகில் வைத்து வழிபடுவது ரொம்பவே விசேஷமானது. எனவே பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு முக்கிய பொருட்களில் யானை சிலையும் ஒன்று! உங்களால் முடிந்த அளவிற்கு மண் சிலை, பொன் சிலை என்று எந்த உலோகங்களிலும் சிலையை வாங்கி வைத்து உளமாற வழிபட்டு வாருங்கள், நன்மைகள் பெருகும்.

- Advertisement -