பணம் நிரந்தரமாக வீட்டில் தங்க ஒரு யோகம் வேணுங்க. பணக்கார யோகத்தை நமக்கு தரும் பழமையான, பவர்ஃபுல்லான யோகலட்சுமி பரிகாரம் உங்களுக்காக.

panam
- Advertisement -

நமக்கு நடக்கக்கூடிய எல்லா நல்லதுக்குமே ஒரு யோகம் தேவை. வரக்கூடிய நல்லது வீட்டு வாசல் வரைக்கும் வரும். ஆனால் நம் நிலை வாசலை தாண்டி நம் வீட்டிற்குள் வராமல் வாசப்படியில் இருந்து திரும்பிப் போய்விடும். காரணம் நமக்கு யோகம் இல்லை. அதிர்ஷ்டம் இல்லை. சம்பந்தமே இல்லாமல் ஒருத்தனுக்கு லாட்டரியில் ஒரு கோடி விழுந்தால் அது அவனுக்கு கிடைத்த யோகம். இந்த யோகத்தை, அதிர்ஷ்டத்தை நம் பக்கம் கவர்ந்து ஈர்ப்பது எப்படி என்பதைப் பற்றிய ஒரு ஆன்மீக ரீதியான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். என்னதான் மகாலட்சுமி நமக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், அந்த மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக இருக்க, யோகத்தை கொடுக்கக்கூடிய யோக லட்சுமியையும் நாம் நம் வசப்படுத்தி தானே ஆக வேண்டும்.

இதற்கு நமக்கு முக்கியமான தேவைப்படக்கூடிய ஒரு பொருள். சிவப்பு நிற பட்டுத் துணி. சிவப்பு நிறப் ஒரிஜினல் பட்டு துணியாக வாங்கிக்கொள்ளுங்கள். பட்டில் எத்தனையோ ரகங்கள் உள்ளது. ஒரிஜினல் அல்லாத பட்டுத்துணியை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் முழுப்பலனையும் நம்மால் அடைய முடியாது.

- Advertisement -

அந்த பட்டுத்துணியில் மருதாணி இலைகள், மருதாணி பூக்கள், இந்த இரண்டு பொருட்களையும் வைக்கவேண்டும். வாசத்திற்காக ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து, இந்த பட்டுத்துணியை சிறிய முடிச்சாக கட்டி உங்கள் வீட்டு பீரோவில் வைத்து கொள்ள வேண்டும். அல்லது நீங்கள் பணம் காசை எந்த இடத்தில் வைப்பீர்களோ அந்தப் பெட்டியில், இந்த சிறிய முடிச்சு வைக்க வேண்டும். மிக சிறிய அளவில் தயார் செய்து வைத்துக்கொண்டால் போதும்.

5 மருதாணி இலைகள், ஒரு கொத்து மருதாணிப் பூ, ஒரு சிறிய கட்டி பச்சை கற்பூரம். இந்த முடிச்சு இருக்கக்கூடிய இடத்தில் பணம் தங்கும் யோகம் கிடைக்கும். யோக லட்சுமியை யின் ஆசிர்வாதம் நமக்கு முழுமையாக கிடைக்கும். இதை யோகலட்சுமி என்பவள் கண்ணுக்குத் தெரியாமல் தேவதையாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. வருமானம் என்பது யாருக்குத்தான் இல்லை. தினம் தினம், மாதம் தோறும் வருமானம் நமக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அந்த வருமானம் வீண் விரயம் ஆகாமல் எல்லோரிடத்திலும் தங்குகிறதா. அதில் தானே பிரச்சனை.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எப்போது செய்வது. அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு இந்த முடிச்சை கட்டி, குலதெய்வத்தை மனதார வேண்டி பெட்டிக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இந்த முடிச்சு இருக்கக்கூடிய பணப்பெட்டியில் சுத்தமாக பணம் இல்லாமல் இருக்கக்கூடாது. 10 ரூபாய் அல்லது சில்லரை காசுகள் எப்போதும் இருக்க வேண்டும்.

இதெல்லாம் செய்து விட்டால் பணம் தங்குமா என்ற கேள்வியோடு பரிகாரத்தை யாரும் செய்ய வேண்டாம். இந்த பட்டுத்துணியை வைப்பதன் மூலம் நமக்கு நன்மை நடக்கும். வீட்டில் பணம் தங்குவதற்கான யோகம் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயமாக பலன் உண்டு. முடிச்சுக்கு உள்ளே இருக்கும் மருதாணி இலையும், பூவும் வாடினால் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை உள்ளே இருக்கும் பழைய பொருட்களை எடுத்து விட்டு மீண்டும் புதியதாக மருதாணி இலையையும் பூவையும் வைத்து முடிச்சு போட்டு வைத்துக்கொள்ளலாம்.

- Advertisement -