தமிழ் புத்தாண்டு துடங்கி, இந்த 5 ராசிக்காரர்களுக்கு இனி ராஜ யோகம் தான். தொட்டதெல்லாம் துளங்கப்போகிறது, நினைத்ததெல்லாம் நடக்கப்போகிறது.

rasi yogam
- Advertisement -

60 ஆண்டுகள் சுழற்சி பட்டியலில் 37 வது ஆண்டாக இருக்கிறது சோபகிருது ஆண்டு. இந்த சோபகிருது ஆண்டில் பல்வேறு ராசிக்காரர்களும் பல்வேறு பலாபலன்களை அடைந்தாலும் குறிப்பாக ஐந்து ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பற்பல யோக பலன்களை தரவிருக்கிறது. அந்த ஐந்து ராசிக்காரர்கள் யார் யார்? அவர்களுக்கு கிடைக்கப் போகும் வாய்ப்புகள் மற்றும் அதிர்ஷ்டங்கள் என்னென்ன போன்ற தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே மனரீதியான அழுத்தங்கள், தொழில் முன்னேற்றத்தில் தடை, எதை எடுத்தாலும் பிரச்சனை, இப்படியான சங்கடங்களை சந்தித்துக் கொண்டு இருந்திருப்பீர்கள். ஆனால் இந்த வருடம் உங்களுக்கு மிகச் சிறப்பான ஒரு வருடமாக இருக்கும். அதிலும் குறிப்பாக குரு பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல ஒரு மாற்றம் இருக்கும்.

- Advertisement -

ஏப்ரல் 22ஆம் தேதி நிகழக்கூடிய குரு பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு மாறப் போகிறார். இதன் காரணமாக பல மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழவிருக்கிறது. அந்த மாற்றங்கள் அத்தனையும் சுகமாற்றங்களாக இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும், இதுவரை தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும், பணப்பற்றாக்குறை நீங்கும், திருமண முயற்சிகள் கைகூடும், தொழில் தொடங்க வேண்டும் என்று இதுநாள் வரை ஆசைப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு இந்த ஆண்டு அமையும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கணவன் மனைவிக்குள் இருந்துவந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி ஒன்று சேர்ந்து வாழக்கூடிய காலமாக அமையும். இதுநாள் வரை உத்தியோக காரணமாக குடும்பத்தை விட்டு வெகு தூரம் இருந்தவர்கள் எல்லாம் குடும்பத்தினரோடு ஒன்று சேரக்கூடிய காலமாக இது அமையும். உத்தியோகம், தொழில், வியாபாரம் என அனைத்திலும் இந்த வருடம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். குரு காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதன் மூலமாகவும் கந்த சஷ்டி கவசத்தை துதிப்பதன் மூலமாகவும் நீங்கள் இன்னும் சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த ஆண்டு நினைத்ததை எல்லாம் சாதிக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். நீங்கள் அஷ்டம சனியால் இதுவரை சந்தித்த இன்னல்கள் அனைத்தும் விலகும். குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து உங்களுக்கு தொழில் ரீதியாகவும் வேறு பல வழிகளிலும் வெற்றி மேல் வெற்றியை தரப் போகிறார்.

அதே சமயம் வெகு நாட்களாக இடமாற்றத்திற்காக காத்திருந்தவர்களுக்கு இந்த வருடம் இடமாற்றம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. இந்த வருடம் அக்டோபர் மாதம் நிகழவிருக்கும் ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு தொழிலில் அபரிவிதமான முன்னேற்றங்களை சந்திப்பீர்கள். வெகு நாட்களாக குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு இந்த வருடம் குழந்தை பிறக்கும். ஆடை ஆபரணம் என அனைத்தும் நீங்கள் நினைத்த அளவுக்கு இந்த வருடம் சேரும்.

- Advertisement -

நீங்கள் உங்கள் வீட்டு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் சென்று நெய் தீபம் ஏற்றி அம்மனுக்கு ஒரு அர்ச்சனை செய்து வருவதன் மூலம் உங்களுக்கு ஏற்பட இருக்கும் சின்ன சின்ன தடங்கல்கள் கூட விலகி மிகப்பெரிய வெற்றியை காண முடியும்.

சிம்மம்
சிம்ம லக்னத்தில் தான் இந்த சித்திரை வருடப்பிறப்பானது இருக்கிறது. இதன் காரணமாக உங்களுக்கு இதுவரை பணவரவு ஏற்பட்டிருந்த தடைகள் அனைத்தும் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அடுத்தடுத்து மேற்பதவிகள் இந்த வருடம் கிடைக்கும். உங்களுடைய முன்னேற்றத்தைக் கண்டு பிறர் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த வருடம் உங்களுடைய முன்னேற்றமானது இருக்கும்.

பூர்விக சொத்தில் இதுவரை இருந்த தகராறுகள் அனைத்தும் விலகும். பிள்ளைகள் கல்யாணத்திற்கான முயற்சிகளை நீங்கள் தாராளமாக எடுக்கலாம். கல்யாண முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். உங்களின் உடன் பிறந்தவர்கள் மூலமும் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டு. உடலில் இதுவரை இருந்து வந்த உபாதைகள் படிப்படியாக குறைய தொடங்கும். கடன் கொடுத்தவர்கள் நீண்ட நாட்களாக வசூலிக்க முடியாமல் இருந்த கடன் பாக்கிகள் அனைத்தும் கைக்கு வந்து சேரும். பைரவரை வழிபடுவதன் மூலம் உங்களுக்கு இந்த ஆண்டு மேலும் பல ஏற்றங்களை ஏற்படுத்தும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த ஆண்டின் துவக்கமானது உங்களுக்கு சற்று சாதகமாக இல்லை என்றாலும் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும். இதுவரை நீங்கள் நடத்த முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தையும் நடத்தி முடிப்பீர்கள்.

விஐபி களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்டும் யோகம் பிறக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் நீங்கள் இதுவரை பெற்று வந்த லாபத்தை காட்டிலும் பன்மடங்கு அதிகமான லாபத்தை இந்த ஆண்டு பெறுவீர்கள். அதேபோல் உத்தியோகத்தில் இருப்பவர்களும் அந்த வேலையை விட்டுவிட்டு சுயதொழில் தொடங்கி அதில் சிறப்பான முன்னேற்றம் காணக்கூடிய யோகம் நிறைந்த காலமாக இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு ஏற்படும் சிறுசிறு தடைகளும் நீங்குவதற்காக வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம் அதேபோல் நவகிரகங்களில் குரு பகவானை வழிபடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இந்த வருட பிறப்பு என்பது மிகப்பெரிய யோகத்தை தரக்கூடியதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குரு பெயர்ச்சிக்கு பிறகு சிறப்பான பலன்களை பெற காத்திருக்கிறீர்கள். நீங்கள் இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அதற்கான சில அறிகுறிகளை இப்போதே நீங்கள் உணர ஆரம்பித்திருப்பீர்கள்.

பணவரவு நீங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக, சொல்லப்போனால் மிக நிலையில் இருக்கும். எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் விலகும். இதுவரை இருந்து வந்த கோர்ட் கேசுகளில் எல்லாம் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும். பிரைவேட் துறையில் வேலை செய்பவர்களுக்கும் அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கும் பதவி உயர்வு கிடைக்கும்.

உங்கள் இல்லத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. சொத்து, வீடு, வாகனம் வாங்குவது உள்ளிட்ட அனைத்தும் இந்த வருடம் உங்களுக்கு நிகழும். இந்த ஆண்டு உங்களுக்கு உண்மையில் நிறைவான ஒரு ஆண்டாகவே இருக்கும்

- Advertisement -