இந்த ஒரு பொருள் இருந்தால் போதும். டீ போடும் நேரத்தை விட குறைவான நேரத்தில் இந்த சுவையான ஸ்நாக்ஸை உடனே செய்து விடலாம்

masal-pori
- Advertisement -

மாலையில் குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் அவர்களை களைப்பு குறையவும், உற்சாகம் பிறக்கவும் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். அப்படி டீ குடிக்கும் நேரத்தில் அதனுடன் சேர்த்து சாப்பிட இந்த சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபியை மிகவும் சுலபமாக செய்து கொடுக்கலாம். அதற்கு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு பாக்கெட் பொறி இருந்தால் மட்டும் போதும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிகவும் சுவையான மசாலா பொறி போன்று செய்து கொடுக்க முடியும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த மசாலா பொறியை வீட்டிலேயே எப்படி மிகவும் சுவையாக செய்ய முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

children-snacks

தேவையான பொருட்கள்:
பொரி – ஒரு பாக்கெட், வெங்காயம் – 1, தக்காளி – 1, கடலை மாவு – 2 ஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கரம் மசாலா தூள் – கால் ஸ்பூன், எலுமிச்சை பழம் – பாதி அளவு, பச்சை மிளகாய் – 1, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு பாக்கெட் பொரியை தண்ணீரில் சேர்க்க வேண்டும். பொரி முழுவதுமாக தண்ணீரில் ஊறி விடாமல், லேசாக நனைந்தவுடன் கைகளால் பிழிந்தெடுத்து பொரியை வேறு ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

pori

பிறகு வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி என்னை நன்றாக காய்ந்ததும் கடுகு அரை ஸ்பூன், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு தண்ணீரில் நனைத்து வைத்த பொரியை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பிறகு அரை ஸ்பூன் எலுமிச்சை பழத்தை பிழிந்து கொண்டு அதன் சாறை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக வறுத்து வைத்துள்ள கடலை மாவை இவற்றின் தூவி விட்டு கரண்டியை வைத்து நன்றாக கிளறி விட்டு, ஒரு கொத்து கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மசாலா பொரி தயாராகிவிட்டது.

- Advertisement -