காரிய தடை விலக பிள்ளையார் வழிபாடு

pillaiyar5
- Advertisement -

மனிதர்களுக்கு காரிய தடை வருவது என்பது இயல்புதான். ஒரு நல்ல விஷயத்துக்காக முயற்சி செய்கின்றோம். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது எனும் பட்சத்தில், மீண்டும் மீண்டும் அந்த விஷயத்தை முயற்சி செய்து வெற்றி காணக்கூடிய மன பலம் மனிதர்களுக்கு இருக்க வேண்டும்.

ஒரு சில சமயங்களில், ஒரு சில விஷயங்களில் எவ்வளவு தான் முயற்சி எடுத்தாலும், ஜெயிக்கவே முடியாது. மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டே இருப்போம். அந்த காரியல் தடை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். அதிலிருந்து விடுபட என்ன செய்வது. காரிய தடையை உடைப்பதற்கு செய்ய வேண்டிய அருமையான ஒரு விநாயகர் வழிபாடு இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

காரிய தடை விலக விநாயகர் பரிகாரம்

தடைகளை உடைக்கக்கூடிய கடவுள் என்றாலே அது விநாயகர் தான். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. எல்லோர் வீட்டு பக்கத்திலும் பிள்ளையார் கோவில் இருக்கும். அந்த கோவிலுக்கு 16 வாரம் திங்கட்கிழமை தொடர்ந்து இந்த விளக்கை ஏற்ற வேண்டும். சாதாரணமாக இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி கிழக்கு நோக்கியவாறு இந்த விளக்கு எரிய வேண்டும்.

இந்த விளக்கை வடகிழக்கு மூலை அல்லது தென்மேற்கு மூலை இந்த இரண்டு திசைகளில் ஏதாவது ஒரு திசையில் வைத்து, கிழக்கு பார்த்தபடி ஏற்றி வையுங்கள். உங்களுக்கு இந்த வடகிழக்கு தென்மேற்கு எதுவுமே தெரியவில்லை என்றால் பரவாயில்லை. தீபச்சுடர் மட்டும் கிழக்கு பார்த்தவாறு எரியட்டும். 16 வாரம் திங்கட்கிழமை பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு பிள்ளையாரை 16 முறை வளம் வந்து, உங்களுடைய காரியத்தடை விலக வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தால், நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

விளக்கு போடும்போதே நடக்காத காரியத்தை நடத்தி காட்டுவதற்கு நீங்கள் முயற்சிகள் செய்யலாம். அந்த நாளில் மட்டும் பிள்ளையாருக்கு ஒரு சின்ன டப்பாவில் சுத்தமான நெய், 1 முழு தேங்காயை வாங்கி அர்ச்சகர் இடம் கொடுத்து விட்டு செல்லுங்கள். நீங்கள் முயற்சி செய்யும் விஷயத்தில் வெற்றி காண்பீர்கள். தேங்காயை உடைத்து அர்ச்சனை செய்ய சொல்லவில்லை.

முழு தேங்காயை அர்ச்சகரிடம் தானமாக கொடுத்து விட வேண்டும். ஒரு 50 ml நெய்யாக இருந்தாலும் பரவாயில்லை. சுத்தமான நெய்யாக வாங்கி அர்ச்சகர்ரிடம் தானமாக கொடுத்து விட வேண்டும். இப்படி செய்துவிட்டு நீங்கள் ஒரு காரியத்தை முயற்சி சென்றால் அந்த காரியம் 100% கிடையாது, 200% நிச்சயம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

- Advertisement -

இந்த இரண்டு பொருட்களை உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு வாங்கி தானம் கொடுத்துக் கொண்டே இருங்கள். இது உங்களுடைய காரிய தடையை விளக்குவதோடு சேர்த்து, உங்களுடைய தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் இருக்கக்கூடிய தடையை விலக்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக தமிழ் வருடத்தின் முதல் சோமவார திங்கட்கிழமையில் வாங்க வேண்டிய பொருள்

நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வியாபாரம் லாபமாக மாறும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள், முதல் பெரிய தொழில் செய்பவர்கள் வரை இந்த எளிமையான பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -