செல்வம் பெருக தமிழ் வருடத்தின் முதல் சோமவார திங்கட்கிழமையில் வாங்க வேண்டிய பொருள்

sivan lingam
- Advertisement -

நாம் வீட்டிற்கு வாங்கும் ஒவ்வொரு பொருட்களிலும் கூட யோகங்களும், ராசிகளும் நிறைந்து இருக்கிறது. ஆகையால் தான் சில பொருட்களை சில நாட்களில் வாங்குவது அதிர்ஷ்டகரமாக கருதப்படுகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமையில் உப்பு, மங்கள பொருட்கள் வாங்குவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.

அது போல நாளைய தினம புது வருடத்தின் முதல் சோமவார திங்கட்கிழமை இந்த நாளில் இரண்டு பொருட்களை நாம் வீட்டிற்கு வாங்கி வந்து பயன்படுத்தி வேண்டும். இதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களும் யோகங்களும் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் பெற வாங்க வேண்டிய பொருட்கள்
நாளைய தினம் இந்த வருடத்தின் முதல் சோமவார திங்கட்கிழமை. சிவபெருமானுக்கு மிகவும் உகந்த தினம் என்றால் அது திங்கட்கிழமை தான். ஆகையால் அன்றைய தினம் சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. நாளைய தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபடுவது அதை விட சிறப்பு.

அதே போல் நாளைய தினத்தில் வீட்டில் சிவலிங்கம் பானலிங்கம் போன்ற எந்த விதமான லிங்கம் வைத்திருந்தாலும் சரி அல்லது வலம்புரி சங்கு போன்ற தெய்வீக பொருட்கள் வைத்திருந்தாலும் அவற்றிற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த எலுமிச்சை பழ சாறில் தான் செய்ய வேண்டும். இந்த அபிஷேகம் உங்களுடைய வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இப்போது நாளைய தினம் வாங்க வேண்டிய இரண்டு பொருட்களை பற்றி பார்ப்போம். நெய் மற்றும் தேன் தான் நாளைய தினத்தில் வாங்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களை வாங்குவதோடு மட்டும் இன்றி இவற்றை நாளைய தினம் பயன்படுத்தவும் வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து ஏதாவது ஒரு வகையில் உணவாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

நாளைய தினம் இந்த பொருட்களை வாங்குவதன் மூலமும் இதை நாம் பயன்படுத்துவது மூலமும் இந்த ஆண்டு நமக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய வழிபாட்டு முறைகள் ஒவ்வொரு தெய்வங்களுக்கும், கிரகங்களுக்கும் பிடித்தமான பொருட்கள் என சில உள்ளது. அவை அனைத்தும் பெரும்பாலும் நம் சமையலுக்கு பயன்படுத்துவதாக தான் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட நந்தி பகவான் வழிபாடு

அந்த வகையில் இந்த இரண்டு பொருட்களும் செல்வத்துக்கு அதிபதி தெய்வங்களுக்கு உகந்த பொருள். இதன் மூலம் நம் வாழ்வில் பல நல்ல விஷயங்கள் நடக்க உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. இந்த முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த எளிய பரிகாரத்தினை செய்து பலன் அடையலாம் என்றர இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -