27 நட்சத்திரக்காரர்களும் விநாயகரை எப்படி அலங்கரித்து வழிபட்டால் யோக பலன் கிடைக்கும்?

vinayagar-astro
- Advertisement -

விநாயகருடைய பூரண அருள் பெற 27 நட்சத்திரக்காரர்களும் அவரை விசேஷமான அலங்காரம் செய்து வழிபடலாம். உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய அலங்காரம் செய்யும் பொழுது அதற்குரிய பலன்களும் விசேஷமானதாக அமையும் என்கிறது ஆன்மீக நூல்கள். அந்த வகையில் உங்கள் நட்சத்திரத்திற்கு நீங்கள் விநாயகரை எப்படி அலங்கரித்து வழிபட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

vinayagar

அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக் கலசம் வைத்து, தங்க கிரீடம் சூட்டி வழிபட்டால் சகல யோகங்களும் வரும்.

- Advertisement -

பரணி
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகருக்கு சந்தன அலங்காரம் செய்து, தங்க கிரீடம் சூட்டி வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

stars

கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு தங்க கிரீடம் சூட்டி, வெள்ளி கவசம் அணிவித்து வழிபட்டால் அனைத்து பாக்கியங்களும் உண்டாகும்.

- Advertisement -

ரோகினி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகருக்கு சந்தன அலங்காரம் செய்து, தங்க கிரீடம் சூட்டி வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் உங்கள் வீட்டில் நிறைந்து காணப்படும்.

vinayagar1

மிருகசீரிஷம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில்பிறந்த நீங்கள் விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, கஸ்தூரி மஞ்சள் கொண்டு அலங்காரம் செய்து வழிபட வேண்டும். இதனால் அனைத்து பாகங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

- Advertisement -

திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, தங்க கிரீடம் சூட்டி அலங்காரம் செய்து வழிபட்டால் எல்லா துன்பங்களும் நீங்கி, பெரும் புண்ணியம் சேரும்.

புனர்பூசம்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, சந்தன அலங்காரம் செய்து வழிபட எல்லா பாக்கியங்களும் உண்டாகும்.

arugampul-vinayagar

பூசம்
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப்பெருமானுக்கு அன்னம் வைத்து, தங்க கிரீடம் சூட்டி, கஸ்தூரி மஞ்சள் கொண்டு அலங்காரம் செய்து வழிபட்டு வந்தால் அனுகூலமான பலன்களை காணலாம்.

உத்திரம்
உத்திர நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, திருநீறு அலங்காரம் செய்து வழிபட்டு வந்தால் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.

ஹஸ்தம்
அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, சந்தன அலங்காரம் செய்து வர எல்லா துன்பங்களும் தீரும்.

pillaiyar-manai

சித்திரை
சித்திரை நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக் கவசம் அணிவித்து வழிபட வேண்டும் இதனால் நிறைய செல்வங்களும், தாராள தன வரவு உண்டாகும்.

சுவாதி
சுவாதி நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம் புல் மாலை சாற்றி தங்க கிரீடம் அணிவித்து வழிபட்டு வர நல்லது நடக்கும்.

விசாகம்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு திருநீரு கொண்டு அலங்காரம் செய்து வழிபட்டு வர வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கும்.

vibuthi-pillaiyar-viboothi

அனுஷம்
அனுஷ நட்சத்திரக்காரர்கள் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, ரோஜாப்பூ மாலை போட்டு, தங்க கிரீடம் அணிவித்து கஸ்தூரி மஞ்சள் கொண்டு அலங்காரம் செய்து வழிபட்டு வர எல்லா பாக்கியங்களும் உண்டாகும்.

கேட்டை
கேட்டை நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது அருகம்புல் மாலை சாற்றி, திருநீறு அலங்காரம் செய்து, தங்க கிரீடம் சூட்டி வழிபட்டு வர எல்லா பேரும் உண்டாகும்.

மூலம்
மூல நட்சத்திரக்காரர்கள் அருகே விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது அருகம்புல் மாலை சாற்றி சந்தன அலங்காரம் செய்து வழிபாடு செய்ய அதிர்ஷ்ட யோகங்கள் வரும்.

manjal-pillaiyar1

பூராடம்
பூராடம் நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானை வழங்கும் பொழுது அருகம்புல் மாலை சாற்றி, திருநீறு அலங்காரம் செய்து, கிரீடம் சூட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்ய அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

உத்திராடம்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானை அருகம்புல் மாலை மட்டும் சாற்றி வழிபட்டு வந்தால் சகல யோகங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

திருவோணம்
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, ஸ்வர்ணம் வைத்து வழிபாடு செய்ய மேலும் மேலும் செல்வங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

pillaiyar1

அவிட்டம்
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது வெள்ளி கவசம் அணிவித்து, மலர் அலங்காரம் செய்து வழிபட சிறப்பான பலன்கள் உண்டாகும்.

சதயம்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது வெள்ளிக்கவசம் அணிவித்து குங்கும அலங்காரங்கள் செய்து வழிபட எல்லா வளங்களும் உண்டாகும்.

பூரட்டாதி
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது அருகம்புல் மாலை சாற்றி, அன்னம் வைத்து, தங்க கிரீடம் சூட்டி வழிபட்டு வர எல்லா செல்வங்களும் நிறைந்து காணப்படும் யோகம் உண்டாகும்.

paneer-rose-plant

உத்திரட்டாதி
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகப் பெருமானுக்கு ஒரு ரோஜா மாலை போட்டு அலங்காரம் செய்து வழிபட்டு வந்தாலே எல்லா வளங்களும் நிறைந்து காணப்படும்.

ரேவதி
ரேவதி நட்சத்திரக்காரர்கள் விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது அருகம்புல் மாலை சாற்றி, மலர் அலங்காரம் செய்து, வெள்ளி கவசம் அணிவித்து வழிபட்டு வந்தால் பதினாறு செல்வங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.

- Advertisement -