கோவிலுக்கு சென்று வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள். தீராத கஷ்டம் அடியோடு அழிந்து விடும்.

Amman-Manthiram
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வாழ்வில் கட்டாயமாக தீர்க்க முடியாத கஷ்டம் என்ற ஒன்று நிச்சயம் இருக்கத்தான் செய்யும். வெளியில் பார்க்கும்போது எப்போதும் சிரித்துக் கொண்டு சந்தோஷமாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கும் சில கஷ்டங்கள் மறைந்து தான் இருக்கும். கஷ்டம் இல்லாத மனிதர்களை, கஷ்டமில்லாத உயிரினத்தை இந்த உலகத்தில் தேடினாலும் நிச்சயமாக கண்டுபிடிக்க முடியாது. நமக்கு ஏதோ ஒரு வகையில் கர்மா இருக்கின்றது. அதனால் தான் கருவறையில் உயிரினமாக உருவாகி இந்த பூமியில் பிறப்பெடுகின்றோம். ஆகவே அந்த கர்மாவை கழிப்பதற்கு உண்டான கஷ்டத்தை நாம் அனுபவத்தே ஆக வேண்டும். அது விதி.

ஆனால் கஷ்டங்களில் இருந்து வரக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள நமக்கு சில பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அப்படி ஒரு பரிகார முறையைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை பரிகாரம் என்றும் சொல்லலாம். அப்படி இல்லை என்றால் வழிபாடு என்றும் சொல்லலாம். நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு தீராத கஷ்டமானது நிச்சயம் தீரும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டின் அருகில் எந்த அம்மன் கோவில் இருந்தாலும், அந்த அம்மன் கோவிலில் இந்த வழிபாட்டினை மேற்கொள்ளலாம். இதற்கு 27 மண் அகல் தீபங்கள் நமக்கு தேவைப்படும். 27 மண் அகல் விளக்குகளை புதியதாக கடையில் இருந்து வாங்கி சுத்தமாக தண்ணீரில் போட்டு ஊற வைத்து கழுவி காயவைத்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தயார் செய்து கொள்ளுங்கள்.

இதை அம்மன் கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பெரும்பாலும் அம்மன் கோவிலில் கட்டாயமாக திரிசூலம் இருக்கும் அல்லவா. அந்த திரிசூலத்திற்கு முன்பு 27 விளக்குகளையும் அடுக்கி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து மனதார அம்பாளை பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் தீராத கஷ்டத்திற்கு சீக்கிரம் ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று.

- Advertisement -

ஒரே ஒரு முறை இந்த வழிபாட்டை மனநிறைவோடு நம்பிக்கையோடு செய்தால் போதும். அதை வெள்ளிக்கிழமை நாளாக பார்த்து தேர்ந்தெடுத்து செய்யுங்கள். நல்ல நாளாக ஒரு நாளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்த பூ பழம் தேங்காய் வெற்றிலை பாக்கு இவைகளை அம்பாளுக்காக உங்கள் கைகளால் எடுத்துச் செல்லுங்கள் போதும்.

நாம் பிறந்த நட்சத்திரம் என்பது இந்த 27 நட்சத்திரத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரமாக தான் இருக்கும். நட்சத்திரம் தெரிந்தவர்கள், நட்சத்திரம் தெரியாதவர்கள் எல்லோரும் எல்லா நட்சத்திர தேவதைகளையும் மனதார நினைத்து இந்த விளக்கை ஏற்றும் போது நிச்சயமாக கஷ்டங்கள் குறையும் என்பது நம்பிக்கை.

புதியதாக மண் அகல் விளக்கை வாங்கும் போது சனிக்கிழமைகளில் வாங்காதீங்க. மற்ற கிழமைகளில் வாங்கிக் கொள்ளலாம் தவறு கிடையாது. சனிக்கிழமை எந்த மண்பாண்டத்தையும் கடையில் இருந்து வாங்க கூடாது என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை பெற மேல் சொன்ன பரிகாரங்களை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -