அட இது செம ஐடியாவா இருக்கே! முடி கருப்பாக வளரவும் அடர்த்தியாக வளரவும், நீளமாக வளரவும் ஒரே ஒரு பேக் போதுமா? ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க போரோம்.

hair11
- Advertisement -

தலைமுடி கருப்பாக வளர வேண்டும். அடர்த்தியாக வளர வேண்டும். முடி கொட்டுவதும் நிற்க வேண்டும். நரை முடி இருந்தால் அதுவும் கருப்பாக மாற வேண்டும். இத்தனை விதமான நன்மைகளும் ஒரே ஹேர் பேக்கில் கிடைத்தால் எப்படி இருக்கும். சூப்பரா இருக்குமே. இந்த ஒரு ஹேர் பேக்கை தொடர்ந்து போட்டு வந்தாலே தலை முடி பற்றிய பல பிரச்சனைகள் நமக்கு இருக்காது. எல்லா பிரச்சனைக்கும் ஒட்டுமொத்த தீர்வை கொடுக்கும் 3 இன் 1 ஹேர் பேக்கை பற்றி உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கா. இதோ அழகு குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

3 in 1 ஒன் ஹேர் பேக்:
முதலில் ஒரு சிறிய பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஹென்னா பொடி – 1 கப், நெல்லிக்காய் பொடி – 1/4 கப் சீயக்காய் பொடி 1/4 கப், சோப் நட் பொடி(பூந்திக்கொட்டை பொடி) – 1/4 கப், நுறை வருவதற்காக பயன்படுத்தக்கூடிய இந்த பூந்திக்கொட்டை, பொடியாகவே இப்போது நமக்கு கிடைக்கிறது. அதை வாங்கி இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மேலே சொன்ன அளவுகளில் நான்கு பொடியையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் போட்டு, கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, இரண்டு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, வெந்தயம் – 1 ஸ்பூன், கிராம்பு – 7, டீத்தூள் – 1 டேபிள் ஸ்பூன், போட்டு இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். இரண்டு டம்ளர் தண்ணீர், 1 1/2 டம்ளர் அளவு வரும் வரை சுண்டட்டும். பிறகு இதை வடிகட்டிக் கொள்ளவும்.

இந்த தண்ணீரை ஊற்றி நாம் ஒன்றாக கலந்து வைத்திருக்கும் நான்கு பொடியையும் கட்டிகள் இல்லாமல் கலந்து ஒரு மூடி போட்டு வைக்க வேண்டும். மறுநாள் காலை தலைக்கு குளிக்க வேண்டும் என்றால், இரவு இந்த பேக்கை நீங்கள் தயார் செய்து வைத்து விடுங்கள். மறுநாள் காலை எழுந்து பார்த்தால் இந்த பேக் கருப்பு நிறத்தில் வந்திருக்கும். (நாம் கலந்து வைத்த இந்த பேக் 8 மணி நேரம் நிச்சயம் ஊற வேண்டும். பிறகு தான் தலையில் அப்ளை செய்ய வேண்டும்.)

- Advertisement -

காலையில், இந்த பேக்கை எடுத்து இதோடு 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும். பிறகு இதை தலையில் அப்ளை செய்யலாம். முதலில் ஸ்க்ல்பில் பேக்கை நன்றாக அப்ளை செய்து விடுங்கள். பிறகு நுனி முடி வரை அப்ளை செய்து விடுங்கள். தலையை கொண்டை கட்டி ஒரு கவர் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கழித்து மைல்டான  ஷாம்பு போட்டு தலைமுடியை அலசி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அத்திப்பழம் உடலுக்கு மட்டும் அல்ல தலைமுடிக்கும் பலம் கொடுக்கிறது தெரியுமா? பலம் இல்லாத உங்கள் கூந்தலை பலம் பெற செய்ய அத்திப்பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

அவ்வளவுதான். சூப்பரான கருகரு முடி உங்களுக்கு கிடைத்திருக்கும். இரண்டு வாரத்திற்கு இந்த கருப்பு அப்படியே உங்களுடைய தலை முடியில் இருக்கும். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த ஹேர் பேக்கை போட்டால் போதும்.

- Advertisement -