வேண்டுதல் நிறைவேற பிரம்ம முகூர்த்த வழிபாடு

deepam
- Advertisement -

பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும், ஒவ்வொரு பலன் இருக்கிறது. அந்த வரிசையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தொடர்ந்து நீங்கள் 48 நாள் ஒரே ஒரு வேண்டுதலை நினைத்து விளக்கு ஏற்றினால், அந்த விஷயம் அப்படியே நடக்கும் என்பது நம்பிக்கை மட்டும் அல்ல, இது உண்மையும் கூட. நிறைய பேருக்கு கை மேல் பலன் கொடுத்த பிரம்ம முகூர்த்த தீப வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

அதிலும் சிறப்பான பிரம்ம முகூர்த்த தீப வழிபாடு இது. நீங்கள் விளக்கு ஏற்றும் எண்ணெயில் இந்த 1 பொருளை மட்டும் போட்டு விளக்கு ஏற்றி பாருங்க. 48 வது நாள் முடியும் போது, நீங்கள் எதை நினைத்து விளக்கு ஏற்ற தொடங்கினீர்களோ, அது நிச்சயம் நடக்கும். திருமண தடை விலக, நல்ல வேலை கிடைக்க, கடன் சுமை குறைய, நல்ல கணவன் அமைய, நல்ல மனைவி அமைய, குழந்தை பாக்கியம் பெற, இப்படி என்ன வேண்டுதல் உங்கள் மனதில் இருந்தாலும் அதை நினைத்து இந்த விளக்கை ஏற்ற தொடங்கலாம்.

- Advertisement -

நினைத்தது நடக்க பிரம்ம முகூர்த்த வழிபாடு

இதற்கு கட்டாயம் நீங்கள் மண் அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும். இந்த பரிகாரத்திற்கு  நமக்கு முக்கியமாக தேவைப்படும் பொருள் கருப்பட்டி. பெரும்பாலும் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் இது கிடைக்கும். மலிவானதாக தேடி வாங்காமல், கொஞ்சம் சுத்தமான கலப்படம் இல்லாத கருப்பட்டியாக வாங்கிக்கோங்க. அதை தூள் செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் அதிகாலை வேலை 4:00 மணியிலிருந்து 5:00 மணி வரை இந்த விளக்கு உங்கள் வீட்டில் எரிய வேண்டும். கலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். பூஜையறையில் ஒரு மண் அகல் விளக்கை வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, 2 சிட்டிகை கருப்பட்டி தூள் போட்டு பஞ்சு திரி போட்டு, விளக்கு ஏற்றனும். தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த விளக்கு ஏற்றப்பட வேண்டும்.

- Advertisement -

ஒரு மணி நேரம் அந்த விளக்கு எரிந்தால் போதும். அந்த விளக்கு எரியும் தருவாயில் அந்த விளக்கிற்கு முன்பு அமர்ந்து, குலதெய்வத்தை நினைத்து, உங்கள் வேண்டுதல் பலிக்க நம்பிக்கையோடு பிரார்த்தனை வைக்கணும். தினமும் அந்த விளக்கை ஒரு துணி கொண்டு சுத்தம் செய்துவிட்டு, அதே விளக்கில் தினமும் புதுசாக நல்லெண்ணெய், கருப்பட்டி தூள், புதுசாக திரி போட்டு விளக்கு ஏற்றலாம். 48 நாளும் புது திரி தான் போடணும்.

விளக்கை ஒரு துணி கொண்டு துடைத்து சுத்தம் செய்துவிட்டு தான் மீண்டும் விளக்கு ஏற்றனும் என்பது குறிப்பிடத்தக்கது. எளிமையான வழிபாடு தான் ஆனால் இந்த வழிபாடு ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்தது. 48 நாள் விடாமல் இந்த வழிபாட்டை மேற்கொண்டீர்கள் என்றால் இந்த சக்தி உங்களுக்கே தெரியும். ஒரே ஒரு கோரிக்கையை மனதில் நினைத்து 48 நாளும் வழிபாட்டை தொடரவும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க தீபம்

பெண்களால் 48 நாட்கள் இந்த வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்ள முடியாது. இடையில் வரும் மாதவிடாய் நாட்களை தவிர்த்து விட்டு 48 நாட்களை நீங்கள் கணக்கு வைத்துக் கொள்ளலாம். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலோடு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -